பட்டுக்கோட்டை, ஜன-02
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசை கண்டித்து பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பட்டத்திற்கு திமுக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் கா. அண்ணாதுரை தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும், பயிர் பாதிப்பால் மரணமடைந்த விவசாயிகளுக்கு ரூ 10 லட்சம் இழப்பீடு தொகை வழங்குவது, கரும்பு டன்னுக்கு ரூ 4 ஆயிரம் வழங்குவது, ஏரி, குளங்கள், ஆறுகளை தூர் வாறுவது, மணல் திருட்டை தடுப்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியிறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டுக்கோட்டை கோட்டத்திற்கு உட்பட்ட பேராவூரணி, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதிராம்பட்டினதிலிருந்து திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம.குணசேகரன், முன்னாள் அதிரை சேர்மன் எஸ்.எச் அஸ்லம், ஒன்றிய பிரதிநிதிகள் அப்துல் ஹலீம், முல்லை மதி, இன்ப நாதன், பொருளாளர் கோடி முதலி, வார்டு பொறுப்பாளர்கள் நிஜாமுதீன், சைஃபுதீன், முத்து, நாகராஜ் மற்றும் திமுக ஆதரவாளர்கள் அமீன், ஜாகிர், அசரப், தாரிக், உமர், அனஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசை கண்டித்து பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பட்டத்திற்கு திமுக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் கா. அண்ணாதுரை தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும், பயிர் பாதிப்பால் மரணமடைந்த விவசாயிகளுக்கு ரூ 10 லட்சம் இழப்பீடு தொகை வழங்குவது, கரும்பு டன்னுக்கு ரூ 4 ஆயிரம் வழங்குவது, ஏரி, குளங்கள், ஆறுகளை தூர் வாறுவது, மணல் திருட்டை தடுப்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியிறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டுக்கோட்டை கோட்டத்திற்கு உட்பட்ட பேராவூரணி, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதிராம்பட்டினதிலிருந்து திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம.குணசேகரன், முன்னாள் அதிரை சேர்மன் எஸ்.எச் அஸ்லம், ஒன்றிய பிரதிநிதிகள் அப்துல் ஹலீம், முல்லை மதி, இன்ப நாதன், பொருளாளர் கோடி முதலி, வார்டு பொறுப்பாளர்கள் நிஜாமுதீன், சைஃபுதீன், முத்து, நாகராஜ் மற்றும் திமுக ஆதரவாளர்கள் அமீன், ஜாகிர், அசரப், தாரிக், உமர், அனஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



















