.

Pages

Tuesday, September 1, 2015

அதிரையில் இளைஞர் பெருமன்றம் சார்பில் பிரச்சார பயணம் !

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வரும் செப்டம்பர்-10 ந்தேதி அன்று வேலையின்மை, மதுவிலக்கு, கல்வி வியாபாரம், ஆணவக் கொலைகள், சாதிய ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தை நோக்கி பேரணி மற்றும் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.
       
போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் ஆகஸ்ட்-29 ந்தேதி தொடங்கி செப்டம்பர் 1, 5 ஆகிய ஐந்து தினங்கள் தஞ்சை மாவட்டத்தின் திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், அம்மாப்பேட்டை, தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், சேதுபாவாசத்திரம், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோரிக்கை விளக்க பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது.

அதிரையில் நடைபெற்ற கோரிக்கை விளக்க தெருமுனை பிரச்சாரத்திற்கு இளைஞர் பெருமன்றம் செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் என். காளிதாஸ், இளைஞர் பெருமன்றம் மாவட்ட பொருளாளர் எம். முஜிபூர் ரஹ்மான், இளைஞர் பெருமன்றம் நகர தலைவர் ஹாஜா முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ப. தர்மராஜ் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அதிரையில் கடைத்தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதில் இளைஞர் பெருமன்றம் அமைப்பினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.

ஜான்பாண்டியன் தாக்கப்பட்டதை கண்டித்து அதிரையில் கண்டன ஆர்ப்பாட்டம் !

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த அய்யம்பேட்டை அருகே உள்ள அகரமாங்குடியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் கட்சி கொடி ஏற்றுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக தஞ்சையில் இருந்து ஜான்பாண்டியன் காரில் அக்கிராமத்துக்கு சென்றார். அவருடன் கட்சியின் மாவட்ட செயலாளர் தியாக காமராஜ் ஒரு காரிலும், கட்சியினர் மற்றொரு காரிலும் சென்றனர். அப்போது ஜான்பாண்டியனுடன் வந்த கார்கள் மீது சிலர் சரமாரி கற்களை வீசினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன், மாவட்ட செயலாளர் தியாக காமராஜ் ஆகியோர் மீது  தா‌க்குத‌ல் நடத்திய நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ்  கைது செய்ய வலியுறுத்தி அதிரை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு விவேகானந்தன் தலைமை வகித்தார். அவிஸோ அதிரை சேக் அப்துல்லா முன்னிலை வகித்தார். கண்டன  உரையை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தியாக காமராஜ் ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக விசிக கட்சி அதிரை நகர செயலாளர்  புருசோத்தமன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இதில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

சாதனை நிகழ்த்திய காதிர் முகைதீன் பள்ளி மாணவர்களுக்கு மாநில அமைச்சர் பாராட்டு !

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆர்சுத்திப்பட்டி கிராமத்தில் மாவட்ட அளவில் 48வது குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாண்புமிகு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.  விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமை தாங்கினார்.

இதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 47 வெற்றி புள்ளிகள் பெற்று கல்வி மாவட்ட அளவில் முதலாம் இடம் பெற்றனர்.

கீழோர் பிரிவில்
1. அஜ்மல் கான் 8B     200 மீட்டர் (முதலாம் இடம்)
2. அப்சர் கான்   7A     80 மீட்டர்  தடை தாண்டுதல் (முதலாம் இடம்)
3. அஜ்மல் கான்  8B
4. ஜவ்ஹித்  8E   4X100 மீட்டர் தொடர் ஓட்டம் முதலாம் இடம்
5. முஹமது சுஹைல்     8A
6. முரளி தரன்   8C

மேலோர் பிரிவில்
1. முத்துராசு   9B  :              400 மீட்டர் , 600 மீட்டர் முதலாம் இடம்
2. ஆதில் அஹமது 10E நீளம் தான்டுதல், மும்முறைத்    தாண்டுதல்  முதலாம் இடம்
3. அப்துல் ஹமீத்    9E              100மீட்டர் தடை தாண்டுதல் முதலாம்  இடம்
4. பயாஸ் அஹமது 10C            1500 மீட்டர்   மூன்றாம் இடம்
5. முஷர்ரப்                       9E
6. முத்துராசு                    9B
7. ஆதில் அஹமது   10E          4X100 மீட்டர் தொடர் ஓட்டம் முதலாம் இடம்
8. அப்துல் ஹமீத்         9E

விழாவில் முதன்மை கல்வி அலுவலர் திரு.ரெ.திருவளர்செல்வி, அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் திரு.ஏ.வி.சூரியநாராயணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.வி.பஞ்சமூர்த்தி, ராகவாம்பாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.வி. ராஜகோபால், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு. வி.ராஜேந்திரன், பள்ளி வளர்ச்சிக்குழு துணைத் தலைவர் திரு.எம்.கோவிந்தராஜ், பள்ளி வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் திரு.சி.பக்கிரிசாமி, திரு.ஆர்.ராமையன், திரு.ஏ.ராஜேந்திரன், திரு.எம்.சரவணன் மற்றும் ஏராளமான மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

சாதனை நிகழ்த்திய காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வீட்டு வசதி நகர்புற வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் திரு ஆர் . வைத்திலிங்கம் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என். சுப்பையன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி இர. திருவளர் செல்வி ஆகியோர் முன்னிலையில் பரிசுகளையும் வெற்றிக் கோப்பையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் பள்ளி மாணவர்களை நிர்வாகம், தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் அலுவலக உதவியாளர்கள் பாராட்டினார்கள்.



செடியன் குளம் கிணற்றின் ஓட்டையை அடைக்கும் முயற்சியில் பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் !

அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளம் மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த குளம் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் சாதி மத பேதமின்றி நீராடி மகிழ்வதற்கு மாத்திரமல்ல, ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்தரக்கூடியதாகவும், நீர் ஆதாரத்தை இப்பகுதிகளுக்கு வாரி வழங்கக்கூடியதாகவும் இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் செடியன் குளத்தில் நீர் வரத்து அதிகரித்தது. பொதுமக்கள் குளிக்கும் அளவிற்கு தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது. மீண்டும் சில நாட்களுக்கு மழை தொடர்ந்து பெய்தால் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வழிந்து ஓடும் நிலை எட்டிவிடும்.

செடியன் குளத்தின் தென்கரையில் பழுதடைந்த கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றின் வழியே கசிந்து வீணாக வெளியேறும் குளத்தின் நீரை பாதுகாக்கும் பொருட்டு கிண்ணற்றின் அடியில் உள்ள ஓட்டையை அடைக்கும் முயற்சியில் பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்த பணிகளுக்காக ஊழியர்கள் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
 
 
 
 
 
 

கலாம் காலிபர் ஷூ’வுக்காக CMN சலீம் தரும் யோசனை !

போலியோவால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும் பயன்படுத்தும் காலிபர் ஷூ, 3 முதல் 5 கிலோ எடையில் மெட்டல் மற்றும் பிளாஸ்டிக்கால் ஆனதாக இருக்கும். இந்த காலிபர்களை அணியவும், நடக்கவும் மாற்றுத்திறனாளிகள் படும் வேதனையை மற்றவர்களால் உணர முடியாது. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் காலிபரின் மேல் விளிம்பு தொடையிலும், மூட்டிலும் முட்டி மோதி கடுமையான வலியை ஏற்படுத்தும்.

இத்தகைய மாற்றுத்திறனாளிகளுக்கு தீர்வு காணும் நோக்கில், ராக்கெட் தொழில்நுட்பத்தில் ஏவுகணையின் எடையைக் குறைக்க பயன்படுத்தப்படும் பாலி புரோபைலின் எனப்படும் ‘தெர்மோ பிளாஸ்டிக் பாலிமரை’ கொண்டு வெறும் 400 கிராம் எடையில் காலிபர் ஷூவை மறைந்த 'மாமேதை' அப்துல் கலாம் உருவாக்கினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறையினர் தற்போது வழங்கும் எடை அதிகம் கொண்ட மெட்டல், பிளாஸ்டிக் காலிபர்களைத் தவிர்த்து, கலாம் பரிந்துரைத்த எடை குறைவான காலிபர் ஷூவை பயன்படுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சமூக நீதி அறக்கட்டளை நிறுவனரும், பிரபல கல்வியாளருமாகிய  CMN சலீம் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிந்திருக்கும் யோசனை:
'தமிழகத்தில் 1.5 இலட்சம் மாற்றுத்திறநாளிகள் வாழ்கின்றனர். சாலை விபத்துகளில் கை, கால்ககளை இழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது. அரசும், சில தனியார் தொண்டு நிறுவனங்களும் இவர்களுக்கு இலவசமாக செயற்கை மெட்டல் ஷூ வழங்குகின்றனர்.

அதிக எடை கொண்ட (4 kg) இதை அணிந்துகொண்டு வலியோடும் வேதனையோடும் வாழ்வை ஓட்டுகின்றனர். ஓடி ஆடி உழைப்பதற்கு உள்ளம் துடிக்கின்றது.ஆனால் உடல் முடங்கிபோய் கிடக்கின்றனர்.

அப்துல் கலாமின் ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்பு தான் எடை குறைந்த
பாலி புரோபைலின் ஷூ (400 g) மாற்றுத் திறனாளிகள் வாழ்வில்
மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். விலை ஏறக்குறைய 10 ஆயிரம் ரூபாய்.

இப்படி சிந்தித்துதான் பார்ப்போமே. தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12,620 கிராம பஞ்சாயத்துகள் எப்படி பார்த்தாலும் குறைந்தது 10 ஆயிரம் பள்ளிவாசல்களில் வெள்ளி தோறும் ஜும்ஆ நடைபெறுகிறது. கிராம புறங்களில் உள்ள 4 ஆயிரம் பள்ளிகளை தவிர்த்துவிட்டு மீதம் உள்ள 6 ஆயிரம் பள்ளிகளில், இறைவன் நாடினால், வருகின்ற ரமலான் மாதத்தின் ஒவொரு ஜும்ஆ விலும் குறைந்தது 6 நபருக்கு இந்த அப்துல் கலாம் காலிபர் ஷூ வை பள்ளிவாசல் சார்பாக வழங்கினால், தமிழகத்தில் உள்ள 1.5 இலட்சம் மாற்றுத்திறனாளிகளும் 4 வெள்ளிக் கிழமைகளில் மறுவாழ்வு பெறுவார்.

மக்கள் தங்கள் உள்ளங்களில் பள்ளிவாசல்களை காட்டுவர் இந்திய சமூகத்திற்கு இயல்பாகவே ஒரு குணம் உண்டு. நெருக்கடியான நேரத்தில் தனக்கு உதவியவனை தான் இங்கே குல தெய்வமாக கும்பிடுகின்றனர்' என யோசனை கூறியுள்ளார்.

கோப்பையை கைப்பற்றுமா WFC அணி ?

விவேகானந்தன் கால்பந்து கழகம் நடத்தும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்து வருகிறது.

இந்த தொடர்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு  மாவட்டங்களை சேர்ந்த தலைசிறந்த அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இதில் அதிரையை சேர்ந்த WFC அணியும் தொடர்போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறது.

இறுதி போட்டியில் தகுதி பெற அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் அணியின் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தொடரின் கோப்பையை WSC அணி கைப்பற்றுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரித் - சித்திக்
 
 
 

TNTJ அதிரை கிளையின் கூட்டுக்குர்பானி திட்டம் அறிவிப்பு !


TNTJ அதிரை கிளையின் சார்பில் வழக்கம் போல் இந்த வருட ஹஜ் பெருநாளின் போது கூட்டு குர்பானி திட்டத்தை செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டதை அடுத்து, மாட்டின் ஒரு பங்கின் விலை ₹ 1500/- என நிர்ணயம் செய்து பொதுமக்களிடமிருந்து பங்குகள் பெற்று வருகின்றனர். இதில் கிடைக்கும் தொகைகள் அனைத்தும் ஏழை எளியோரின் மருத்துவ உதவிக்காக மாத்திரம் செலவிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புக்கு:
சேக்தாவூது ( அதிரை கிளை செயலாளர் ) 9500539195, 
எஸ்.பி பக்கீர் முகைதீன் ( அதிரை கிளை துணை தலைவர் ) 9500821430

இது தொடர்பாக அதிரை TNTJ சார்பில் அதிரை பகுதிகளில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது...

'மாமேதை' அப்துல் கலாம் வீட்டில் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் !

மறைந்த மாமேதை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஜனாஸா அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் கடந்த [ 30-07-2015 ]அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. மாமேதை அப்துல் கலாம் அவர்களின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பொதுமக்கள் இராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்திற்கு வந்து இருந்தனர்.

இந்நிலையில் காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் அவர்களின் தலைமையில், 'சிக்கன் டிக்கா' அபூ பக்கர், முஹம்மது சாலிஹ் ஆகியோர் இராமேஸ்வரத்தில் உள்ள 'மாமேதை' அப்துல் கலாம் அவர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று அங்கு அவரது மூத்த சகோதரர் முத்து மீரா மரைக்காயர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அப்துல் கலாம் இல்லத்தில் உள்ள 'மிஷன் ஆப் லைஃப்' கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.