.

Pages

Thursday, August 29, 2019

தேசிய விளையாட்டு தினத்தில் அரசுப் பள்ளி மாணவன் கெளரவிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 29
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், இறகுப் பந்து போட்டியில் சாதனை நிகழ்த்திய அரசுப் பள்ளி மாணவன் இன்று (29-08-2019) வியாழக்கிழமை கெளரவிக்கப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி 3 ஆம் வகுப்பு மாணவன் அ.ஆத்திப் அகமது. இவர், பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற 10 வயதிற்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறகுப்பந்து போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், சங்க மாவட்ட உயர்கல்விக்கான வழிகாட்டுதல் பிரிவு (Higher studies guidance ) தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் கலந்துகொண்டு,சாதனை மாணவன் ஆத்திப் அகமதுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம். நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம். முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியை எஸ். மாலதி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரிமா சங்க முன்னாள் தலைவர் என். ஆறுமுகச்சாமி, இணைச் செயலாளர் எம். முகமது அபூபக்கர், பள்ளி ஆசிரியர் டேவிட் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

காதிர் முகைதீன் கல்லூரியில் 'ஃபிட் இந்தியா' உறுதிமொழி ஏற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 29
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் சார்பில், 'ஃபிட் இந்தியா' திட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரியில் இன்று (29-08-2019) வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், 40 க்கும் மேற்பட்ட கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டு உடல் உறுதியை பேணுவது குறித்து உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பட்டினை கல்லூரி தேசிய மாணவர் படை பொறுப்பு அலுவலர் பேராசிரியர் சி.அப்பாஸ் செய்திருந்தார்.
 

இலவச கண் அறுவை சிகிச்சை செய்த 103 பேருக்கு மருத்துவப் பரிசோதனை!

அதிராம்பட்டினம், ஆக. 29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனையில் கடந்த ஜூலை 27 ந் தேதி நடைபெற்றது. இதில், 815 பேருக்கு சோதனை செய்ததில் 103 பேருக்கு கண்புரை நோய் இருப்பது கண்டறிந்து, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் IOL அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினரால், கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 103 பயனாளிகளுக்கு அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனையில் இன்று (29-08-2019) வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. இதில், கண் பார்வைத்திறன், கருவிழியில் புண் ஏற்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும்,  கண்ணில் சொட்டு மருந்து போடும் முறைகள் பற்றி விளக்கப்பட்டன. பார்வைத்திறன் குறைபாடுகள் உள்ள பயனாளிகளுக்கு இலவசமாக மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல், செயலாளர் எம். நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம். முகமது முகைதீன், சங்க இயக்குநர்கள் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், முன்னாள் தலைவர் என். ஆறுமுகச்சாமி, இணைச் செயலாளர் எம். முகமது அபூபக்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

Wednesday, August 28, 2019

உலமாக்கள் ~ முஅத்தீன்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அதிரை நியூஸ்: ஆக.28
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை-புதுப்பித்தல்-நலத்திட்டம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்தல் தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டதில் இவ்வாரியத்தில் மொத்தம் 454 நபர்கள் பதிவு பெற்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

இத்திட்டதின் மு்லம் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு பல நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றது. பதிவு பெற்ற உறுப்பினர்கள் தங்களது பதிவினை ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஆனால், பெரும்பான்மையானோர் புதுப்பிக்க தவறிவிடுகின்றனர், இதனால், பல்வேறு நலத்திட்டங்கள் வாரிய உறுப்பினர்கள் பெறமுடியாத                  நிலை ஏற்படுகின்றது. எனவே, நீண்டகாலமாக புதுப்பித்துக்கொள்ளத் தவறியவர்கள் புதுபித்துக்கொள்ளவதற்காக வருகின்ற 04-09-2019 அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில், பதிவினை புதுபித்துக்கொள்ளவும், பதிவு அட்டை தொலைத்தவர்கள் ரூ.20 செலுத்தி புதிய அட்டை பெற்றுக்கொள்ளவும். மேலும். புதிய உறுப்பினராக சேரவிருப்பவர்களுக்கும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுபவர்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், புதுப்பித்தல்-சேர்க்கை விண்ணப்பதாரர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிவாசலில் பணிபுரிவதற்கான சான்று மற்றும் வஃக்ப் வாரிய கண்காணிப்பாளரின் சான்று, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை மற்றும் பாஸ்போட் அளவு புகைப்படம் 2 உடன் எடுத்து வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

ஏரிப்புறக்கரையில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம்!

அதிராம்பட்டினம், ஆக. 28
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்ட முகாம் அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.

இதில், பட்டுக்கோட்டை தாலுகா தனி வட்டாட்சியர் ராமச்சந்திரன் (ஆதிதிராவிடர் நலன்) கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மொத்தம் 20 மனுக்களை பெற்றார். இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியம்மாள், ஏரிப்புறக்கரை நிர்வாக அலுவலர் அருண்மொழி, வேளாண்மை உதவி அலுவலர் ஜெயபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்பட்டு மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு எட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Tuesday, August 27, 2019

மரண அறிவிப்பு ~ 'சமூக ஆர்வலர்' முகமது அப்துல்லா (வயது 57)

அதிரை நியூஸ்: ஆக. 27
அதிராம்பட்டினம், ஆலடித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நெய்னா முகமது சாஹிப் அவர்களின் மகனும், அபுல் ஹசன் அவர்களின் சகோதரரும், கமாலுதீன், அப்துல் ஜப்பார், அப்துல் ரஹ்மான், அலி அக்பர் ஆகியோரின் மச்சானும், ஆதிக் நெய்னா, அமீர் சுஹைல் ஆகியோரின் தகப்பனாரும், அகமது ஜமால், ராஜிக் அகமது ஆகியோரின் மாமனாருமாகிய முகமது அப்துல்லா (வயது 57) அவர்கள் இன்று மாலை சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (27-08-2019) இரவு இஷா தொழுகைக்கு பிறகு  தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

காதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி விலங்கியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரிச்செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து உரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினார்.

விலங்கியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஏ. அம்சத் வரவேற்றுப் பேசினார்.
கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் எம். முகமது முகைதீன், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.பி கணபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக கல்லூரி விலங்கியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் செய்யது முகமது ஷா, ஹபீப் முகமது, நசீர் அகமது, அமானுல்லா ஹமீது, குமாரசாமி, ரவீந்திரன், சிவசுப்பிரமணியன் ஆகியோர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். மேலும், கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஆசைமணி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) சூரத்குமார், அஷிர் ரமேஷ், வழக்குரைஞர் தர்மராஜன், என்.உதயகுமார், மணிகண்டன், மயில்வாகனன், பேராசிரியர் வீரப்பன், சிவகுமார், பேராசிரியர் செழியன், வீரபாண்டியன், பேராசிரியர் கவிதா, ஆசிரியை கார்த்திகை செல்வி, பேராசிரியர் சுப்பிரமணி, ராமநாதன், வழக்குரைஞர் வீரபத்திரன், ராஜா தம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

விழாவில், கடந்த காலங்களில் கல்லூரி விலங்கியல் துறையில் ஆற்றிய சாதனைகள், துறைப் பற்றிய முக்கியத் தகவல்கள் அடங்கிய 'விழா மலர்' வெளியிடப்பட்டன. முதல் பிரதியை கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் வெளியிட்டார். கல்லூரி முன்னாள் மாணவர் பேராசிரியர் செய்யது முகமது ஷா பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியினை, கல்லூரிப் பேராசிரியை கானப்பிரியா தொகுத்து வழங்கினார்.  முடிவில், விலங்கியல் துறை முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முத்துக்குமாரவேல் நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை பேராசிரியர்கள் ஓ.சாதிக்,  மகாராஜன், சுகுமாரன், வசந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

இவ்விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், 300 க்கும் மேற்பட்ட கல்லூரி விலங்கியல் துறை முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கல்லூரி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் அசைபோட்டனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்த வேண்டுமென, கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஒருமித்த கருத்தாகவும், விருப்பமாகவும் இருந்தது.