அதிராம்பட்டினம், டிச.02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடைத்தெரு எஸ்.ஏ.எச் டவரில் புதிதாக அரசின் அங்கீகாரம் பெற்ற பொது இ சேவை மையம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இச்சேவையை தினமும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து 'எவர் கிரீன் கஸ்டமர் கேர்' நிறுவனர் ஏ. ஷேக் அப்துல்லா கூறியது;
'அரசின் அங்கீகாரம் பெற்ற எங்களது பொது இ சேவை மையத்தில் சுமார் 174 சேவைகள் வரை மேற்கொள்ளப்படுகிறது. இனி பொதுமக்கள் தொலை தூரங்களில் உள்ள தாலுகா உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு சென்று நேரம், பொருளாதரம் போன்றவற்றை வீண் விரையம் செய்ய வேண்டிய அவசியமிருக்காது. எங்களது சேவை மையத்தில் புதிய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு போன்றவற்றை புதிதாக விண்ணப்பிக்க / திருத்தங்கள் செய்ய, பஸ், ரெயில் ஆன்லைன் டிக்கெட், ரீசார்ஜ், மின்சார கட்டணம், டெலிபோன் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட சேவைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படுகின்றன. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடைத்தெரு எஸ்.ஏ.எச் டவரில் புதிதாக அரசின் அங்கீகாரம் பெற்ற பொது இ சேவை மையம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இச்சேவையை தினமும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து 'எவர் கிரீன் கஸ்டமர் கேர்' நிறுவனர் ஏ. ஷேக் அப்துல்லா கூறியது;
'அரசின் அங்கீகாரம் பெற்ற எங்களது பொது இ சேவை மையத்தில் சுமார் 174 சேவைகள் வரை மேற்கொள்ளப்படுகிறது. இனி பொதுமக்கள் தொலை தூரங்களில் உள்ள தாலுகா உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு சென்று நேரம், பொருளாதரம் போன்றவற்றை வீண் விரையம் செய்ய வேண்டிய அவசியமிருக்காது. எங்களது சேவை மையத்தில் புதிய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு போன்றவற்றை புதிதாக விண்ணப்பிக்க / திருத்தங்கள் செய்ய, பஸ், ரெயில் ஆன்லைன் டிக்கெட், ரீசார்ஜ், மின்சார கட்டணம், டெலிபோன் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட சேவைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படுகின்றன. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு
99520 39825
























