.

Pages

Tuesday, July 2, 2019

புனித மக்காவில் நுழைய ஆன்லைன் பெர்மிட்டுகள் வழங்கும் பணி தொடக்கம்!

அதிரை நியூஸ்: ஜூலை 02
ஹஜ் செய்திகள்: ஹஜ் மற்றும் மக்காவிற்கான ஆன்லைன் பெர்மிட்டுகள் வழங்கும் பணி துவங்கியது

புனித மக்காவிற்குள் நுழைவதற்கான ஹஜ் ஆன்லைன் அனுமதிகள் muqeem portal எனப்படும் சேவை இணையத்தின் ஊடாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என சவுதி பாஸ்போர்ட் துறை (ஜவாஜத்) அறிவித்துள்ளது.

புனித மக்கா நகருக்குள் நுழைய விரும்பும் சவுதியர்கள் மற்றும் சவுதிவாழ் வெளிநாட்டினர் http://portal.elm.sa என்ற தளத்திற்குள் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் அனுமதியை (e-permit) பிரிண்ட் செய்து கொள்ளலாம், இதற்காக ஜவாஜத் அலுவலகம் செல்லத் தேவையில்லை.

மக்காவில் வழங்கப்பட்ட இகாமா, ஹஜ் பெர்மிட், வேலை அனுமதி இல்லாத எவரும் உள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல் மக்காவிற்குள் வெளியிலிருந்து வீட்டு வேலைகளுக்காக வரும் தொழிலாளர்கள் மற்றும் மக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களில் பணியாற்றுவோர் absher electronic site உள்ளே சென்று தங்களுக்கான ஆன்லைன் அனுமதியை (இ - பெர்மிட்) பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

சவுதியில் உள்நாட்டு ஹஜ் சேவை நிறுவனங்கள் வெளிநாட்டு பஸ்களை வாடகைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி!

அதிரை நியூஸ்: ஜூலை 02
ஹஜ் செய்திகள்: உள்நாட்டு ஹஜ் சேவை நிறுவனங்கள் வெளிநாட்டு பஸ்களை வாடகைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி

சவுதியில் உள்நாட்டு ஹஜ் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உள்நாட்டு ஹஜ் பயணிகளின் தேவைக்காக வெளிநாடுகளில் இருந்து வாடகை பேருந்துகளை அமர்த்திக் கொள்ள சில நிபந்தனைகளுடன் அனுமதியளித்துள்ளது சவுதி ஹஜ் அமைச்சகம்.

புனித ஹஜ் காலத்தின் போது ஏற்படும் பஸ் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றாலும் பல்வேறு துறைகளின் ஒப்புதலை பெற வேண்டி இருப்பதால் உடனடியாக இதற்கான நடைமுறை துவக்குமாறும் அறிவுறுத்தியுள்ளதுடன் முதலில் சவுதியின் உள்நாட்டு வாடகை வாகனச் சந்தையில் முறையாக தேடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

வாடகைக்கு அமர்த்தப்படும் வெளிநாட்டு பஸ்கள் கீழ்க்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

1.  பஸ் தயாரிக்கப்பட்டு 10 வருடத்திற்குள் இருக்க வேண்டும்.
2.  பஸ் முழுமையாக ஏசி வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
3.  பஸ் இருக்கைகளின் எண்ணிக்கை 45க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4.  பஸ்ஸின் நீளம் 12.5 மீட்டர், அகலம் 2.6 மீட்டர் இருக்க வேண்டும்.
5. பஸ்ஸில் சுத்தமான கழிவறை வசதி இருக்க வேண்டும்.
6. டிரைவர் மற்றும் துணை டிரைவர் ஆகிய இருவருக்கும் முறையான டிரைவிங் லைசென்ஸ் இருக்க வேண்டும்.
7.  பயணிகள் தங்களுடைய பொருட்களை வைத்துக்கொள்ள லக்கேஜ் கம்பார்ட்மெண்ட் போதிய அளவு இருக்க வேண்டும்.
8.  பஸ்களை முறையான பரிசோதணைக்கு உட்படுத்தி அதன் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் தீ அணைப்பான் உள்ளிட்ட பாதுகாப்புக் கருவிகள் சரியான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த பதிவை நம் நாட்டு பஸ் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அரசின் அக்கரையுடம் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

சவுதியில் உம்ரா விசா நிறுத்தம்! மீண்டும் ஆகஸ்ட் 16 முதல் வழங்கப்படும்!

அதிரை நியூஸ்: ஜூலை 02
ஹஜ் யாத்திரை காலம் துவங்கியதை அடுத்து கடந்த ஜூன் 17 திங்கள் முதல் இவ்வருடத்திற்கான உம்ரா விசா வழங்குதல் நிறுத்தப்பட்டது. உம்ரா விசாவுக்கான புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 2019 ஆகஸ்ட் 16 (துல்ஹஜ் 15) முதல் பெறப்படும் எனவும், தற்போது உம்ரா விசா உள்ளவர்கள் எதிர்வரும் ஜூலை 4 ஆம் தேதிக்குள் உம்ராவுக்காக சவுதிக்குள் வர வேண்டிய கெடு முடிவதாகவும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2030 வருடத்திற்குள் ஆண்டுக்கு சுமார் 30 மில்லியன் உம்ரா விசாக்களை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வருடத்தில் மட்டும் சுமார் 7.5 மில்லியனுக்கு மேற்பட்ட விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது ஓர் புதிய சாதனை அளவாகும். புதிய உம்ரா விசாக்கள் 5 நாட்களில் வழங்கப்படும் எனவும் இவ்விசாக்கள் மூலம்  30 நாட்கள் மட்டுமே சவுதியில் தங்க அனுமதிக்கப்படுவர்.

இவ்வருடம் 7,650,736 உம்ரா விசாக்கள் வழங்கப்பட்டதில் இதுவரை 7,393,657 பேர் உம்ரா செய்ய வருகை தந்துள்ளனர். இவர்களில் 6,550,520 பேர் விமானத்திலும், 707,955 பேர் தரை மார்க்கமாகவும், 135,182 பேர் கப்பல்களிலும் வருகை தந்துள்ளனர் என ஹஜ் மற்றும் உம்ராவுக்காக மிக அதிகமான உம்ரா பிரயாணிகள் கீழ்க்காணும் நாடுகளிலிருந்து வருகை தந்தனர்.

பாகிஸ்தான் 1,657,777 பேர்
இந்தோனேசிய 967,125 பேர்
இந்தியா 650,480 பேர்
எகிப்து 539,045 பேர்
அல்ஜீரியா 365,628 பேர்
ஏமன் 338,618 பேர்
துருக்கி 321,494 பேர்
மலேசியா 278,674 பேர்
இராக் 277,572 பேர்
ஜோர்டான் 216,165 பேர்கள்

என உம்ரா விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கப்பல்களிலும் வருகை தந்துள்ளனர் என ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

மரண அறிவிப்பு ~ முஹம்மது அம்மாள் (வயது 71)

அதிரை நியூஸ்: ஜூலை 02
அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அகமது ஹாஜா லெப்பை ஆலிம் அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது அபூபக்கர் லெப்பை ஆலிம் அவர்களின் மருமகளும், மர்ஹூம் 'கோடை இடி' என்கிற ஓ.எம் முகமது காசிம் லெப்பை அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகமது பாருக் லெப்பை, அன்வர் ஆலிம் லெப்பை ஆகியோரின் சகோதரியும்,  ராஜிக் அகமது, ஜியாவுதீன் ஆகியோரின் மாமியாரும், ஹாஜா சரீப் அவர்களின் சிறிய தாயாரும், அப்துல் முனாப், மர்ஹூம் அபூபக்கர், அப்துல் வஹாப் ஆகியோரின் தாயாருமாகிய முஹம்மது அம்மாள் (வயது 71) அவர்கள் இரவு  கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (02-07-2019) பகல் லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Monday, July 1, 2019

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 01
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் ஜூன் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் துணைத் தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (ஜூன் 30) ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புனித மக்காவினுள் வெளிநாட்டினர் உள்நுழைய தற்காலிகத் தடை!

அதிரை நியூஸ்: ஜூலை 01
புனித ஹஜ் யாத்திரை காலம் துவங்குவதையொட்டி வருடந்தோறும் ஷவ்வால் பிறை 25 முதல் துல்ஹஜ் பிறை 10 வரை சவுதிவாழ் வெளிநாட்டினர் அனைவரும் புனித மக்காவினுள் பிரவேசிக்க தற்காலிகத் தடை விதிக்கப்படுவது வழமையான நடைமுறையாகும். எனினும் மக்காவினுள் வசிப்பவர்கள் மற்றும் ஹஜ் கால வியாபாரங்கள் தொடர்பாக வந்து செல்பவர்களுக்கு இந்த தடை பொருந்தாது. இவர்கள் இதற்கான சிறப்பு அனுமதியை புனித மக்கா நகர நிர்வாகத்திடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.

இந்த வருடத்திற்கான தடைகாலம் கடந்த ஜூன் 28 முதல் (ஷவ்வால் பிறை 25) முதல் அமுலுக்கு வந்தது. இதனடிப்படையில் புனித மக்கா நகரைச் சுற்றியுள்ள அனைத்து நுழைவாயில்களிலும் கார், பஸ், சரக்கு வாகனங்களுடன் இந்த வருடம் முதல் ஹரமைன் அதிவேக ரயிலில் வரும் பயணிகளும் சோதனை செய்யப்பட்டு பர்மிட் உள்ள வெளிநாட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என புனித மக்கா நகருக்கான நிர்வாகம் அறிவித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 01
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, மருத்துவர்களின் சேவையை பாராட்டும் வகையில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் ஏ.அன்பழகன், டாக்டர் கெளசல்யா, டாக்டர் கார்த்திகேயன், டாக்டர் கலைவாணி, டாக்டர் சர்மிளா ஆகியோருக்கு சால்வை அணிவித்து, மகாத்மா காந்தியின் 'சுயசரிதை நூல்' அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல், செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன், லயன்ஸ் சங்க இயக்குநர்கள் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், என்.ஆறுமுகச்சாமி, எம்.அப்துல் ரஹ்மான், உறுப்பினர்கள் குப்பாஷா அகமது கபீர், ஏ.கண்ணன், அகமது ஜுபைர், வரிசை முகமது, அஹ்லன் கலீபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)

அதிரை நியூஸ்: ஜூலை 01
அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எம், அப்துல் பத்தாஹ் ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் அ.மு.க அப்துல் சுக்கூர் ஆலிம் அவர்களின் மருமகனும், முகமது சாலிகு, மவ்லவி தமீம் அன்சாரி பாகவி, சரபுதீன் ஆகியோரின் மூத்த சகோதரரும், ஹாபிழ் முகமது, அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய மவ்லவி. முகமது யூசுப் முஃப்தி (வயது 42) அவர்கள் இன்று காலை பழஞ்செட்டித்தெரு இல்லத்தில்.வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (01-07-2019) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.