கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தடுப்பூசியினை போட்டுக் கொண்டார்கள்
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் கோவிட் -19 தடுப்பூசி முகாமினை இன்று (03.02.2021) ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் கோவிட் தடுப்பூசியினை போட்டுக் கொண்டார். பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவதுää
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இன்றைய தேதி (03.02.2021) 24 மையங்களில் ஒவ்வொரு வட்டாரங்களிலும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியிலும் 150க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனையிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நமது மாவட்டத்தில் 4700 பேருக்கு கொரோனா தடுப்பூசி; போடப்பட்டுள்ளது அதே போன்று ஒவ்வொரு முகாம்களிலும் கொரோனா தடுப்பூசி மருத்துவத்துறை மூலமாக போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது முதலில் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்களுக்கு முன் உரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் அதே போன்று அடுத்த கட்டமாக நேற்றிலிருந்து முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி நானே போட்டுக் கொண்டேன்ää அந்தவகையில் வந்து இந்த தடுப்பூசியின் மூலம் எந்த ஒரு பக்க விளைவுää பாதிப்பும் இல்லை யாரும் பயப்பட வேண்டாம.; அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்ளலாம். தற்போது வரை நமது நாட்டில் 35 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கெரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோன்று நமது மாவட்டத்தில் சுமார் 4700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூர் முதல்வர் அவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டார் மற்றும் நானும் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளேன் அரசு அறிவுரையின்படி தடுப்பூசி போடும் பணி நடைபெற்றிருக்கிறது இப்போது வரைக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவே யாரும் பயப்பட வேண்டாம் என்று அனைவருக்கும் கேட்டுக்கொள்கிறேன்
இந்நிகழ்வில் மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ) மரு.மருதுதுரை சுகாதாரத்துறை இணை இயக்குனர் மரு.ராமுää துணை இயக்குனர் மரு.ரவீந்திரன். மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உடனிருந்தனர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.