.

Pages

Monday, May 4, 2015

அதிரையில் அக்னி மழை !

தமிழகத்தில் அக்னி வெயில் இன்று  துவங்குவதாக பத்திரிகைகளில் செய்தி வலம்வந்து பொதுமக்களை பயமுறுத்தியது.

இந்நிலையில் இதற்கு மாற்றமாக இன்று அதிகாலை அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை பெய்தது. சுமார் 1/2 மணி நேரம் நீடித்து பெய்த மழையால் அதிகாலை வாக்கிங் செல்வோருக்கு இதமாகவும், இந்த பகுதி குளுமையாகவும் இருந்து வருகிறது.

துபாயில் இந்தியர்கள் நடத்திய நீச்சல் போட்டி !

துபாய் : துபாய் பிரைம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் சார்பில் தொழிலாளர் தினத்தையொட்டி நீச்சல் போட்டி எகிப்தியன் கிளப்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஈடிஏ அஸ்கான் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற தொழிலாளர்களுக்கு மொபைல் போன், டேப்லெட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
முதுவை ஹிதாயத்

Sunday, May 3, 2015

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் தாளாளர் ஹாஜி அப்துல் கஃபூர் சாஹிப் மரணம் !

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் 24 ஆண்டுகள் செயலாளர் மற்றும் தாளாளராகவும், அதற்கு முன்னர் பொருளாளராகவும் இருந்த ஹாஜி அப்துல் கஃபூர் சாஹிப் அவர்கள் இன்று 03.05.2015 ஞாயிற்றுக்கிழமை வஃபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது ஜனாஸா நாளை 04.05.2015 திங்கட்கிழமை லுஹர் தொழுகைக்குப் பின்னர் சென்னை, பெரம்பூர், செம்பியம் ரஹ்மானியா பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்.

துபாய் ஈமான் அமைப்பு இரங்கல்:
அன்னாரது மறைவுக்கு துபை ஈமான் அமைப்பு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது. ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் கல்வி மேம்பாட்டுப் பணிகளுக்கு ஹாஜி அப்துல் கபூர் சாஹிபும், கல்லூரி நிர்வாகத்தினரும் எல்லாவித ஒத்துழைப்புகளையும் வழங்கி வருகின்றனர். அன்னாரது மறைவு சமுதாயத்திற்கு மிகவும் பேரிழப்பாகும்.

செய்தி மற்றும் படங்கள்:
முதுவை ஹிதாயத்
 

அதிரையில் ADT நடத்தும் மகளிர் கல்லூரிக்கான புதிய மாணவிகள் சேர்க்கை துவக்கம் !

அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் ஒரு அங்கமாகிய அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி கடந்த சில ஆண்டுகளாக அதிரையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் நடப்பு 2015- 2016 ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவிகள் சேர்க்கை துவங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

செடியன் குளத்தின் அருகே இறந்து போன மாட்டை அப்புறப்படுத்திய ஆர்வலர்கள் !

அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். இந்த குளத்தில் இருக்கும் குறைந்த அளவு தண்ணீரில் தினமும் ஏராளமானோர் குளித்து வருகின்றனர். நேற்று காலை குளத்தின் அருகே திடீரென மாடு ஒன்று இறந்து கிடந்தது. நேரம் செல்ல செல்ல இறந்துபோன மாட்டின் வயிறு வீங்க ஆரம்பித்தது. இன்னும் சில மணி நேரங்களில் வெடித்து சிதற கூடிய அபாயகரமான சூழல் உருவாகியது. மாட்டின் வயிறு வெடித்தால் அப்பகுதியின் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே அப்பகுதியில் சென்ற சமூக ஆர்வலர் மான் சேக், இறந்து கிடந்த மாட்டை அப்புறப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். இதையடுத்து நேற்று இரவு ஜேசிபி வாகனம் வரவழைக்கப்பட்டு, ஆழமாக பள்ளம் தோண்டி மாட்டை புதைத்தனர். பேரூராட்சியின் துப்புரவு பணியாளர்களும் உடனிருந்து உதவினர். இதன் செலவீனங்களை பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்றது.
 
 
 

அதிரையில் நாளை முதல் AFFA நடத்தும் மாபெரும் கால்பந்தாட்ட தொடர் போட்டி!

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி  [ 04-05-2015 ] மாலை 4.45 மணியளவில் நமதூர் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் துவங்க இருக்கிறது.

நாளைய முதல் ஆட்டத்தில் நாகூர் அணியினரோடு, காரைக்குடி பள்ளத்தூர் அணியினர் மோத இருகின்றனர். இந்த தொடர் போட்டியில் தமிழகத்தில் தலை சிறந்த பல்வேறு அணிகள் கலந்துகொண்டு விளையாட இருக்கின்றனர்.

சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள இருக்கும் விளையாட்டு ஆர்வலர்கள் பலர் நாளை நடைபெற உள்ள முதல் ஆட்டத்தை துவக்கி வைக்க இருக்கின்றனர். அதே போல் தொடரில் சாதனை நிகழ்த்தும் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்க காத்திருக்கின்றன.

நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தை காண அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியின் விளையாட்டு பிரியர்கள் - ஆர்வலர்கள் - இளைஞர்கள் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள AFFA நிர்வாகம் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

அதிரையில் TNTJ நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமில் பலர் பங்கேற்பு !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை - பட்டுக்கோட்டை ஐ கேர் ஆப்டிக்கல்ஸ் ஆகியோர் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நமதூர் நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் இன்று காலை துவங்கியது.

முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு பிரபல கண் மருத்துவர் எஸ். காசி விஸ்வநாதன் அவர்களின் மருத்துவ குழுவினர் கண்  சம்பந்தப்பட்ட நோய்களுக்கான பரிசோதனை - ஆலோசனை - மருந்துகள் ஆகியவற்ற வழங்கினார்கள். இதில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டனர். இன்று மதியம் 2  மணி வரை நடைபெற இருக்கும் முகாமில் 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகாம் ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை நிர்வாகிகள் செய்து இருந்தனர். முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் மோர் பானம் வழங்கப்பட்டது.
 
 
 
 
 
 
 

டிஆர் பாலுவுடன் அதிரை சேர்மன் மரியாதை நிமித்த சந்திப்பு !

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமாகிய திரு. டிஆர் பாலு அவர்களை, அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் நேற்று காலை அவர்களது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். சந்திப்பின் போது புதுத்தெரு ஜமாத் நிர்வாகி இஷ்ஹாக், கமால் உசேன், கலீல் ஆகியோர் உடனிருந்தனர்.