அதிராம்பட்டினம், மார்ச்-28
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கடற்கரையை ஒட்டி 3 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி செய்வதற்கு முதல் கட்டப்பணிகள் துவங்கியது. பாத்தி கட்டுதல், பாத்தி சீர்அமைத்தல், பாத்தி மிதித்தல், கட்டை போடுதல், கடல் வாய்க்கால் சீரமைத்தல், கடல் வாய்க்கால் வண்டல் அகற்றுதல், கடல் முகத்துவாரம் சீர் அமைத்தல், போன்ற பணிகள் முடிந்து கடல் நீரை பாத்தியில் பாய்ச்சும் பணி முடிவடைந்து உப்பளங்களில் விளைந்த உப்பை வாரும் பணி துவங்கி உள்ளது. இதில் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அனைத்து உப்பளங்களிலும் உப்பு உற்பத்தி துவங்கி உள்ளது.
இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் செல்வராஜ் என்பவர் கூறுகையில், 'மழைக்காலம் முடிந்து உப்பளங்களில் தேங்கி உள்ள மழைநீரை பம்ப் செட் உதவியுடன் வெளியேற்றி மூன்று மாதங்களாக முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது நேற்று முதல் உப்பு உற்பத்தி துவங்கியுள்ளது' என்றார்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கடற்கரையை ஒட்டி 3 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி செய்வதற்கு முதல் கட்டப்பணிகள் துவங்கியது. பாத்தி கட்டுதல், பாத்தி சீர்அமைத்தல், பாத்தி மிதித்தல், கட்டை போடுதல், கடல் வாய்க்கால் சீரமைத்தல், கடல் வாய்க்கால் வண்டல் அகற்றுதல், கடல் முகத்துவாரம் சீர் அமைத்தல், போன்ற பணிகள் முடிந்து கடல் நீரை பாத்தியில் பாய்ச்சும் பணி முடிவடைந்து உப்பளங்களில் விளைந்த உப்பை வாரும் பணி துவங்கி உள்ளது. இதில் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அனைத்து உப்பளங்களிலும் உப்பு உற்பத்தி துவங்கி உள்ளது.
இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் செல்வராஜ் என்பவர் கூறுகையில், 'மழைக்காலம் முடிந்து உப்பளங்களில் தேங்கி உள்ள மழைநீரை பம்ப் செட் உதவியுடன் வெளியேற்றி மூன்று மாதங்களாக முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது நேற்று முதல் உப்பு உற்பத்தி துவங்கியுள்ளது' என்றார்.

















































