.

Pages

Tuesday, January 28, 2014

போராட்ட களத்திற்கு அதிரையிலிருந்து பெரும்திரளானோர் புறப்பட்டு சென்றனர் ! [ புகைப்படங்கள் ]

இஸ்லாமியர்களுக்கு அரசின் வேலை வாய்ப்பு , கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி இன்று [ 28-01-2014 ] காலை 11 மணியளவில் திருச்சியில் நடைபெற இருக்கும் சிறை செல்லும் போராட்டத்திற்காக இன்று காலை தக்வா பள்ளி அருகிலிருந்து 35 வேன்கள், 3 பஸ்கள், விருப்பத்தின் பேரில் சொந்தமாக எடுத்து வந்த பல்வேறு வாகனங்கள் ஆகியவற்றில் பெரும்திரளானோர் பயணத்தை மேற்கொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொள்வது குறித்து TNTJ அதிரை நகர செயலாளார் அன்வர் அலி அவர்கள் நமக்களித்த நேர்காணல்...















ட்ரிங் ட்ரிங்! ட்ரிங் ட்ரிங்!! ஹலோ, அதிரை மின்சார வாரியமா?



ட்ரிங் ட்ரிங்! ட்ரிங் ட்ரிங்!! ஹலோ, அதிரை மின்சார வாரியமா?

ஆமாம், பியூஸ் ஏதும் போச்சா சார்?

பியூஸ் ஒன்னும் போகலே, இன்று ஜனவரி, செவ்வாய்கிழமை தேதி 28ஆச்சே மாதாந்திர பராமரிப்புக்கு மின் நிறுத்தம் செய்வீங்களே அது எப்போ சார்?

ஏன் சார், எதுக்கு கேக்குறீங்க?

வேறு ஒன்னும் இல்லே, நாளைக்கு எங்க வீட்டுலே ஒரு பங்க்ஷன் வைத்து இருக்கேன் அதுக்குதான் கேட்டேன்.

ஒ!! அதுவா சார், நாங்க நாளைக்கு  புதன்கிழமை 29ம்தேதி காலை 9மணி முதல் மாலை  6மணி வரை பவர் கட் இருக்கும் சார்.

அட! நீங்களும் நாளைக்குதானா? அதுசரி, மின்சாரம் சரியாக மாலை 6மணிக்கெல்லாம் வந்துருமா சார், ஏனென்றால் நாளைக்கு குடிதண்ணீர் வருகின்ற நாளாச்சே.

அதுக்கு முன்னாடியே கொடுக்க முயற்சிக்கிறோம் சார்.

ஓகே நன்றி சார்.

சரி சார்.

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். கோ.மு. முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை 13வாடி, வண்டிப்பேட்டை.



Monday, January 27, 2014

இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்க அதிரையில் பணிகள் மும்முரம் !

இஸ்லாமியர்களுக்கு அரசின் வேலை வாய்ப்பு , கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நாளை [ 28-01-2014 ] காலை 11 மணியளவில் திருச்சியில் நடைபெற இருக்கும் சிறை செல்லும் போராட்டத்திற்கான பணிகள் அதிரையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை நிர்வாகிகள் ஒவ்வொரு மஹல்லா ஜமாத்தினரையும், பொதுமக்களையும் நேரடியாக சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

இதற்காக பல குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு தெருவிலும் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று இட ஒதுக்கீட்டின் அவசியம் குறித்து விளக்கி அவர்களை திருச்சியில் நடக்க இருக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து வருகிறார்கள். 

கடந்த சில நாட்களாக வாகனத்தில் கட்டப்பட்ட ஒலிபெருக்கின் மூலம் நகரின் முக்கிய பகுதிகளில் அறிவிப்பும், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் பிராச்சாரத்தை மேற்கொண்டனர். மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே ப்ஃளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. போராட்டத்திற்கு சென்று வருவது குறித்து அதிரை கிளையினர் அவ்வபோது ஆலோசனை அமர்வுகளும் நடத்தி வந்தனர்.

நாளை காலை 7 மணியளவில் அதிரை தக்வா பள்ளி அருகிலிருந்து வாகனங்கள் புறப்படுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் பிராதான தெருக்களுக்கு வாகனங்களை அனுப்பி பொதுமக்களை ஏற்றிவர ஏற்பாடு செய்துள்ளனர். பெண்களுக்கு தனி வாகன வசதிகளும் ஏற்பாடு செய்துள்ளனர்.

திருச்சி போராட்டத்தில் பங்கேற்க உள்ளவர்களுக்கு வேண்டிய மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக இன்று மதியம் முதல் சமையல் வல்லூனர்கள் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.

தண்ணீர் பாக்கெட்கள், அவசர மருத்துவ முதலுதவி, அவசர தேவைக்கு போதுமான மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவை கிளையின் சார்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.





உடல்நிலை பாதிப்படைந்த வயதான 3 குழந்தைகளுக்கு லண்டன் வாழ் அதிரையர் வழங்கிய மருத்துவ உதவி [ காணொளி ] !

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம், மூங்கில்துரைப்பட்டு கிராமத்தில் மேட்டூர் வடக்கு தெருவில் வசிக்கும் மஹபூப்கான் மனைவி சர்தார்னி இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள். 1. வாஹித்கான் [ வயது-21 படிப்பு 10],
2. அம்ஜத்கான் [ வயது-18, படிப்பு 7 ], 3. சாரூக்கான் [ வயது-15, படிப்பு 6 ]

இம்மூன்று குழந்தைகளுக்கும் கடந்த 7 ஆண்டு காலமாக ஒன்றின் பின் ஒன்றாக மூவருக்கும் தொடர்ந்து பக்கவாதம் நோய் தாக்கி படுத்த படுக்கையாக இருப்பதினால் மருத்துவ சிகிச்சை செய்ய இயலாமல் கடந்த
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளின் தந்தை மஹபூக்கான்
இக்குடும்பத்தை விட்டு சென்றுவிட்டார். இதுவரை எங்கே இருக்கிறார் என்று எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இம்மூன்று பிள்ளைகளை வைத்து மிகவும் சிரமப்படும் இச்சகோதரிக்கு எந்த ஒரு வருமானமும் இல்லை. பிள்ளைகளின்
அனைத்து சுயதேவைகளையும் இவர் இல்லாமல் செய்து கொள்ளாத நிலை இருப்பதினால் இப்பிள்ளைகளின் தாயே பிள்ளைகளுக்கு தேவையான
அனைத்தையும் செய்துகொண்டு வருவதால் இவரால் கூலி வேலைகளுக்கு கூட செல்ல முடியவில்லை ஆகையால் முகநூல் சொந்தங்கள் அனைவரும் இப்பதிவினை லைக் செய்யாமல் உங்களின் முகநூல் நண்பர்களுக்கு ஷேர்
செய்து இப்பிள்ளைகளுக்கும் இச்சகோதரிக்கும் உங்களால் முடிந்த உதவிசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உதவிக்கு:
வங்கி விபரம்-
Holder Name : SARDHANI M
A/C.No. : 18230100013606
Bank Name : BANK OF BARODA
Branch : MOONGILDURAIPATTU BRANCH
IFSC Code : BARB0MOONGI
Dist.-villupuram

என்ற முகநூல் அறிவிப்பை பார்வையிட்ட நமதூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், தொடர்ந்து பல்வேறு மருத்துவ, வாழ்வாதார உதவிகளை முன்னின்று செய்துவரும் லண்டன்வாழ் அதிரையர் S.A இம்தியாஸ் அஹமது அவர்கள் மூலம் திரட்டப்பட்ட ரூபாய் 87,500/- ஐ, த.மு.மு.க அதிரை நகர நிர்வாகிகளுக்கு அனுப்பி அவற்றை நேரடியாகச் சென்று வழங்க கேட்டுக்கொண்டார்.

இதைதொடர்ந்து நேற்று முன்தினம் அதிரை நகர த.மு.மு.க / ம.ம.க நிர்வாகிகள் பாதிப்படைந்த குழந்தைகளை நேரடியாக பார்வையிட்டு உதவியை வழங்குவதற்காக வாகனம் மூலம் அதிரையிலிருந்து வெகுதொலைவில் இருக்கும் மூங்கில்துரைப்பட்டு கிராமத்தை நோக்கி புறப்பட்டுச்சென்றனர்.

விழுப்புர மாவட்ட ம.ம.க செயலாளர் முஹம்மது அலி அவர்களோடு நேரடியாக வீட்டிற்கு சென்று பாதிப்படைந்த 3 வாலிபர்களையும், தனது பிள்ளைகளுக்காக தாய் செய்கிற பணிவீடைகளையும் நேரடியாக பார்த்து அறிந்துகொள்கின்றனர்.

லண்டன் வாழ் அதிரையர் இம்தியாஸ் அஹமது வழங்கிய ரூபாய் 87,500/-, துபாய் வாழ் அதிரையர் தாஹா அவர்கள் வழங்கிய உதவியோடு, அங்கே சென்ற தமுமுக நிர்வாகிகள் இந்த குடும்பத்தின் ஏழ்மை நிலையை அறிந்துகொண்டு தங்களின் பங்காக வழங்கிய ரூபாய் 8,700 /- ஐ சேர்த்து மொத்தம் ரூபாய் 97,200/- ஐ வழங்கினார்கள். உதவியை பெற்றுக்கொண்ட சகோதரி சர்தார்னி நன்றியை தெரிவித்துக்கொண்டதோடு வழங்கியோருக்கு துவாவும் செய்தார்.

உடல்நிலை பாதிப்படைந்த 3 வாலிபர்கள் குறித்து த.மு.மு.க / ம.ம.ம கட்சியின் அதிரை கிளை பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி மற்றும் த.மு.மு.க தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அஹமது ஹாஜா ஆகியோர் நம்மிடம் வைக்கும் உருக்கமான வேண்டுகோள் !















அமெரிக்காவில் அதிரையர் மரணம் (நெய்னா முகமது)

ஆலடிதெருவை சேர்ந்த மர்ஹும் மீரான் மரைக்காயர் அவர்களின் மகனும் அப்துல்  ராஜக் ,தையூப், முஹம்மது இப்ராகிம் ,இவர்களின் சகோதரரும் AR. அப்துல் லத்தீப் ,F  சைபுதீன் ,H  அஷ்ரப் இவர்களின் மாமனாருமான நெய்னா முகமது அவர்கள் அமெரிக்கா / கலிபோர்னியாவில் இன்று இரவு, அந்நாட்டு நேரப்படி பகல் 12 மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா அமெரிக்கா நேரப்படி லுஹர் தொழுகைக்கு பிறகு 1.30 மணியளவில் வீ தெரு மஜீத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அமெரிக்கா வாழ் அதிரையர்களின் தொடர்புக்கு 
முகமது இப்ராஹிம் : 5104841009
அப்துல் லத்தீப்            :7073968123
அப்துல் ஜப்பார்           :5107546541

தகவல்: அதிரை ஹிதாயதுல்லாஹ்