.

Pages

Wednesday, October 2, 2019

அதிராம்பட்டினத்தில் டாக்டர் ஏ.அன்பழகனுக்கு பாராட்டு (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.02
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளாக தலைமை மருத்துவராகப் பணியாற்றி, முதன்மை குடிமை மருத்துவராக (Chef Civil Surgeon) பணி உயர்வு பெற்று, பட்டுக்கோடை அரசு மருத்துவமனையில் பணியாற்ற இருக்கும் டாக்டர் ஏ.அன்பழகனுக்கு பாராட்டு விழா அதிராம்பட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் எஸ்.ஹாஜா முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் கார்த்திகேயன், டாக்டர் சீனிவாசன், டாக்டர் எச். இஷ்ரத் நஸ்ரின், டாக்டர் ஷெரீன் பேகம், பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், அதிரை பேரூர் முன்னாள் துணை சேர்மன் ஏ.பிச்சை, ஏ.நெய்னா முகமது, பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், பேராசிரியர் எஸ்.பி கணபதி, என்.உதயகுமார், முகமது இப்ராஹீம், டாக்டர் கெளசல்யா, டாக்டர் ஹக்கீம், எம்.நிஜாமுதீன், மருத்துவமனை பணியாளர்கள் ராஜேஸ்வரி, ராஜலெட்சுமி, ஜெயபாரதி, பன்னீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். முடிவில் டாக்டர் ஏ.அன்பழகன் ஏற்புரை வழங்கி அனைவருக்கும் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், டாக்டர் ஷர்மிளா, டாக்டர் கலைவாணி, பேராசிரியர் எஸ்.பர்கத், எஸ்.எம் முகமது முகைதீன், எஸ்.ஏ அப்துல் ஹமீது, எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், பி.எம்.கே தாஜுதீன், வழக்குரைஞர் ஏ. முனாப், என்.உதயகுமார், எம். முகமது முகைதீன், எம். அகமது, எம். அப்துல் ஜலீல், எம்.ஏ முகமது தமீம், சிவக்குமார், ஹாஜா பகுருதீன், எம்.ஆர் ஜமால் முகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 


மழைநீர் சேகரிப்பில் முன்னுதாரணமாகத் திகழும் செடியன் குளம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.02
அதிராம்பட்டினத்தின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவைக் கொண்டது. மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்று சிறப்பு மிக்கது. இக்குளத்தில் நீர் நிரம்பிக் காணப்படும்போது, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார அனைத்து சமுதாயப் பொதுமக்கள் நீராடி மகிழ்ந்து வருவர். மேலும், ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கும் இக்குளம் உதவி வருகிறது.

அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகப் பராமரிப்பில் இருந்து வரும் இக்குளத்தை, ஜமாத் நிர்வாகம் சார்பில், தமிழக அரசின் மழை சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்த முன்வந்ததையடுத்து, குளத்தை தூர் வாரி கரையை பலப்படுத்தும் பணி கடந்த ஒரு மாதமாக தீவிரமாக நடந்து முடிந்தது. இப்பணிக்காக ஜே.சி.பி, டிராக்டர் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில், கடந்த (செப்.30) திங்கட்கிழமை அதிகாலை அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பலத்த மழை பெய்தது. அதிராம்பட்டினத்தில் மழையின் அளவு 89 மி.மீ பதிவாகியது. குளத்தின் சுற்றுப்புறப் பகுதியில் இருந்து வெளியேறும் மழை நீரை குளத்தில் நிரப்பும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளதால், குளத்திற்கு மழை நீர் மளமளவென நிரம்பத் தொடங்கியது. இதையடுத்து, மழைநீர் நிரம்பிய குளத்தில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் குளித்து மகிழ்கின்றனர். மேலும், ஜமாத் நிர்வாகம் சார்பில், குளத்தை சுற்றி மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க திட்டமிட்டுள்ளனர்.

தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தி, பிறருக்கு முன்னுதாரணமாகத் திகழும் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கவேண்டும். அரசின் சார்பில், குளத்தை சுற்றி தடுப்புச் சுவர் எழுப்பி, மின் விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். குளத்தின் பெண்கள் மற்றும் ஆண்கள் குளிக்கும் கரைகளில் படித்துறை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
 

மரண அறிவிப்பு ~ முகமது பாத்திமா (வயது 75)

அதிரை நியூஸ் அக்.02
அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கொ. சேக் முகமது தம்பி அவர்களின் மகளும், அகமது சம்சுதீன் அவர்களின் மனைவியும், முகமது காசிம் அவர்களின் சகோதரியும், அகமது சமூன், அகமது அன்வர், அகமது அஸ்ரப் ஆகியோரின் தாயாரும், முகமது அப்துல் காதர், அப்துல் ரஹ்மான், நிஜார் அகமது செய்யது காசிம், பகுருதீன் ஆகியோரின் மாமியாருமாகிய முகமது பாத்திமா (வயது 75) அவர்கள் நேற்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா நேற்று (01-10-2019) இரவு 9.30 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Tuesday, October 1, 2019

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.01
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் செப்டம்பர் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் கடந்த (செப். 30) திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
 
 
 
 
 
 
 
 
 
 

அதிராம்பட்டினத்தில் எம்.எல்.ஏ சி.வி சேகர் முதியோர் உதவித்தொகை விண்ணப்ப மனு பெற்றார்!

அதிராம்பட்டினம், அக்.01
முதியோர் உதவித்தொகை கோரிய 100 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரரிடம் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ இன்று செவ்வாய்க்கிழமை மனு பெற்றார்.

தமிழக அரசின் ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவித்தொகைக்கான விண்ணப்ப மனுவினை, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ பெற்றார். இதில், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் மனுவை அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பி.சுப்பிரமணியன், அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எம்.ஏ முகமது தமீம் முன்னாள் கவுன்சிலர்கள் சிவக்குமார், ஹாஜா பகுருதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.