![]() |
| ஏ.எல் மெட்ரிக். பள்ளி |
அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சிஎம்பி லேன் ஏஎல் மெட்ரிக். பள்ளி வளாகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
கிராஅத்தை அடுத்து, தலைமை ஆசிரியை பஷீரா ஆண்டறிக்கை வாசித்தார். இந்நிகழ்வில், 11 ஆலிமாக்கள், 22 இல்லத்தரசியர் பட்டம் பெற்றனர்.
சிறப்பு அழைப்பாளராக காமிலா (A-Z) முஹைதீன் கலந்துகொண்டு, இறைவனையும் இறைத்தூதரையும் இறைமார்க்கத்தையும் தெரிந்துகொள்வதற்கு மார்க்க அறிவு என்பது எவ்வளவு கட்டாயமானது எனும் கருவில் உள்ளத்தில் உறைப்பது போன்ற சிறப்பான உரையொன்றை நிகழ்த்தினார்.
பட்டம் பெற்ற மணவியர், அகீதா எனும் கொள்கை விளக்கம் பற்றியும் புகழ்பெற்ற இமாம்களைப் பெற்ற அன்னையரின் தியாக வாழ்க்கை குறித்தும் ஈமான் எனும் இறைநம்பிக்கை, அறிவுக்கு ஒத்துவரவேண்டும் என்று நிபந்தனை வைப்பது மிகவும் ஆபத்தானது என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
இறுதியாக, ஸவ்தா அஹ்மது ஹாஜா, தற்கால இளம் பெண்கள் பலரின் வாழ்க்கை சீரழிந்து போவதற்கு, மார்க்கக் கல்வி இல்லாமையே காரணம் எனும் கருத்தோடு, அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி, மாணவிகளை எவ்வாறெல்லாம் செம்மைப்படுத்துகிறது என்று விளக்கமாக நிறைவுரையாற்றினார். துஆவோடும் மன நிறைவோடும் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.
செய்தி வெளியீடு: அதிரை தாருத் தவ்ஹீத்





















































