அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும், தேவையான முதலுதவி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரையில் நாளை [ 30-04-2015 ] சாலை மறியல் போராட்டம் நடைபெறும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியார் அரங்க நாதன் தலைமையில் இன்று [ 29-04-2015 ] காலை 10 மணியளவில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்க அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.
இதையடுத்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அதிரை பேரூராட்சி அலுவலகத்திலிருந்து அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
பேச்சுவார்த்தையில் அதிரை பொதுமக்கள் சார்பில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர்கள் அரசு அலுவலர்களிடம் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர். இவற்றை கவனமாக கேட்டுக்கொண்ட பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியார் அரங்க நாதன், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் அவர்கள் அளித்த உறுதியை அடுத்து அதிரை பொதுமக்களின் நியாமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவைக்காக கூடுதல் மருத்துவரை நியமிப்பது என்றும், அதுவரையில் தற்காலிகமாக சுழற்சி முறையில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களை கூடுதலாக பொறுப்பு வகிக்க அறிவுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக உடன்பாட்டை தொடர்ந்து நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் விலக்கிகொள்வதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர், அதிரை அரசு மருத்துவமனை மருத்துவர், அதிரை காவல்துறை உதவி ஆய்வாளர் கலையரசன், அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
இதையடுத்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அதிரை பேரூராட்சி அலுவலகத்திலிருந்து அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
பேச்சுவார்த்தையில் அதிரை பொதுமக்கள் சார்பில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர்கள் அரசு அலுவலர்களிடம் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர். இவற்றை கவனமாக கேட்டுக்கொண்ட பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியார் அரங்க நாதன், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் அவர்கள் அளித்த உறுதியை அடுத்து அதிரை பொதுமக்களின் நியாமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவைக்காக கூடுதல் மருத்துவரை நியமிப்பது என்றும், அதுவரையில் தற்காலிகமாக சுழற்சி முறையில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களை கூடுதலாக பொறுப்பு வகிக்க அறிவுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக உடன்பாட்டை தொடர்ந்து நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் விலக்கிகொள்வதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர், அதிரை அரசு மருத்துவமனை மருத்துவர், அதிரை காவல்துறை உதவி ஆய்வாளர் கலையரசன், அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:











































.jpg)

