.

Pages

Tuesday, March 2, 2021

பட்டுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தினை ஆட்சியர் ஆய்வு செய்தார்!


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வாக்கு எண்ணும் மையமான அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கரம்பயம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பதற்றமான வாக்குச்சாவடி, புதிய துணை வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் ம. கோவிந்த ராவ் இன்று (02.03.2021) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்ததாவது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதியில், 3 பறக்கும் படை, மூன்று நிலையான கண்காணிப்புக்குழு ஏற்பாடு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறதுää 24 பறக்கும் படை, 24 நிலையான கண்காணிப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறதுää அதேபோல் இந்திய தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி முழுமையான அனைத்து கண்காணிப்பு குழுக்கள் மூலம் வாகனங்களை சோதனை செய்து வருகிறார்கள். எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு 2291 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது, இப்பொழுது தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகிணங்க 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்குää துணை வாக்குச்சாவடி மையங்களாக 595 கூடுதல் துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. ஆகமொத்தம்  8 சட்டமன்ற தொகுதிக்கு 2886 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைவரும் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும், வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், கழிவறை, மின்சாரம், மற்றும் மாற்றுத் திறனாளிக்கு முதியோர் பயன்படுத்தும் வகையில் சாய்வு தளம்  உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளனவா எனவும்; ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், விரைவாக சரிசெய்ய வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 8 சட்டமன்றங்களுக்கு தேர்தல் 3 வாக்கு எண்ணும் மையமான தஞ்சாவூர் பகுதியில் குந்தவை நாச்சியார் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை பகுதிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கும்பகோணம் பகுதிக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்து அனைத்து அலுவலர்கள்ää காவல் துறை ஒருங்கிணைந்து பணிகளை செய்து வருகிறார்கள் வாக்காளர்களுக்கு பணம் பொருள் கொடுப்பதாக தகவல் தெரியவந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக  கட்டுபாட்டு எண் 1950 இலவச எண்ணிற்கு உடனுக்குடன் தகவல் அளிக்கலாம். புகாரின் மீது ஏந்த ஓரு பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் ம. கோவிந்த ராவ் தெரிவித்தார்.



ஆய்வின்போது சார் ஆட்சியர் பாலச்சந்தர், பேராவூரணி தேர்தல் நடத்தும் அலுவலர்  ஐவண்ணன், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், மாவட்ட பள்ளி கல்விதுறை அலுவலர் ராதாகிருஷ்ணன், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் திருமதி.தரணிகா, பேராவூரணி வட்டாட்சியர் திருமதி. விஜயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.