.

Pages

Saturday, April 29, 2017

துபாயில் ஈமான் அமைப்பின் சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாம் !

அதிரை நியூஸ்: ஏப்-29
துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் இலவச மருத்துவ முகாம் 22.04.2017 சனிக்கிழமை துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள அல் அப்ரா கிளினிக்கில் நடைபெற்றது. இந்த முகாமில் பொது மருத்துவம், பல் மருத்துவம், ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர் நஜிமா நசீர் தலைமையில் குழுவினர் இந்த இலவச பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.

ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் கீழை ஹமீது யாசின், துணைப் பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகைதீன், செயற்குழு உறுப்பினர் வி.களத்தூர் சர்புதீன் உள்ளிட்டோர் மருத்துவ முகாமுக்கு வருபவர்களை பதிவு செய்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை பெற ஏற்பாடு செய்தனர். இந்த முகாமில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் பயன் பெற்றனர்.
 
 
 

Friday, April 28, 2017

தஞ்சை மாவட்டத்தில் மே.5-ந்தேதி உள்ளூர் விடுமுறை !

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் வருகின்ற 05.05.2017அன்று நடைபெறவுள்ளதையொட்டி அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் அறிவிப்பு செய்துள்ளார்.

இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற 05.05.2017 (வெள்ளிக் கிழமை) அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.  

இந்த உள்ளுர் விடுமுறை நாட்களுக்கு பதிலாக வருகின்ற 27.05.2017 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும், மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது.  மேற்படி உள்ளுர் விடுமுறை நாள் செலாவணி சட்டம் 1881ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூல மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளுர் விடுமுறை நாளான 05.05.2017 வெள்ளிக்கிழமை  அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கிடவும் ஆணையிடப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதிரை பேருந்து நிலையத்தில் கட்டணம் வசூலிக்க ஏலம் - டெண்டர் அறிவிப்பு !

அதிராம்பட்டினம், ஏப்-28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் 2017 -18 ஆம் ஆண்டிற்கு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நுழைவு கட்டணம், பேருந்து நிலைய கழிப்பிட கட்டணம், சாலையோர அங்காடி கட்டணம், ஆடு அடிக்கும் தொட்டி கட்டணம் வரும் 01.05.2017 முதல் 31.03.2018 வரை வசூலிக்க உரிமம் வழங்குவது தொடர்பாக எதிர்வரும் மே-3 ந்தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில் மறுஏலம்-மறுடெண்டர் விட அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதில் பங்குபெற ஆர்வம் உள்ளவர்கள் பேரூராட்சி நிர்வாகம் நிர்ணயித்துள்ள கீழ்காணும் டேவணித் தொகையை வரும் மே. 3 ந்தேதி காலை 10 மணிக்குள் செலுத்தி ஏலத்தில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சாலையோர அங்காடி கட்டணம் வசூலிக்க ( டேவணித் தொகை ரூ. 250,000  )
பேருந்துகள் நுழைவு கட்டணம் வசூலிக்க ( டேவணித் தொகை ரூ.100,000 )
பேருந்து நிலைய கழிப்பிட கட்டணம் ( டேவணித் தொகை ரூ.100,000  )
ஆடு அடிக்கும் தொட்டி கட்டணம் ( டேவணித் தொகை ரூ.20,000  )

மேலதிக தகவல் பெற மற்றும் தொடர்புக்கு அதிரை பேரூராட்சி அலுவலக அறிவிப்பு பலகையைக் காணவும்.

மரண அறிவிப்பு ( சரபுனிஷா அவர்கள் )

அதிரை நியூஸ்: ஏப்-28
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.கா அப்துல் லத்திப் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி டி. பகுருதீன், டி. அப்துல் மஜீது, டி. தீன் முஹம்மது ஆகியோரின் மருமகளும், சாகுல் ஹமீது, மர்ஹூம் அமானுல்லா, ஜபருல்லா, அப்துல் ஜலீல், அலி அக்பர், ஹாஜா முகைதீன் ஆகியோரின் சகோதரியும், அப்துல் ரெஜாக், நஜ்முதீன் ஆகியோரின் சிறிய தாயாருமாகிய சரபுனிஷா அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை ( 29-04-2017 ) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.

மழை வேண்டி அதிரையில் சிறப்புத் தொழுகை: பங்கேற்க அழைப்பு !

கோப்புப்படம்
அதிராம்பட்டினம், ஏப்-28
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை சார்பில் வறண்டு காணப்படும் பகுதிகளுக்கு மழை வேண்டி எதிர்வரும் மே 2 ந் தேதி செவ்வாய்கிழமை காலை 7 மணியளவில் ஈசிஆர் சாலை பிலால் நகர் கிராணி மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற உள்ளது.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் தொழுகையில் திரளாக கலந்துகொண்டு பங்கேற்குமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதிரையில் நாளை ஏப்.29 ந் தேதி முதல் 3 நாள் கண்காட்சி: பங்கேற்க அழைப்பு !

அதிராம்பட்டினம், ஏப்-28
அதிராம்பட்டினம், மானுட நல மையம் சார்பில், 'அமைதியை நோக்கி' எனும் தலைப்பில் நாளை ஏப்.29 ந் தேதி சனிக்கிழமை முதல் 3 நாள் வாழ்வியல் கண்காட்சி அதிராம்பட்டினம், சேர்மன் வாடி, பழைய தனலட்சுமி வங்கி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில், நவீன விஞ்ஞானம், மனித படைப்பு, குழந்தை வளர்ப்பு, குடும்பவியல், பெண்ணுரிமை, மரணத்திற்குப் பின், புத்தக அரங்கம், வீடியோ அரங்கம் ஆகியன இடம்பெற உள்ளது.

* தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை.
* அனைவருக்கும் அனுமதி இலவசம்,
* பெண்களுக்கு மே-1 ந் தேதி அன்று பிரத்தியோக ஏற்பாடு,

இக்கண்காட்சியில் அனைத்து சமுதாய பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைய அதிராம்பட்டினம் மானுட நல மையம் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
9629229919 / 9952778890

மரண அறிவிப்பு ( பாத்துமுத்து ஜொஹ்ரா அவர்கள் )

அதிரை நியூஸ்: ஏப்-28
அதிராம்பட்டினம், ஹாஜா நகர் கே.ஆர்.கே என்கிற செய்யது இப்றாஹிம் அவர்களின் மகளும், ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும், அபுல் ஹசன் அவர்களின் சகோதரியும், சாதுல்லா, அப்துல் காதர், அப்துல் ரவூப், புஹாரி ஆகியோரின் தாயாரும், உபயதுல்லா அவர்களின் சிறிய தாயாருமாகிய பாத்துமுத்து ஜொஹ்ரா அவர்கள் இன்று வெற்றிலைக்காரத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.

மரண அறிவிப்பு ( அப்துல் ஜப்பார் அவர்கள் )

அதிரை நியூஸ்: ஏப்-28
அதிராம்பட்டினம், நடுத்தெரு வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம்
அபூபக்கர் அவர்களின் மகனார் முண்டாங்கனி ஜப்பார் என்கிற அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று காலை வண்டிப்பேட்டை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.