.

Pages

Sunday, March 14, 2021

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி!


வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்

தஞ்சாவூர் மாநகராட்சி அருளானந்த நகரில்  மாநகராட்சி சார்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ம. கோவிந்த ராவ்  இன்று (14.03.2021) தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

நடைபெற்று வரும் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் 100 சதவீதம் வாக்களித்திட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் கடந்த நாடளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் குறைவான வாக்கு பதிவு பதிவான பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது, இன்று அருளானந்த நகரில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து வீடு வீடாக சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக அருளானந்த நகரில் 50 மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியிணை தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து பி.வி. செல்வராஜ் மகளிர் மேல்நிலைபள்ளியில் நடைபெற்று வரும் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதிதாக சேர்ந்த வாக்காளர்களுக்கு இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து வாக்காளர் சீட்டு வழங்கும் முகாமினை பார்வையிட்டு புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவிந்திரன, தஞ்சாவூர் தேர்தல் நடத்தும் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.





No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.