.

Pages

Friday, October 10, 2014

அதிரை கடலில் வீணாக கலக்கும் ஏரி நீர் ! அதிரை குளங்களுக்கு நிரப்ப சமூக ஆர்வலர்கள் முன்வருவார்களா !?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிரை ஈசிஆர் சாலையோரத்தில் அமைந்துள்ள சின்ன ஏரி மற்றும் பெரிய ஏரிக்கு ஆற்று நீர் வந்ததை அடுத்து தற்போது இரு ஏரிகளும் நிரம்பி வழிகிறது. இதிலிருந்து நிரம்பி வழியும் நீரானது பிலால் நகர், கல்லூரி, பள்ளி ஆகியவற்றை ஒட்டியுள்ள சாலையோரத்தின் வாய்க்கால் வழியாக கடலில் வீணாக சென்றடைகிறது. அதிரை பகுதிகளில் காணப்பட்ட நிலங்கள் அனைத்தும் தற்போது மனைகளாக உருமாறிவிட்டதால் இப்பகுதியில் விவசாயமும் நடைபெறுவது கிடையாது.

ஏரியிலிருந்து நிரம்பி வாய்க்கால் வழியே எதற்கும் பயன்படாமல் வீணாக கடலுக்கு செல்லும் நீரை, வாய்க்காலிலிருந்து குளங்களுக்கு செல்லும் வாய்க்கால்களை சீரமைத்து அருகில் காணப்படுகின்ற குளங்களுக்கு மோட்டார் பம்பிங் மூலம் நிரப்பிக்கொள்ள அதிரையில் வாழும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இதற்கான முயற்சியில் ஈடுபட முன்வர வேண்டும்.

கடந்த இரண்டு வருடங்களாக அதிரையில் பொய்த்து போன மழையால் மக்களுக்கு பயன்தரும் குளங்களும் தற்போது நீரின்றி வறண்டு காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக அதிரையில் போதுமான மழை பெய்தும் ஆங்காங்கே ஆக்கிரமிப்புகள், தேவையான வாய்க்கால் சீரமைப்பு இல்லாததால் மழைநீர் அனைத்தும் வீணாகிறது.

ஏரி வாய்க்கால் வழியாக இன்னும் சில தினங்களுக்கு தண்ணீர் தொடர்ந்து வர இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அருகில் காணப்படும் குளங்களுக்கு ஏரி நீரை கொண்டுவர சமூக ஆர்வலர்கள் முயற்சிக்க வேண்டும்.

வீணாக கடலுக்கு செல்லும் ஏரி நீர் 

ஏரி நீரை நிரப்பிக்கொள்ள வாய்ப்புள்ள அதிரை குளங்கள்

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    எல்லா சமூக ஆர்வலர்களும் ஒருமனதோடு ஒத்து நின்று, பொதுமக்களும் ‎ஒத்துழைப்பு தந்தால், இது மட்டும் என்ன, இன்னும் எவ்வளவோ ‎காரியங்களை செய்து முடிக்க முடியும்.‎

    முதலில்!‎
    நம் மனதில் மறைய வேண்டியவைகள் மறையனும்.‎
    துளிர் விட வேண்டியவைகள் துளிர் விடனும்.‎

    இல்லையேல்!!‎
    மேற்கொண்டு சொல்வதற்கு என்ன இருக்குது?‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. அவசியமான, அவசரமான விழிப்புணர்வு பதிவு!

    மேலத்தெரு, கீழத்தெரு, பிலால் நகர், புதுத்தெரு, தரகர் தெரு, கடற்கரை தெரு பகுதிகளில் அமைந்துள்ள குளங்களை நிரப்பிக் கொள்ள இறைவன் நமக்கு வழங்கியுள்ள இன்னொரு சந்தர்ப்பம் என எண்ணி துரிதகதியில் செயல்பட அந்தந்த பகுதி இளைஞர்களும், அதிரையின் ஒட்டுமொத்த ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

    மீண்டும் நினைவூட்டுகின்றேன், அந்தந்த பகுதிகளின் இளைஞர்களால் சில மண்வெட்டிகளை கொண்டு பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும், வாருங்கள் வீணாகும் நீரை குளங்களில் சேமிப்போம்.

    ReplyDelete
  3. சேதுரோட்டில் கடைகளின் கழிவு நீர், மில்லிருந்து வரும் கழிவு நீர் இவை வற்றாத ஜீவநதியாக தரகர் தெரு வழியாக ஓடிக்கொண்டிருக்கு போது எப்படி ஆற்று நீரை வரவழைக்க முடிவும்? திட்டம் போட்டு செயல் படக்கூடியவர்கள் நிர்வாகம் இப்போ இல்லை என்பது வருத்தமான விசயம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.