.

Pages

Wednesday, June 28, 2017

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி !

தஞ்சாவூர் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் கலால் துறையின் சார்பில் தஞ்சாவூர் ரயிலடியிலிருந்து சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று புதன்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியானது ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக  அரண்மனை வளாகம் சென்றடைந்தது. திரளான கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும், போதைப்பொருள் உட்கொள்வதால் மன ரீதியான பாதிப்புகள் குறித்த பதாகைகள் ஏந்தியும், போதைப்பொருள்  தொடர்பான விழிப்புணர்வு  கோஷங்களை எழுப்பியும், பேரணியில் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில் அவர் லேடி நர்சிங் கல்லூரி, மன்னர் சரபோஜி கலைக்கல்லூரி, அரசினர் தொழிற்பயிற்சி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 500க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு காவல் படையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், உதவி ஆணையர் (கலால்) இன்னாசிமுத்து, வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் ரெட் கிராஸ் சங்க பிரதிநிதிகள், யூத் ரெட் கிராஸ் பிரநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பஸ் மோதி தூக்கி வீசப்பட்டவர் மிகச்சாதாரணமாக எழுந்து சென்ற அதிசயம் (வீடியோ)

அதிரை நியூஸ்: ஜூன் 28
இங்கிலாந்து நாட்டின் ரீடிங் (Reading) எனும் பகுதியில் அமைந்துள்ள கன் ஸ்ட்ரீட் (Gun Street) சாலையில் நடந்து சென்ற சைமன் ஸ்மித் என்ற 53 வயது நபர் மீது தடம் எண் 17 என்கிற எண் கொண்ட மாடி பஸ் (Double Decker Bus) ஒன்று பகிரங்கமாக மோதி சுமார் 6 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறிந்தது என்றாலும் விபத்து ஏற்பட்ட அடுத்த நொடியே அவர் ஒன்றுமே நடைபெறாததைப் போல் மிகச்சாதாரணமாக எழுந்து நடந்து பப் (Pub) என அறியப்படும் மதுபான விடுதிக்கு 'தண்ணியடிக்க' சென்றுள்ளார். (பேசாம இவன் செத்தே போயிருக்கலாம்னு மனசில தோணுதா?)

சிறிய கீறல் காயங்களுடன் தப்பித்த சைமன் ஸ்மித்தை விபத்து ஏற்படுத்திய பஸ் ஓட்டுனர் கீழிறங்கி வந்து நலம் விசாரித்தார். இதுவே இந்த விபத்து இந்தியாவில் நடைபெற்றிருந்தால் அந்த டிரைவரின் நிலை??? உங்கள் கற்பனைக்கே!

6:2. அவன்தான் உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்தான். பிறகு உங்களுக்காக ஒரு வாழ்க்கைத் தவணையை நிர்ணயித்தான். மேலும், அவனிடத்தில் முடிவு செய்யப்பட்ட மற்றொரு தவணையும் உண்டு. ஆனால் நீங்களோ சந்தேகத்தில் உழல்கின்றீர்கள்.
 
6:60. அவனே இரவில் உங்கள் உயிர்களைக் கைப்பற்றுகின்றான். இன்னும் நீங்கள் பகலில் செய்கின்ற செயல்கள் அனைத்தையும் அறிகின்றான். பிறகு மறுநாள் இந்த வாழ்க்கை எனும் செயற்களத்தில் மீண்டும் உங்களை எழுப்புகின்றான்; நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கைத் தவணையை நிறைவு செய்யும் பொருட்டு! இறுதியில் நீங்கள் அவனிடமே செல்ல வேண்டியிருக்கிறது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பது பற்றி உங்களுக்கு அவன் அறிவித்துவிடுவான்.

10:56. அவனே வாழ்வை அளிக்கின்றான். மேலும், மரணம் அளிப்பவனும் அவனே! மேலும் நீங்கள் அனைவரும் அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!




Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

மரண அறிவிப்பு ( அகமது மரியம் அவர்கள் )

அதிரை நியூஸ்: ஜூன் 27
அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.கா ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மகளும், 'கொய்யாப் பழம் பெயிண்ட் கடை' மர்ஹூம் எம்.எஸ் அப்துல் வாஹிது அவர்களின் மனைவியும், 'அலாவுதீன் இரும்பு கடை' அலாவுதீன் அவர்களின் சகோதரியும், ஜபருல்லா ஆலிம், முகைதீன் அப்துல் காதர், அகமது அஸ்ரப் ஆகியோரின் மாமியாருமாகிய அகமது மரியம் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று ( 28-06-2017 ) காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

அதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நல அறக்கட்டளை சார்பில் பெருநாள் அன்பளிப்பு !

அதிராம்பட்டினம், ஜூன் 28
ஈகைத் திருநாளான ரமலான் பெருநாள் பண்டிகை இஸ்லாமியர்களால் தமிழகமெங்கும் கடந்த திங்கட்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி அதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்க அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிலையில், ரமலான் நோன்பு பெருநாளை முன்னிட்டு நல சங்கத்தில் அங்கம் வகிக்கும் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு கைலிகள், புடவைகள் வழங்கப்பட்டது. மேலும் சங்க பெண் உறுப்பினர் ஒருவருக்கு வாழ்வாதார நிதி உதவி செவ்வாய்க்கிழமை மாலை அளிக்கப்ப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், நல சங்கத் தலைவர் ஹாஜா ஷெரீப், துணைத் தலைவர் சிராஜுதீன், பொதுச்செயலாளர் நூருல் அமீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் மன்சூர் அகமது, முன்னாள் நிர்வாகிகள் சாகுல் ஹமீது, ஜெஹபர் சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 

Tuesday, June 27, 2017

அமீரகத்தில் பழைய, புதிய டிரைவிங் லைசென்ஸ் சட்டங்களில் மாற்றம்!

அதிரை நியூஸ்: ஜூன் 27
அமீரகத்தில் எதிர்வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய டிரைவிங் லைசென்ஸ் மற்றும் புதுப்பிக்கப்படும் பழைய டிரைவிங் லைசென்ஸ்களின் அனுமதி கால அளவில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆரம்பமாக, 21 வயதிற்கு மேற்பட்ட அமீரக குடிமகன்கள், வளைகுடா நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் பிற வெளிநாட்டு ஓட்டுனர்களுக்கு 2 வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் டிரைவிங் லைசென்ஸ்கள் மட்டுமே வழங்கப்படும்.

பின்பு அந்த லைசென்ஸ்கள் 2 வருடங்கள் கழித்து புதுப்பிக்கப்படும் போது அமீரக குடிமகன்கள் மற்றும் வளைகுடா நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 10 வருடங்களுக்கும், பிற வெளிநாட்டினருக்கு 5 வருடங்களுக்கும் புதுப்பிக்கப்படும்.

தற்போது நடைமுறையிலுள்ள டிரைவிங் லைசென்ஸ்களின் கால அளவின் மீது எத்தகைய மாற்றங்கள் இல்லை என்றாலும் அவை புதுப்பிக்கப்படும் போது மட்டும் மேற்கண்ட புதிய மாற்றங்களின்படியே புதுப்பிக்கப்படும்.

அதேபோல் வெளிநாட்டினர் தங்களுடைய டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்கும் போது செல்லத்தக்க அமீரக ரெஸிடென்ஸ் விசாவை (Valid Residence Permit) வைத்திருக்க வேண்டும்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

அமீரகத்தில் ஜூலை மாத சில்லரை பெட்ரோல், டீசல் விற்பனை விலை குறைப்பு !

அதிரை நியூஸ்: ஜூன் 27
அமீரகத்தில் ஜூலை மாதத்திற்கான சில்லரை பெட்ரோல் டீசல் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்ற மாதம் 5 காசுகள் குறைக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் தற்போது லிட்டருக்கு 10 காசுகள் குறைந்துள்ளன .டீசல் லிட்டருக்கு 6 காசுகள் குறைந்துள்ளன.

குறிப்பு: அடைப்புக்குறிக்குள் சென்ற மாத விலை ஒப்பீட்டுக்காக.
சூப்பர் 98 : திர்ஹம் 1.86 (1.96)
சூப்பர் 95 : திர்ஹம் 1.75 (1.85)
ஈ பிளஸ் : திர்ஹம் 1.68 (1.78)
டீசல்  : திர்ஹம் 1.84 (1.90)

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

அதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் ஜூன் 29 ந்தேதி மின்தடை!

அதிராம்பட்டினம், ஜூன்-27
அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் வரும் வியாழக்கிழமை ( ஜூன் 29 ) மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் வரும் ஜூன்-29 ந் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

துபாயில் போக்குவரத்து குற்றங்கள் மீதான அபராதங்கள் மீது 50% தள்ளுபடி !

அதிரை நியூஸ்: ஜூன் 27
அமீரகம் 2017 ஆம் ஆண்டை வழங்கி மகிழும் ஆண்டாக (Year of Giving) அறிவித்து பல்வேறு நற்காரியங்களில் ஈடுபட்டு வருவது அறிந்ததே, அதன் தொடரில் ஒன்றாக 2016 ஆண்டு மற்றும் அதற்கும் முன்பாக நிகழ்த்தப்பட்ட அனைத்து போக்குவரத்து குற்றங்களுக்காக விதிக்கப்பட்டு தற்போது வரை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள அபராதங்களை 50% தள்ளுபடி சலுகையுடன் செலுத்த துபையின் ஆட்சியாளர் ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக துபை போலீஸ் துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்லா கலீபா அல் மெர்ரி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இந்த சலுகை 2017 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட அபராதங்களுக்கு பொருந்தாது. மேலும், துபை போக்குவரத்து துறை அபராதங்களை செலுத்துவதற்காக ஏற்படுத்தியுள்ள அமைப்புக்களான போக்குவரத்து துறை அலுவலகங்கள், துபை போலீஸ், வாகனப் பதிவு மையங்கள், வங்கிகளின் ஆன்லைன் தளங்கள் மற்றும் பல்வேறு அரசு சேவைத்துறை அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரங்கள் (Kiosk) ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம் என்றும், இங்குள்ள இயந்திரங்கள் மற்றும் ஆன்லைன் சேவை அமைப்புக்கள் அனைத்தும் 50 சதவிகித கட்டணங்களை மட்டுமே தெரிவிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்றும் அல் மெர்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்