முத்துப்பேட்டை எஸ்.பி.கே.எம்.தோட்ட வளாகத்தில் வசிப்பவர் ஹைஜாஅம்மாள், பாத்திமா இருவரும் சகோதிரிகள். அமானுல்லாவுக்கு சொந்தமான கூரை வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு 1-மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவரது வீட்டுகூரையில் தீபிடித்து எரிந்தது. உடன் அக்கம் பக்கத்தினர் போராடி தீயை அணைக்க முயற்சி செய்தனர் ஆனால் அதற்குள் தீ பரவி வீடு முழுவதும் எரிந்து நாசமானது. இதில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ மற்றும் முக்கிய பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. தகவல் அறிந்ததும் பேரூராட்சி கவுன்சிலர் மேட்ரோமாலிக். மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்று நிவாரண பணிகளுக்கு ஏற்பாடு செய்தனர. இதுக்குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தி மற்றும் படம் :
நிருபர் மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
செய்தி மற்றும் படம் :
நிருபர் மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.