.

Pages

Wednesday, May 6, 2015

மதுக்கூரில் மாபெரும் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு !

அதிரை அடுத்துள்ள மதுக்கூரில் எதிர்வரும் [ 16-05-2015 ] அன்று இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக "வாருங்கள் நன்மையை நாடி" என்ற தலைப்பில் மாபெரும் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நடைபெற இருக்கிறது.

இந்த மாநாட்டில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்த உள்ளனர். மேலும் மாநாட்டில் கண்காட்சி, மந்திரமா தந்திரமா மேஜிக் நிகழ்ச்சி, புத்தக கண்காட்சி உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது.

ஏராளமான பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையில் தாராள பந்தல் வசதி, மதிய உணவு, இரவு உணவு, ஆண் பெண் இருபாலருக்கும் தனி தனி இடவசதி உள்ளிட்டவை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் மதுக்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தோர் குடும்பத்தோடு கலந்து கொண்டு பயன்பெறுமாறு இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.

மேலதிக தொடர்புக்கு 9943145503

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.