.

Pages

Wednesday, May 6, 2015

AFFA கால்பந்தாட்ட போட்டி: பட்டுக்கோட்டை இரு அணிகளும் வெற்றி !

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் மூன்றம் நாள் ஆட்டம் இன்று [ 05-05-2015 ] மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முதல் ஆட்டமாக பட்டுக்கோட்டை விவேகானந்தா அணியினரும், அதிரை எஸ்எஸ்எம்ஜி அணியினரும் மோதினர். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 2-1 என்ற கணக்கில் கோல் அடித்து பட்டுக்கோட்டை அணியினர் வெற்றிபெற்றனர்.

இரண்டாவது ஆட்டமாக பட்டுக்கோட்டை ஏவிகே அணியினரும், அதிரை AFFA பி அணியினரும் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமநிலை எடுத்து இருந்தனர். பின்னர் டை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டு 4-2 என்ற கணக்கில் கோல் அடித்து பட்டுக்கோட்டை ஏவிகே அணியினர் வெற்றிபெற்றனர்.

இன்றைய ஆட்டங்களின் அம்பயர்களாக வாசு தேவனும், ஷபா ஆகியோர் பணியாற்றினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழக்கம் போல் அஹமது ஹாஜா இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.

இன்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்களை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.

நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. இதில் முதல் ஆட்டமாக பட்டுக்கோட்டை அணியினரோடு மேலநத்தம் அணியினரும், இரண்டாவது ஆட்டமாக எவிகே பட்டுக்கோட்டை அணியினரோடு பட்டுக்கோட்டை விவேகானந்தா அணியினரும் மோத இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நாளைய ஆட்டம் சரியாக மாலை 4.45 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.