அதிராம்பட்டினம், மே 02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பிலால் நகர் பள்ளிவாசல் வளாகத்தில் மக்தப் பள்ளி மாணவர்களின் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, மக்தப் அதிராம்பட்டினம் சென்டர் பொறுப்பாளர் முஃப்தி அப்துல் ஹாதி பாகவி தலைமை வகித்து, 'பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோரின் கடமை' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
விழாவில், பள்ளி மக்தப் ஆசிரியர்கள் ஹாபிழ் அபூபக்கர், மவ்லவி தன்வீர், சாபீர் ஆகியோர் கலந்துகொண்டு மார்க்க அறிவுத்திறன் போட்டிகளை நடத்தினர். இதில், மக்தப் மதரசா மாணவர்கள் 62 பேர் கலந்துகொண்டனர். இதில், 28 பேர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், ஒழுக்கம், தொழுகை, வருகைப் பதிவேடு, சீருடை அணிவித்தல் போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிலால் நகர் ஜமாஅத் தலைவர் முகமது முகைதீன், அதிரை அமீன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.
பிலால் நகர் பள்ளிவாசல் வளாகத்தில் கடந்த ஓர் ஆண்டாக தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை மாணவர்களுக்கான மக்தப் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதில், இப்பகுதியை சேர்ந்த 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பிலால் நகர் பள்ளிவாசல் வளாகத்தில் மக்தப் பள்ளி மாணவர்களின் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, மக்தப் அதிராம்பட்டினம் சென்டர் பொறுப்பாளர் முஃப்தி அப்துல் ஹாதி பாகவி தலைமை வகித்து, 'பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோரின் கடமை' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
விழாவில், பள்ளி மக்தப் ஆசிரியர்கள் ஹாபிழ் அபூபக்கர், மவ்லவி தன்வீர், சாபீர் ஆகியோர் கலந்துகொண்டு மார்க்க அறிவுத்திறன் போட்டிகளை நடத்தினர். இதில், மக்தப் மதரசா மாணவர்கள் 62 பேர் கலந்துகொண்டனர். இதில், 28 பேர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், ஒழுக்கம், தொழுகை, வருகைப் பதிவேடு, சீருடை அணிவித்தல் போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிலால் நகர் ஜமாஅத் தலைவர் முகமது முகைதீன், அதிரை அமீன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.
பிலால் நகர் பள்ளிவாசல் வளாகத்தில் கடந்த ஓர் ஆண்டாக தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை மாணவர்களுக்கான மக்தப் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதில், இப்பகுதியை சேர்ந்த 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைகின்றனர்.
























































