கூட்டத்திற்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் சேர்மன் மரைக்கா கே. இத்ரீஸ் அஹமது தலைமை வகித்தார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பொருளாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, துணை சேர்மன் இர்பான் சேக், மான் ஏ சேக், ஏ. ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட பொருளாளர் எஸ். முத்துகுமார் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட துணை சேர்மன் ஜெயக்குமார். மாவட்ட செயலாளர் சேக் நாசர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட சேர்மன் எஸ். ராஜமாணிக்கம் சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் கிளை புதிய பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பட்டுக்கோட்டை கிளை சேர்மன் சுவாமிநாதன் மதுக்கூர் கிளை சேர்மன் வழக்கறிஞர் கோவிந்தராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு வெள்ள நிவராணப்பொருட்கள், 56 குருதிக்கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதிதாக இணைந்த ஆயுட்கால உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இவற்றை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட சேர்மன் எஸ். ராஜமாணிக்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட பொருளாளர் எஸ். முத்துகுமார், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட துணை சேர்மன் ஜெயக்குமார். மாவட்ட செயலாளர் சேக் நாசர், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் செயலாளர் எம்.நிஜாமுதீன், நிர்வாக கமிட்டி உறுப்பினர் சி. சார்லஸ் மற்றும் நிர்வாகிகள் இணைந்து வழங்கினார்கள்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் கிளை கெளரவ ஆலோசகர், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.
முன்னதாக கடந்த குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களிடமிருந்து கோட்டை அமீர் விருது பெற்ற எம்.பி அபூபக்கர் அவர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட சேர்மன் எஸ். ராஜமாணிக்கம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் சேர்மன் மரைக்கா கே. இத்ரீஸ் அஹமது ஆகியோர் விழா மேடையில் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.
முன்னதாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாக கமிட்டி உறுப்பினர் ஆறுமுகச்சாமி வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி முடிவில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாக கமிட்டி உறுப்பினர் எம். அஹமது அன்சாரி நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், துணை தலைவர் என்.பிச்சை, திமுக நகர செயலாளர் இராம குணசேகரன், அதிரை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், அதிரை அனைத்து ஜமாத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )










































































