பட்டுக்கோட்டை; நகராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நகராட்சி மற்றும் சுகாதார துறையின் சார்பில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ம. கோவிந்தராவ் (20.03.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
தஞ்சாவூர் மாவட்டததில் தற்போது பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள்ää ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிருந்தாவனம் பள்ளியில் உள்ள 14 நபர்களுக்கு கொரோனா தொற்று இதில் 1 ஆசிரியருக்கும்ää 2 வாகன ஓட்டுநருக்கும் மற்றும் 11 மாணவருக்கும்ää கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போதுவரை 11 பள்ளிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுää சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருக்கும் அனைத்து மாணவர்கள்ää ஆசிரியர்கள்ää ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்தது உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது வரை கொரோனா தொற்று ஏற்பட்ட பள்ளி மீது வழக்கு பதிவு மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட பள்ளிகள் மீது தலா ரூ. 5000 அபராதம் விதிக்கப்பட்டு அப்பள்ளிகளை 14 நாட்களுக்கு மூடுவதற்கு உத்தரவிட்டபட்டுள்ளது.
11 பள்ளிகளை சேர்ந்த 140 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர் இதில் நேற்று அம்மாபேட்டையை சேர்ந்த 60 மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது சிகிச்சை பெற்று வரும் அனைத்து மாணவர்களும் நல்ல உடல்நிலையில் உள்ளனர். யாருக்கு பெரிய பாதிப்பு இல்லை. தஞ்சை மேக்ஸ்வெல் மெட்ரிக் பள்ளியில் நேற்று 11 ஆசிரியர்கள்ää 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் 1ää123 பேருக்கு முழுமையாக பரிசோதனை செய்து மற்றும் பெற்றோர்கள்ää அவர்களுடன் தொடர்பு இருப்பவர்களுக்கு சிறப்பு முகாம் மூலம் பரிசோதனை செய்ததில் மேலும் 15 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதின் காரணமாக அப்பள்ளியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பள்ளிகளை அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். மற்ற பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வழிநெறிமுறைகளை கடைபிடிக்காமல் பள்ளிகளில் அலட்சியமாக இருந்து கொரோனா பரவும் சு10ழ்நிலை இருந்தால் அந்த பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரம் என்பதால் அனைத்து பறக்கும்படையினர்ää நிலையான கண்காணிப்புக்குழுவினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் தேர்தல் பணியுடன் சேர்ந்து பொதுமக்கள் முககவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்பிறகும் முககவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதித்து வருகின்றனர். முன்கள பணியாளர்கள்ää தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும்ää 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா 2வது அலை தேசிய அளவில் நிறைய மாவட்டங்களில் பரவுகிறது. தமிழகத்தில் கூட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருக்கிறது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மாணவர்களும் பள்ளிக்கு செல்லும்போது முக கவசம் அணிய பெற்றோர்கள் வலியுறுத்த வேண்டும். பள்ளி நிர்வாகத்தினர் நுழைவு வாயிலேயே மாணவர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்ய வேண்டும். முக கவசம் கண்டிப்பாக அணிய வைக்க வேண்டும்.
சமூகஇடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா முதல் அலை வந்தபோது பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கியதால் பெரியஅளவில் பாதிப்பு இல்லாமல் தடுக்க முடிந்தது. தற்போது 2வது அலை வந்து கொண்டிருக்கிறது. இப்போது கூட பொதுமக்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு கொடுத்தால் மக்களை காக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடைபெறுவதையொட்டி 9 பறக்கும் படையினர்ää 9 நிலையான கண்காணிப்பு குழு மூலம் வாகன தணிக்கையில்ää 24 மணி நேரமும் சுழற்ச்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இதுவரை ரூ. 58 லட்சம் வானக தணிக்கையின் போது பிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் லாரியில் கொண்டு வரபட்ட 600 குக்கர் பரிமுதல் செய்யப்பட்டு சம்மந்தபட்டவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ம. கோவிந்தராவ் இ.ஆ.ப.ää அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து பட்டுக்கோட்டைää அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை எப்படி மேற்கொள்ளப்படுகிறது என ஆய்வு செய்தார். மாணவர்களை சந்தித்து பேசி கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார். மாணவர்கள் அவர் அவர்ää வீட்டில் உள்ளவர்களையும் முக கவசம் அணிய வலியுறுத்த வேண்டும் என அறிவுறித்தினார்.
பின்னர் பட்டுக்கோட்டைää அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சரியான அடிப்படை வசதிகளää; பள்ளியில் உள்ள சுற்று சுவர்கள்ää வகுப்பறைகள்ää குடிநீர் வசதிகள்ää கழிப்பறைகள் போதுமான அளவில் உள்ளதா என மாவட்ட ஆட்சித் தலைவர் ம. கோவிந்தராவ் ஆய்வு மேற்க்கொண்டார்.
ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் திருமதி. உமா மகேஸ்வரிää பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் திரு. சென்னு கிருஷ்ணன், சுகாதார துறை துணை இயக்குநர் மரு. ரவிந்திரன்ää நகராட்சி செயற்பொறயாளர் திரு. ஜெயசீலன்ää வட்டாட்சியர் திருமதி. தரணிகா மரு. ஆடலரசி மற்றும் மருத்துவர்கள்ää அலுவலர்கள் உடன் இருந்தனர்