அதிராம்பட்டினம், செப்.06
தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு, அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த இயற்கை உணவு வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர். ஏ.அன்பழகன், மகப்பேறு மருத்துவர் டாக்டர் எச். இர்ஷத் நஸ்ரின், டாக்டர் பி.சீனிவாசன், டாக்டர் கலைவாணி, டாக்டர் சி.ஷெரீன் பேகம், மருத்துவ அலுவலர் பாரதி, அரிமா சங்க மாவட்டத் தலைவர் எம். நெய்னா முகமது ஆகியோர் கலந்துகொண்டு, ஊட்டச்சத்தின் அவசியம் குறித்தும், இயற்கை உணவுகளால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், கர்ப்பிணி தாய்மார்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்தான உணவுகள் குறித்தும் பேசினர்.
நிகழ்ச்சியில், கர்ப்பிணி தாய்மார்கள் 20 பேருக்கு காய்கறிகள், முட்டை, ஆப்பிள் உள்ளிட்ட சத்து நிறைந்த இயற்கை உணவுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், அரிமா சங்க மாவட்டத் தலைவர் எம்.அகமது, அதிராம்பட்டினம் அரிமா சங்க முன்னாள் தலைவர் என். ஆறுமுகச்சாமி, இணைச் செயலாளர் எம். முகமது அபூபக்கர், சி.சார்லஸ், முல்லை ஆர்.மதி, குப்பாசா அகமது கபீர், எம்.கே.எம் அபூபக்கர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு, அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த இயற்கை உணவு வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர். ஏ.அன்பழகன், மகப்பேறு மருத்துவர் டாக்டர் எச். இர்ஷத் நஸ்ரின், டாக்டர் பி.சீனிவாசன், டாக்டர் கலைவாணி, டாக்டர் சி.ஷெரீன் பேகம், மருத்துவ அலுவலர் பாரதி, அரிமா சங்க மாவட்டத் தலைவர் எம். நெய்னா முகமது ஆகியோர் கலந்துகொண்டு, ஊட்டச்சத்தின் அவசியம் குறித்தும், இயற்கை உணவுகளால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், கர்ப்பிணி தாய்மார்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்தான உணவுகள் குறித்தும் பேசினர்.
நிகழ்ச்சியில், கர்ப்பிணி தாய்மார்கள் 20 பேருக்கு காய்கறிகள், முட்டை, ஆப்பிள் உள்ளிட்ட சத்து நிறைந்த இயற்கை உணவுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், அரிமா சங்க மாவட்டத் தலைவர் எம்.அகமது, அதிராம்பட்டினம் அரிமா சங்க முன்னாள் தலைவர் என். ஆறுமுகச்சாமி, இணைச் செயலாளர் எம். முகமது அபூபக்கர், சி.சார்லஸ், முல்லை ஆர்.மதி, குப்பாசா அகமது கபீர், எம்.கே.எம் அபூபக்கர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.


























































