.

Pages

Sunday, March 24, 2013

மின்சாரம் : எங்களை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே !? :)

அறிவிக்கப்படாத மின்வெட்டால் அதிரை மக்கள் மீண்டும் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடும் மின் பற்றாக்குறை காரணமாக  அதிரையில் மின் வெட்டு நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கடந்த சில நாட்களில் மட்டும் 16 மணி நேரமாக இருந்து வருவது வேதனையாக உள்ளது.

முக்கிய நேரங்களில் அமலாக்கப்படும் மின் வெட்டால் பொதுமக்கள் மாத்திரமல்ல பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளும் மிகவும் அவதியுறும் நிலை ஏற்பட்டு உள்ளன. இதனால் அதிரையில் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதோடு பொது மக்களின் அன்றாட பணிகளும் முடங்கிப் போயுள்ளன.

இப்படி பொதுமக்களை மிரட்டும் மின்வெட்டால் ஏற்படும் நன்மைகள் !? என்ன என்பது பற்றி நமதூர் நண்பர்களிடம் நகைச்சுவையாய்க் கேட்டோம்.

காமெடி கலாட்டாவில் பங்குபெற்றோர் :
நட்புடன் ஜமால் > 
இக்ராம் பாய் 
அமீர் பாட்சா >
 சேக் அலாவுதீன் > 
அமானுல்லா [ சேட் ] > 
அஜ்மல்கான்



நன்றி : சமூக விழிப்புணர்வு பக்கங்கள்

மனோரா பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா அழைப்பு !

எதிர்வரும் வியாழக்கிழமை [ 28-03-2013 ] அன்று காலை 9.30 மணியளவில் அதிரையர் நிறுவனர்களாக செயல்படும்  மனோரா பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற உள்ளது.


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்வதை கண்காணிக்க வேண்டும் : உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கலெக்டர் அறிவுரை !

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நீரினால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துதல் தொடர்பான மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கரன் தலைமை தாங்கி பேசியதாவது :–

நீரினால் பரவும் பல்வேறு நோய்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படுவதை கண்காணிக்க வேண்டும். கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை அழிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

முதல்–அமைச்சரின் விஷன்–2023 தொலைநோக்கு திட்டத்தின்படி 2015–ம் ஆண்டுக்குள் பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் மாற்றிடும் நிலையை உருவாக்கிடும் வகையில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் சுகாதாரம் மற்றும் தனிநபர் கழிவறைகள் கட்டுவதற்கான புள்ளி விவர சேகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அம்மா திட்டத்தின் கீழ் அனைத்து வருவாய் கிராமங்களிலும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வருவாய்த்துறை அலுவலர்கள் 6 மாத கால அளவிற்குள் நேரில் சென்று மக்கள் குறைகளை தீர்க்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளார்கள்.

இந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்கப்பட உள்ளன. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் நீரினால் பரவும் நோய்கள் மற்றும் அவற்றை உருவாக்கும் கொசுக்கள், கொசு உற்பத்தியாகும் இடங்கள் மற்றும் அவற்றை அளிப்பதற்கான வழிமுறைகள், பொதுசுகாதாரம் குறித்த விளக்கப்படம் மக்கள் பிரதிநிதிகளுக்கு காண்பிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி அமுதாராணிரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வரதராஜன், நகர சபை தலைவர்கள் சாவித்திரிகோபால், ரத்னாசேகர், ஜவகர்பாபு, மாவட்ட மலேரியா அலுவலர் போத்திபிள்ளை மற்றும் அனைத்து பேரூராட்சி தலைவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் - தஞ்சை

Friday, March 22, 2013

பகுதிநேர பொறியியற் பட்டப்படிப்புக்கு ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம் !

2013-2014-ஆம் கல்வியாண்டிற்கு பகுதிநேர பொறியியற் பட்டப்படிப்பு [ B.E. / B.Tech. ] சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் கீழ்க்காணும் பொறியியற் கல்லூரிகளில் 01.4.2013 முதல் 15.4.2013 முடிய பயிலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்படும். 

1. அரசினர் பொறியியற் கல்லூரி - கோயம்புத்தூர் 641 013

2. அரசினர் பொறியியற் கல்லூரி - சேலம் 636 011

3. அரசினர் பொறியியற் கல்லூரி - திருநெல்வேலி 627 007

4. அழகப்ப செட்டியார் பொறியியற் கல்லூரி - காரைக்குடி 630 004

5. தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரி - வேலூர் 632 002

6. அரசினர் பொறியியற் கல்லூரி - பர்கூர் 635 104

7. பி.எஸ்.ஜி. பொறியியற் கல்லூரி -  கோயம்புத்தூர் 641 004

8. கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி - கோயம்புத்தூர் 641 014

9. தியாகராஜர் பொறியியற் கல்லூரி - மதுரை 625 015

10. தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் - சென்னை 600 025

விண்ணப்ப படிவங்களை நேரடியாகவும் / அஞ்சல் மூலமாகவும் பெற விரும்புவோர், பிற இனத்தவர் ரூ.300/-ம் மற்றும் தமிழ்நாட்டைச் சார்ந்த பட்டியல் / பழங்குடி [ ST/SC/STA ]  இனத்தவர் ரூ.150/-க்குமான கேட்பு 
வரைவோலையினை [ Demand Draft ] The Secretary, Part time B.E. / B.Tech. Admissions,Coimbatore" என்ற பெயரில் கோயம்புத்தூரில் காசாக்கும் வகையில் [ Payable at Coimbatore ] எடுத்து விண்ணப்பங்களை மேற்காணும் விண்ணப்பம் விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். பழங்குடி மற்றும் பட்டியல் இனத்தவர்கள் கேட்பு வரைவோலையுடன், சான்றிடப்பட்ட [ Attested ] தங்களது சாதிச்சான்றின் நகலினை [ Xerox copy ] இணைக்க வேண்டும். 

அஞ்சல் மூலமாக பெற விரும்புவோர், கேட்பு வரைவவோலையுடன் சுய விலாசமிட்ட 35 செ.மீ X 25 செ.மீ அஞ்சல் உறையில் ரூ.50/-க்கு அஞ்சல் வில்லை ஒட்டி “The Secretary, Part time B.E. / B.Tech. Admissions, Coimbatore Institute of Technology Coimbatore” என்ற முகவரிக்கு கடிதம் மூலம் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். 

மாணவர்கள் கலந்தாய்வுக்கு மே 2013-ல் அழைக்கப்படுவார்கள். இதற்கான அழைப்பு உரியவர்கட்கு தபால் மூலம் தெரிவிக்கப்படும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் “The Secretary, Part-time B.E. / B.Tech. Admissions, Coimbatore Institute of Technology, Coimbatore 641014” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 15.4.2013 

உங்களுக்கு தெரியுமா ? ஜப்பானில் !?



அ)   ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொருநாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பள்ளிக் கூடம் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்கின்றனர்.

ஆ)  ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.

இ)   ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் “சுகாதார பொறியியலாளர் என அழைக்கப்படுகிறார். அவரது மாத சம்பளம் அமெரிக்க டாலரில் ஐயாயிரம் முதல் எட்டாயிரம் வரை ஆகும்.

ஈ)   ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை, அத்துடன் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன, ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.

உ)   ஜப்பானில் முதலாம் ஆண்டு தொடக்கம் ஆறாம் ஆண்டு வரையான மாணவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

ஊ)  ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய வசதி படைத்தவர்கள் என்றாலும் அவர்கள் ஒரு போதும் தங்களுக்கென்று பணியாட்களை அமர்த்திக் கொள்வதில்லை, தங்கள் வீட்டின் வேலைகளையும் பிள்ளைகளையும் தாங்களே கவனித்துக் கொள்வார்கள்.

௭)   ஜப்பான் பள்ளிக் கூடங்களில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை பரீட்சைகளே இல்லை, கல்வியின் நோக்கம் விஷயங்களை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும் மாணவர்கள் பக்குவப் படுத்தப்படுகின்றனர்.

ஏ)   ஜப்பானில் மக்கள் உணவுக் கடைகளில் எந்த விதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்கு தேவையானது அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள், உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.

ஐ)   ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்தில் இரயில் வண்டிகள் தாமதமாக வந்த நேரம் ஆகக் கூடியது சுமார் ஏழு வினாடிகள் மாத்திரமே.

ஒ)   ஜப்பானில் மாணவர்கள் பள்ளிக் கூடத்தில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள்.

2020-ல் பாரதம் வல்லரசாக வேண்டும் என்று ஆசைப்படுவதைவிட, எல்லா அடிப்படை வசதிகளோடு, ஒற்றுமையாக, நிம்மதியாக, சந்தோஷமாக, அயல் நாட்டிற்கு எடுத்துக்காட்டாக இல்லாவிட்டாலும், உள்நாட்டில் எந்தவித கலவரம் இல்லாமல், மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்தாலே போதுமானது.

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A.ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.Mohamed Aliyar (Late)

அதிரை பேரூராட்சியின் ஆண்டு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு !

அதிரை பேரூராட்சியின் 2013-14 ம் ஆண்டிற்கான பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சப்ளை செய்வதற்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் பகுதியில் விபத்து நடக்கிறதா ? ஆன்லைனில் தகவல் தெரிவிக்கலாம் !

பொதுமக்கள் தாங்கள் வாழும் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன என்ற நிலையில் தேவை யான எச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ள ஏதுவாக தங்கள் பகுதி விபத்து பகுதி என்ற விவரத்தை மத்திய தரை வழி போக்குவரத்து ஆணையரகத்துக்கு www.morth.nic.in என்ற முகவரியில் ஆன்லைன் முறையில் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிக்க விரும்புவோர் தங்கள் பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண், போன்ற விவரங்களை பதிவு செய்த பின்னர்...

1. உங்கள் ஊரின் சாலை பாதுகாப்பானதாக உணர்கிறீர்களா ? 
2. இல்லை எனில் வாகனங்கள் வேகமாக செல்கின்றனவா ?
3. விதி மீறி செல்கின்றனவா ?
4. சாலையின் கோணம், நீள, அகலம் சரியில்லையா !
5. விபத்து நடக்கும் பகுதி நகரமா, கிராமமா ?
6. விபத்து நடக்கும் சாலை தேசிய நெடுஞ்சாலையா, மாநில நெடுஞ்சாலையா ?
7. விபத்துகளை தவிர்க்க உங்கள் யோசனை என்ன ?

போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என தரைவழி போக்குவரத்து ஆணையரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, March 21, 2013

அதிரை அருகே தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் !

அதிரை அருகே உள்ள அனைக்காடு என்ற கிராமத்தில் வருகின்ற சனிக்கிழமை [ 23-03-0213 ] அன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.