இன்றைய முதல் ஆட்டத்தில் பட்டுக்கோட்டை அணியினரோடு பிச்சினிக்காடு அணியினர் மோதினார்கள். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 2 கோல் அடித்து பட்டுக்கோட்டை அணியினர் வெற்றிபெற்றனர்.
இரண்டாவது ஆட்டமாக மதுக்கூர் அணியினரும், மேலநத்தம் அணியினரும் மோதினார்கள். இதில் 3-0 என்ற கோல் கணக்கில் மேலநத்தம் அணியினர் வெற்றி பெற்றனர்.
முதல் ஆட்டத்தின் அம்பயர்களாக முபீஸ், அவருக்கு உதவியாக ஷபா ஆகியோர் பணியாற்றினர். இவர்கள் இருவரும் கால்பந்து தொடர்போட்டிகளில் நடுவர்களாக பணியாற்ற கால்பந்து கழகத்தின் மூலம் தேர்வு எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது ஆட்டத்தின் அம்பயர்களாக வாசு தேவனும், ஷபா ஆகியோர் பணியாற்றினார். நிகழ்சிகள் அனைத்தையும் வழக்கம் போல் அஹமது ஹாஜா இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.
இன்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்களை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.
நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. இதில் முதல் ஆட்டமாக அதிரை எஸ்எஸ்எம்ஜி அணியினரோடு, பட்டுக்கோட்டை விவேகானந்தா அணியினரும், இரண்டாவது ஆட்டமாக ஆலத்தூர் அணியினரோடு பட்டுக்கோட்டை அணியினரும் மோத இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நாளைய ஆட்டம் சரியாக மாலை 4.45 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

மெஸ்சி ( Messi ) போல் வருங்கால விளையாட்டு வீரர் வந்துள்ளார் - குட்டி பயனுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeletePlz publishing for player and audience photos
ReplyDelete