அருமையான திருநாள்...
அல்லாஹ் நமக்களித்த
அழகான ஒருநாள்!
ஆர்ப்பரிக்கும் மனத
அசைபோடும் இனிதாய்
அதிரைப் பட்டினத்து
அந்தக்கால பெருநாள்!
அன்றிரவு முழுதும்
அமைதியில்லா உறக்கம்...
அதிகாலை தொழுகை
அதற்கடுத்து குளியல்!
குளியல் என்ற பெயரில்
கும்மாலம் குதூகலம்...
குளத்து மேட்டிலிருந்து
குபீர் பாய்ச்சல் குட்டிக்கரணம்!
புத்தம்புது கைலி
புதிதாய் தைத்த சட்டை
புட்டாமாவு போட்டு
பினாங்கு அத்தர் பூசி...
உச்சமான உடுப்பாக
ஷைத்தானுக்கு தடுப்பாக
ஹெல்மெட்டு போல
வெல்வெட்டில் தொப்பி!
தெருவெங்கும் ஒலிக்கும்
தக்பீரின் முழக்கம்,
ஊரெங்கும் திளைக்கும்
தக்வாவின் சிறப்பும்!
ஊருக்கே உரித்தான ப்ரத்யேக ராகத்தில்
அத்தனைப் பள்ளிகளிலும் சத்தமாய்க் கேட்கும்...
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்...
லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்...
அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து!
பாடல் வரிகள் : சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
குரல் : ஜஃபருல்லாஹ்
நன்றி : அதிரை நிருபர்
பரிந்துரை : ஜஃபருல்லாஹ்

ஆஹா கவிதையும் குரலும் அருமை !
ReplyDeleteஅனைவருக்கும் இனிய ஈகை திருநாள் வாழ்த்துக்கள்.
ஜோரான பெருநாள்
ReplyDeleteசூப்பரான தியாகத் திருநாள்
கவிதை வரியிலும் பாடி
கலக்கும் நல்ல பெருநாள்
அனைவருக்கும் எனது இனிய ஈகை பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteதம்பி சேக்கனா நிஜாம்,
பகிர்வுக்கு மிக்க நன்றி
குல்லுஆம் வஅன்த்தும் பிஹைர்!
ஆஹா கவிதையும் குரலும் அருமை !
ReplyDeleteஅனைவருக்கும் இனிய ஈகை திருநாள் வாழ்த்துக்கள்.