.

Pages

Wednesday, June 27, 2018

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை? ~ சுகாதாரத்துறை ஆய்வு!

தஞ்சாவூர் ஜூன்.27-
சேதுபாவாசத்திரம் வட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என வட்டார சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம், அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில், வட்டார சுகாதார ஆய்வாளர் தீனதயாளன், சுகாதார ஆய்வாளர்கள் முருகானந்தம், ராஜகோபால், செல்வராஜ், சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பூக்கொல்லை, குருவிக்கரம்பை, ரெட்டவயல், கொளக்குடி, சேதுபாவாசத்திரம்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 30 க்கும் மேற்பட்ட  கடைகளில் ஆய்வு நடத்தினர்.

ஆய்வின் போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா. பதினெட்டு வயதுக்கு குறைவானவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா. எச்சரிக்கை விளம்பரம் வைக்கப்பட்டுள்ளதா. பள்ளிகள், கல்லூரிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின் போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விதிமீறிய கடைக்காரர்களிடம் அபராதமாக ரூ 2 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

Tuesday, June 26, 2018

உலகின் அற்புதமான 10 நீர்வழிப் பாலங்கள் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூன் 26
கடல், ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் கப்பல், படகு போன்ற போக்குவரத்துக்களும். அதன் மீது அமைக்கப்படும் பாலங்களின் மீது வாகனப் போக்குவரத்துக்களும் நடைபெறுவதை பார்த்திருப்போம் ஆனால் நவீன பொறியியல் நீருக்கு மேலும், தரைக்கு மேலும் நீர்வழிப்பாதைகளை அமைத்து கப்பல் மற்றும் படகு போக்குவரத்தை சாத்தியமாக்கியுள்ளது. உலகின் அத்தகைய அற்புதமாக 10 நீர்வழிப் பாதைகளை பற்றி பார்ப்போம்.
1. Aqueduct Veluwemeer, Netherlands
1. வெலுவேமீர் நீர்வழிப்பாதை, நெதர்லாந்து
நெதர்லாந்தில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய செயற்கை தீவான பிளிவோலேண்ட் மாகாணத்தை நிலப்பகுதியுடன் இணைக்கும் வெலுவேமீர் ஏரியின் மத்தியில் இந்த நீர்வழிப்பாதை அமைந்துள்ளதுடன் இதன் கீழேயே 25 மீட்டர் நீளத்திற்கு சுரங்கவழிப்பாதையும் அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்தும் ஒருசேர நடைபெறுவது இதன் சிறப்பு. (It connects the Netherlands to Flevoland - the largest artificial island in the world)
2. Pont du Sart Aqueduct, Belgium
2. போன்ட் டு சார்ட் நீர்வழிப்பாதை, பெல்ஜியம்
சென்ட்ருக்குமகேனல் வாட்டர் சேனல் (Centrumkanaal water channel) எனப்படும் கால்வாயை இணைப்பதற்காக சுமார் 65,000 டன் எடையில் கட்டப்பட்டது இந்த நீர்வழி இணைப்புப் பாலம். இது பெல்ஜியம் நாட்டின் மேற்கே அமைந்துள்ள ஹவ்டெங்-ஜியோக்னீஸ் நகர் அருகே அமைக்கப்பட்டுள்ளது.
3. Magdeburg Water Bridge, Germany
3. மக்டேபர்க் நீர்ப்பாலம், ஜெர்மனி
இது எல்பி மற்றும் ஹாவெல் (it connects the Elbe and Havel channels) ஆகிய ஆற்று கால்வாய்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது. நீர் போக்குவரத்திற்காக கடந்த 2003 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. உலகின் மிக நீளமான நீர்வழிப்பாலமான இதன் நீளம் 918 மீட்டராகும்.
4. Pontcysyllte Aqueduct, UK
4. பான்ட்சைஸலேட் நீர்வழிப்பாதை, ஐக்கிய ராஜ்ஜியம் (U.K)
1805 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நீர்வழிப்பாதையே பிரிட்டனின் மிக நீளம் மற்றும் உயரமான நீர்வழிப் பாலமாகும். இந்த பாலத்திற்கு கீழ் பாயும் ஆற்றிற்கு மேல் சுமார் 38 மீட்டர் உயரத்திலும், 307 மீட்டர் நீளத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இது உலகின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. (The Pontcysyllte Aqueduct also happens to be a world heritage site)
5. Aqueduct Ringvaart Haarlemmermeer, Netherlands
5. ரிங்வார்ட் ஹார்லெம்மெர்மீர் நீர்வழிப்பாலம், நெதர்லாந்து
சுற்றுவட்டச் சாலை என நம் நாட்டில் அமைக்கப்படுவது போல் இந்த நீர்வழிப்பாதை சுற்றுவட்ட வடிவில் ஏற்ற இறக்கம் மிகுந்த பள்ளத்தாக்குகளின் மீது அமைக்கப்பட்டு சுற்றியுள்ள நீர்நிலைகளின் மீது போக்குவரத்திற்கு ஏற்றவாறு இணைக்கப்பட்டுள்ளது. (The Ringvaart, is a circular canal surrounding the Haarlemmermeer polder - a low-lying tract of land enclosed by dikes). நெதர்லாந்து நாட்டின் மிகப்பழமையானதாக விளங்கும் இந்த நீர்வழிப்பாதைகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வாகன போக்குவரத்திற்கான சுரங்கவழி சாலைகள் கண்கவர் காட்சிகளாக அமைந்துள்ளன.
6. Lune Aqueduct, UK
6. லூன் நீர்வழிப்பாதை, ஐக்கிய ராஜ்ஜியம் (U.K)
லூன் ஆற்றின் மீது சுமார் 18 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த லன்காஸ்டர் கால்வாயை இணைக்கும் லூன் நீர்வழிப்பாதை 1797 ஆம் ஆண்டே கட்டப்பட்டுவிட்டது என்பது பேராச்சரியம். சுமார் 200 மீட்டருக்கு நீண்டுள்ள இந்த நீர்வழிப்பாலம் இங்கிலாந்தின் லங்காஷையரில் அமைந்துள்ளது. (The Lune Aqueduct carries the Lancaster Canal over 18 metres above the River Lune)
7. Briare Aqueduct, France
7. பிரியாரி நீர்வழிப்பாதை, பிரான்ஸ்
எஃகு உலோகத்தால் முழுமையாக அமைக்கப்பட்ட இந்த பிரியாரி நீர்வழிப்பாலம் ஜெர்மனியின் மக்டேபர்க் பாலம் திறக்கப்படுமுன்பாக கட்டப்பட்டதாகும். இது உருவாக்கப்பட்ட அன்றைய கால பொறியியல் திறமையை பறைசாற்றும் ஒன்றாக திகழ்கிறது.
8. Naviduct Krabbersgat, Netherlands
8. கிரப்பர்ஸ்கர்ட் நீர்வழிப்பாலம், நெதர்லாந்து
நெதர்லாந்தின் என்க்குசெயின் (Enkhuizen) நகரில் இது அமைக்கப்பட்டுள்ளதுடன் இது இருபுறமும் தண்ணீரை தேக்கி வைக்கும் தொழிற்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது (The world's first naviduct - a waterway with a lock). இது உயரத்தில் ஏற்றதாழ்வுகள் மிக்க 2 ஏரிகளை இணைத்து அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது (Connect two lakes which were on different levels).
9. Edstone Aqueduct, UK
9. எட்ஸ்டோன் நீர்வழிப்பாதை, ஐக்கிய ராஜ்ஜியம் (U.K)
இங்கிலாந்தின் மிகப்பழமையான நீர்வழிப்பாதைகளில் ஒன்றான இது ஒரு காலத்தில் அல்செஸ்டர் ரயில்வே பாலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பிர்மிங்ஹாம் மற்றும் வார்விக்ஷையர் ரயில்வே ஆகியவற்றிற்கு இடையேயுள்ள மிகக்குறுகிய பகுதியினை இணைத்தன் மூலம் இங்கிலாந்தின் மிக நீளமான நீர்வழிப் பாலங்களில் ஒன்றாக உருமாற்றம் பெற்றுள்ளது.
10. Aqueduct Langdeel, Netherlands
10. லாங்டீல் நீர்வழிப்பாதை, நெதர்லாந்து
நெதர்லாந்தின் லியூவர்தன் (Leeuwarden) நகரம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண். N31 மீது சுமார் 360 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு கடந்த 2007 ஆம் ஆண்டு நீர்வழி போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.

Source: http://www.bestwondertrip.com
தமிழில்: நம்ம ஊரான் 

தஞ்சை மாவட்டத்தில் தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (26.06.2018) நடைபெற்றது. 

ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது; 
அரசு அலுவலகங்கள், பொது சுகாதார மையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், மக்கள் கூடும் இடங்களில், சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.  பிற்பட்டோர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வரும் விடுதிகள் உள்ள நீர்தேக்க தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யவும், கழிவு நீர் தேங்காமல் பராமரிக்கவும், மாணவர்களுக்கு தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார்.

தொற்று நோய் குறித்து சிகிச்சை வழங்கிட போதுமான மருந்து கையிருப்பு அரசு சுகாதார நிலையங்களில் வைக்கப்பட வேண்டுமெனவும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனித்தனி வார்டுகள் அமைக்கப்பட வேண்டுமெனவும், அரசு கட்டிடங்களில் மேற்கூரைகளில் குப்பைகளை அகற்றி, கழிவு நீர் தேங்காமல் பராமரிக்கவும், மழை நீர், கழிவு நீர் முறையாக அப்புறப்படுத்த வேண்டுமெனவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் நீர்தேக்க  தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டுமெனவும், நீர் தேக்க தொட்டிகளிலிருந்து குழாய்களுக்கு செல்லும் வழியில் கசிவுகள் மூலம் நீர் தேங்காமல் இருக்க, கசிவுகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டுமெனவும், தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுவதை முறைப்படுத்த வேண்டுமெனவும், தண்ணீரின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் பொது மக்கள் கூடும் இடங்களான சமுதாய கூடம், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் சேரும் கழிவுகளிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் அவற்றை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், உள்ளாட்சி துறை மூலம் பராமரிக்கப்பட்டு வரும் நீர் தேக்க தொட்டிகளில் மாதம் இருமுறை சுத்தம் செய்யவும், நீர் தேக்க தொட்டியிலிருந்து குடிநீர் செல்லும் குழாய்களில் கசிவுகள் உடனுக்குடன் சரி செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.  மேலும், உள்ளாட்சித் துறைகள் மூலம் பொது மக்களிடையே சுகாதாரம் மற்றும் கொசு ஒழிப்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், அதனால் ஏற்படும் தொற்று நோய், காய்ச்சல் பற்றியும், கொசுக்கள் உற்பத்தியாக்கும் இடங்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென அறிவுறுத்தினார்.

மாவட்ட சித்த மருத்துவ அலுவலரிடம் நிலவேம்பு கசாயம் பொடி, மலை வேம்பு கசாயம் பொடி, பப்பாளி சாறு ஆகியவை தேவையான அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.  தேவைப்படுபவர்கள் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அணுகி பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் இளங்கோவன், பொது சுகாதாரத்துணை துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணியன், மலேரியா அலுவலர் திரு.போத்திபிள்ளை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் ஜூலை 2ந் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்ட அரங்கில் அனைத்துத்துறை  உயர் அலுவலர் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 05.06.2018 அன்று தமிழக முதலமைச்சர் அவர்கள் 110 விதியின் கீழ் வருகின்ற 01.01.2019 முதல் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி (One Time use  Plastic) மற்றும் இதர அனைத்து நெகிழிகளையும் (All Plastics) தடை செய்வதாக அறிவித்தார்.

அதனை செயல்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்பு அலுவலகங்களில் வருகின்ற 02.07.2018 முதல் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி மற்றும் இதர நெகிழிகளை முற்றிலுமாக உபயோகப்படுத்தக்கூடாது என அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து அலுவலர்களும், தங்கள் அலுவலகத்தில் வருகின்ற 02.07.2018 முதல் நெகிழிகளை உபயோகப்படுத்தாமலும், அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் நெகிழியினால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நெகிழி பயன்பாட்டினை தவிர்த்திட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொது மக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மீனாட்சி, மற்றும் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

பட்டுக்கோட்டை வட்டத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்க 100 % மானியம்: ஆட்சியர் தகவல்!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களில் பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியம் வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்கள்.

பண்ணைக் குட்டைகள், மழை பெய்கின்றபொழுது நிலத்தில் வழிந்தோடுகின்ற மழைநீரை சேகரித்து வைத்து அந்நிலத்தில் பயிர்களின் முக்கியமான வளர்ச்சி பருவத்தில், பயிர்கள் நீர் இல்லாமல் வறட்சியால் வாடும் நிலை ஏற்படும் பொழுது பயிர்களுக்குத் தக்க நேரத்தில் உயிர்பாசனம் மற்றும் துணை பாசனம் அளிக்க பயன்படுகிறது.  இதனால் பயிர்கள் காக்கப்பட்டு உரிய மகசூல் பெற வகை செய்கிறது.

பண்ணைக் குட்டைகள் சிறந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பாகவும், சிக்கனமானதாகவும், விவசாயிகளிடம் பெரும் வரவேற்பினைப் பெற்ற அமைப்பாகவும் விளங்குவதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு, காவிரி டெல்டா கடைமடை விவசாயிகள் மற்றும் கடலோர பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 10,000 பண்ணைக் குட்டைகளை ரூ.100 கோடி செலவில் அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய வட்டாரங்களில் 250 பண்ணைக் குட்டைகள் 100 சதவீத மானியத்தில் ரூபாய் 2.50 கோடி மானியத்தில் விவசாயிகளின் வயல்களில் அமைக்கப்பட உள்ளன.

எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன் பெற ஆர்வமுள்ள விவசாயிகள், உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, பட்டுக்கோட்டை அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (04373-222816) தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்கள்

சர்வதேச போதைபொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி (படங்கள்)

தஞ்சாவூர் ரயிலடியில் சர்வதேச போதைபொருள் எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு  பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை  இன்று (26.06.2018) கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.

விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இப்பேரணியானது நடத்தப்படுகிறது.  போதை பொருள் உபயோகிப்பதால் தொற்று நோய்கள், இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை ஆகிய உடற்பகுதிகளில் பாதிப்புகள், மனஅழுத்தம், மன நோய் போன்ற மன ரீதியான பாதிப்புகளும் ஏற்படும்.  போதை பொருள்களை பயிர் செய்தல், உருவாக்குதல் வைத்திருத்தல், வாங்குதல், கடத்துதல், மாநிலங்களுக்கிடையே இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்தல் போன்ற குற்றங்களுக்கு ரூ.2 இலட்சம் அபராதம் மற்றும் 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.  இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகாமல், பெரியவர்களுடன் பிரச்சினைகளை பகிர்ந்து கொண்டு ஆரோக்கியமாக வாழ பழகிக்கொள்ள வேண்டும். போதை பொருட்களுக்கு அடிமையானவர்களை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் நண்பர்கள் மருத்துவரிடம் அழைத்து சென்று முறையான மருத்துவ ஆலோசனைகளை பெற்று வாழ்க்கை முறையினை மாற்றி நல்;வழிப்படுத்த வேண்டும். போதைப்பொருட்கள் விற்பவர்கள் பற்றிய தகவல்களை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் காவல் துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும்.   இவ்வாறு மாவட்ட ஆட்சித தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இப்பேரணியானது தஞ்சாவூர் ரயிலடியிலிருந்து தொடங்கி பழைய பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக அரண்மனை வளாகம் அரசர் மேனிலைப்பள்ளியில் நிறைவடைந்ததது.  இப்பேரணியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார்,  கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் ரத்தினவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, உதவி ஆணையர் (கலால்) தனசெல்வம், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) மணிவண்ணன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், வட்டாட்சியர்கள் தங்கபிரபாகரன் (கலால்), அருணகிரி (தஞ்சாவூர்) மற்றும் கலந்து கொண்டனர்.

Monday, June 25, 2018

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் ECR ல் சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு!

மல்லிபட்டினம், ஜூன் 25
தஞ்சை மாவட்ட விசைப்படகு உரிமையாளர்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் மல்லிபட்டினம் கள்ளிவயல் தோட்டம் சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில செயலாளர், மல்லிபட்டினம் கள்ளிவயல் தோட்டம் சங்கத் தலைவர் அ.தாஜுதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலார் க. வடுகநாதன், சேதுபாவாசத்திரம் சங்க முன்னாள் தலைவர் து. செல்வக்கிளி, தலைவர் மு.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. கடந்த ஏப். 15 ந் தேதி முதல், ஜூன் 14 ந் தேதி வரையிலான 61 நாட்கள் மீன் இனப்பெருக்கம் என்கிற அடிப்படையில் அரசின் தடைகாலம் அமலில் இருந்து வருகிறது. இக்காலங்களில் இஞ்சின் பொருத்தப்பட்ட மற்ற  அனைத்து நாட்டுப்படகுகளையும் மீன் பிடித் தொழில் செய்ய அனுமதித்தது அரசின் நோக்கம் நிறைவேறாமலும், மீன் இனப்பெருக்கம் அடையாமலும் விசைப்படகு மீனவர்கள் நஷ்டம் அடையச் செய்வது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதும், மனித உரிமை மீறல் செயலாகும், இவற்றை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பது.

2. கடல் சீற்றம் என்றும், விசைப்படகு தொழில் செய்ய செல்லக்கூடாது என உத்தரவிட்டு, மீனவர்கள் வாழ்வாதரங்களை சீர்கேட வைத்து, அவர்களின் ஜீவாதார உரிமையில் தலையிட்டு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அரசின் அனுமதி சீட்டு பெறாமல் தன்னுடைய குடும்ப வறுமையை போக்கிட மீன்பிடித் தொழிலுக்கு சென்ற விசைப்படகுகள் மீது தண்டனை வழங்குவோம் எனவும், அரசின் வரி நீக்கம் செய்யப்பட்ட டீசல் வழங்கமாட்டோம் என மீனவர்களின் அடிப்படை உரிமையை பறித்து, சட்டம் என்ற காரணத்தைக் கூறி விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைய  வைத்துள்ளது. அரசு இப்போக்கை கைவிட்டு முன்பு போல் செயல்பட துறை அலுவலர்களுக்கு  அரசு உத்தரவிட வேண்டும்.

3. மீன் பிடி தடைகாலம் கடந்த ஏப்.15 ந் தேதிக்கு பிறகு 61 நாட்கள் கடன்பட்டு, பசி, பட்டினியுடன் படகுகளை எடுக்கும் போது, தொழிலுக்கு செல்லக்கூடாது எனவும், சங்க நிர்வாகம் பொறுபேற்றுக்கொள்கிறோம் என பொறுப்புக் கடிதம் கொடுத்து, அதன்படி கடலுக்கு சென்று எவ்வித குறைபாடுமின்றி தொழில் செய்து திரும்பியது. இந்நிலையில், தொழிலுக்கு சென்ற படகுகளை தண்டனை வழங்குவோம் என துறை மூலம் கடிதம் அளிப்பது, எங்கள் தொழிலை அழிக்கும் நிலைக்கு அரசு வந்துள்ளதோ என மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.  தண்டனை வழங்குவோம் என்பதையும், அடிக்கடி தொழில் நிறுத்தம் செய்வதையும் அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என மாநில அரசினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

4. ஜூன், ஜூலை மாதங்களில் கடலின் தென் திசையிலிருந்து காற்று 45 முதல் 55 வரை வேகத்துடன் வழமையான ஒன்றே. இந்த காலங்களில் மீனவர்கள் காற்றின் வேகத்திற்கு ஏற்ப தொழிலுக்கு செல்வதும், நிறுத்திக்கொள்வதும் மீனவர்களாகிய எங்களுக்கு நன்கு அனுபவம் ஆனதே. அதுமட்டும் அல்லாமல் கடந்த ஜூன் 20 ந் தேதி அரசு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கியும், மீனவர்களாகிய நாங்கள் காற்றின் வேகத்தை கணக்கீட்டு நாங்களாகவே நிறுத்திக்கொண்டோம். இப்படி நாங்களாகவே தொழில் நிறத்திக்கொள்வதும், பகலில் மட்டும் தொழில் செய்துவிட்டு மாலை மணிக்குள் கரை திரும்பி விடுவதும் வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில், அரசின் அனுமதியின்றி செல்லக்கூடாது என கூறுவது எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்வது மிகவும் வேதனைக்குரியது. இந்நிலையை மாற்றி மீனவர்களின் ஆலோசனைகளை பெற்று சிறு கடல்பகுதியான அலையே இல்லாத தஞ்சை மாவட்டப் பகுதியில் அடிக்கடி அனுமதி வழங்காமல் படகை நிறுத்தும் போக்கை கைவிட வேண்டும். என மாநில அரசினையும், துறை அலுவலர்களையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி, ஏழை மீனவர்களின் பசி, பட்டினி வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்வரும் ஜூன் 29 ந் தேதி மல்லிபட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் காலை 9 மணிக்கு மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தலைமையில் இன்று ( 25.06.2018 ) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொது மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரையிடம் நேரில் அளித்தனர்.  இம்மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

மாற்றுத்   திறனாளிகள்   நலத்  துறையின்  சார்பில்  5  மாற்றுத்  திறனாளிகளுக்கு ரூ. 1,00,000- மதிப்பீட்டில் செயற்கை கால் அவயங்களையும், 2 நபர்களுக்கு ஈமச்சடங்கு நிதி உதவியாக ரூ. 34,000- என ஆககூடுதல் 7 நபர்களுக்கு ரூ. 1,34,000- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில்  மாவட்ட  வருவாய்  அலுவலர்  சக்திவேல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம் )  ரவிச்சந்திரன், மாற்றுத்  திறனாளிகள்  நல  அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.