.

Pages

Sunday, March 14, 2021

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு!


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 8 சட்டமன்ற தொகுதிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 8 சட்டமன்ற தொகுதிக்கு தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட  தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர். ம.கோவிந்த ராவ் அன்று (13.03.2021) அனுப்பி வைக்கப்படுவதை பார்வையிட்டார்.

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வைப்பறையிலிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து 8 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 2886 வாக்குச்சாவடிகளுக்கு பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 170-திருவூடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 355 வாக்குச்சாவடி மையங்களுக்கு 423 வாக்குப்பதிவு இயந்திரம் 423 கட்டுப்பாட்டு கருவியும், 462 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், 171- கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 378 வாக்குச்சாவடி மையங்களுக்கு 450 வாக்குப்பதிவு இயந்திரம், 450 கட்டுப்பாட்டு கருவியும், என்றும் 492 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், 172- பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 362 வாக்குச்சாவடி மையங்களுக்கு 431 வாக்குப்பதிவு இயந்திரம், 431 கட்டுப்பாட்டு கருவியும், என்றும் 471 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், 173-திருவையாறு சட்டமன்ற தொகுதியில் உள்ள 385 வாக்குச்சாவடி மையங்களுக்கு 459 வாக்குப்பதிவு இயந்திரம், 459 கட்டுப்பாட்டு கருவியும், என்றும் 501 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், 

174-தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 406 வாக்குச்சாவடி மையங்களுக்கு 484 வாக்குப்பதிவு இயந்திரம்,  484 கட்டுப்பாட்டு கருவியும், என்றும் 528 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும்,  175-ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் உள்ள 340 வாக்குச்சாவடி மையங்களுக்கு 405 வாக்குப்பதிவு இயந்திரம், 405 கட்டுப்பாட்டு கருவியும், என்றும் 442 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், 176-பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடி மையங்களுக்கு 411 வாக்குப்பதிவு இயந்திரம்,  411 கட்டுப்பாட்டு கருவியும், என்றும் 449 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், 177-பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள 315 வாக்குச்சாவடி மையங்களுக்கு 375 வாக்குப்பதிவு இயந்திரம், 375 கட்டுப்பாட்டு கருவியும்ää என்றும் 410 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், ஆக மொத்தம் 2886 வாக்குச்சாவடி மையங்களுக்கு 3438 வாக்குப்பதிவு இயந்திரமும், 3438 கட்டுப்பாட்டு கருவியும்ää 3755 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், வாக்குப்பதிவு எந்திரங்கள் கருவிகளுக்கு பயன்படுத்த உள்ள 3900 பேட்டரியும், வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளுக்கு பயன்படுத்த உள்ள 4000 பேட்டரியும், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் அனைத்து தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவதை என மாவட்ட  தேர்தல் அலுவலர் ஃமாவட்ட ஆட்சித் தலைவர். ம.கோவிந்த ராவ் பார்வையிட்டார். அந்த அந்த சட்டமன்ற தொகுதிகளில் பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளது.

நிகழ்வில் தஞ்சாவூர் கோட்டாட்சியர் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுமணி திருவிடைமருதூர் தேர்தல் நடத்தும் அலுவலர் கமலகண்ணன், ஒரத்தநாடு தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிவேல், திருவையாறு தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி மஞ்சுளா, வாக்குப்பதிவு இயந்திரம் மேலாண்மை அலுவலர் சுப்பையா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.