இந்த நிலையில் கவுன்சிலர் சே.மு.ஹாஜா முகைதீன் அவர்கள் தலைமையில், கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பேரூராட்சி அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தகவலறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போரட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து அதிரை நியூஸ் செய்தியாளரிடம் பேசிய கவுன்சிலர் ஹாஜா முகைதீன், தண்ணீர் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படவில்லையெனில், சாலை மறியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்.



லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நடவடிக்கை இதுதானா? ADMK தொண்டரில் இவர் மட்டும் பொது பிரச்சனை கையில் எடுத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது - வாழ்த்துக்கள், சாலை மறியல் வேண்டாம் பெரிய பூட்டை வாங்கி பேரூராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டுடுங்க, ஏதாவது சொல்லி அதிகாரிகள் சொதப்பிடுறாங்க,. விடாதிங்க.
ReplyDelete