.

Pages

Wednesday, May 6, 2015

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு !

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. அதை இணைய தளத்தில் பார்க்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வு எழுதிய மாணவ, மாணவர்கள் தாங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள இன்டர்நெட் சென்டரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும், வரும் 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை அந்தந்த பள்ளியில் பெற்றுக் கொள்ள தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிந்தன. ஏப்ரல் மாதம் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணியும் முடிந்துள்ளன.

இதையடுத்து நாளை தேர்வு  முடிவுகளை வெளியிடுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. நாளை காலை 10 மணிக்கு கல்லூரி சாலையில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்தில் முடிவுகள் வெளியிடப்படுகிறது. இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை பார்க்கவும், ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.

மேலும், அந்தந்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தவிரவும், தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை மாணவர்கள் படித்த  பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியரிடம் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

இணைய தள முகவரிகள்:
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in

1 comment:

  1. பல வீடுகளிலும், பள்ளிகளிலும், மாணவர்களிடம் தோல்வி என்ற ஒன்றே இருக்க கூடாது என்று எதிர்பார்க்கின்றனர். தோல்வி தானே வெற்றியின் முதல் படிக்கட்டு. எந்தக்குழந்தைக்கு தன்னம்பிக்கையும், வீழ்ந்தால் தாங்கி பிடிக்க குடும்பம், நண்பர்கள், சுற்றத்தார் குறைவாக இருக்கிறதோ அந்த குழந்தைகளே தற்கொலை முடிவை எடுக்கின்றனர் என்று உளவியல் ஆய்வு சொல்கிறது.
    இவ்விஷயத்தில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்ச்சி அவசியம் தேவை. உங்கள் குழந்தையின் படிக்கும் திறனை கண்டு கொண்டு அதற்கு ஏற்றவாறு அவர்களின் எதிர்காலத்தை திட்டமிடுங்கள். அவர்கள் தோல்விகளை சந்திக்கும் போது, தாங்கிப்பிடிக்கும் சக்தியாய் உங்கள் அன்பு இருக்கட்டும்.

    தேர்வின் முடிவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மாணவ மாணவிகளே ரிலாக்ஸ். வீழ்ந்தாலும் வீறு கொண்டு எழுவோம்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.