.

Pages

Tuesday, May 5, 2015

AFFA கால்பந்தாட்ட போட்டி: இரண்டு ஆட்டங்களில் பட்டுக்கோட்டை - மேலநத்தம் அணிகள் வெற்றி !

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 11 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று [ 05-05-2015 ] மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இன்றைய முதல் ஆட்டத்தில் பட்டுக்கோட்டை அணியினரோடு பிச்சினிக்காடு அணியினர் மோதினார்கள். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 2 கோல் அடித்து பட்டுக்கோட்டை அணியினர் வெற்றிபெற்றனர்.

இரண்டாவது ஆட்டமாக மதுக்கூர் அணியினரும், மேலநத்தம் அணியினரும் மோதினார்கள். இதில் 3-0 என்ற கோல் கணக்கில் மேலநத்தம் அணியினர் வெற்றி பெற்றனர்.

முதல் ஆட்டத்தின் அம்பயர்களாக முபீஸ், அவருக்கு உதவியாக ஷபா ஆகியோர் பணியாற்றினர். இவர்கள் இருவரும் கால்பந்து தொடர்போட்டிகளில் நடுவர்களாக பணியாற்ற கால்பந்து கழகத்தின் மூலம் தேர்வு எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது ஆட்டத்தின் அம்பயர்களாக வாசு தேவனும், ஷபா ஆகியோர் பணியாற்றினார். நிகழ்சிகள் அனைத்தையும் வழக்கம் போல் அஹமது ஹாஜா இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.

இன்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்களை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.

நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. இதில் முதல் ஆட்டமாக அதிரை எஸ்எஸ்எம்ஜி அணியினரோடு, பட்டுக்கோட்டை விவேகானந்தா அணியினரும், இரண்டாவது ஆட்டமாக ஆலத்தூர் அணியினரோடு பட்டுக்கோட்டை அணியினரும் மோத இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நாளைய ஆட்டம் சரியாக மாலை 4.45 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

2 comments:

  1. மெஸ்சி ( Messi ) போல் வருங்கால விளையாட்டு வீரர் வந்துள்ளார் - குட்டி பயனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Plz publishing for player and audience photos

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.