.

Pages

Monday, September 29, 2014

அதிரையில் அள்ளப்படாத குப்பைகள் [ படங்கள் இணைப்பு ]

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிலவற்றில் கடந்த சில நாட்களாக சேரும் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்தப்படாததால் குமிந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக அதிரையில் அவ்வவ்போது மழையும் பெய்து வருகிறது. இதனால் தோற்று நோய் பரவும் வாய்ப்பு இருப்பதாக   பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

பேரூராட்சி நிர்வாகம் இவற்றை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு துப்புரவு ஊழியர்களை அனுப்பி தேங்கி காணப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவராக SDPI கட்சியின் சம்சுன் மஹரிபா பதவியேற்பு !

காலியாக உள்ள புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு SDPI கட்சியின் சார்பில் சம்சுன் மஹரிபா போட்டியிட முடிவு செய்தார்.

இதையடுத்து கடந்த [03-09-2014 ] அன்று தஞ்சை தெற்கு மாவட்டத்  தலைவர் Z. முகம்மது இலியாஸ், புதுப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து மாற்று வேட்பாளர் யாரும் மனு தாக்கல் செய்யாததையடுத்து ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழ் ஊராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இன்று காலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவருக்கு முறைப்படி பதவி பிராமணம் செய்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ், எஸ்டிபிஐ கட்சியின் அதிரை மற்றும் புதுப்பட்டினம் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற துணை தலைவராக அதே கட்சியை சேர்ந்த அஹமது ஆசாத் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.




சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய இலவச மருத்துவக் கருத்தரங்கு !

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற ஞாயிற்றுக்கிழமை 28-09-2014  அன்று காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை, நீரிழிவு நோய் பற்றிய இலவச மருத்துவக் கருத்தரங்கு ஒன்றை சிங்கப்பூரில் பீட்டி சாலையிலுள்ள சிண்டா கலையரங்கத்தில் நடத்தியது.

சிங்கப்பூர் டான் டோக் செங் மருத்துவமனையில் பணியாற்றி வரும் பிரபல நீரிழிவு நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜனாப் அப்துல் ஷக்கூர், இந்தக் கருத்தரங்கை நடத்தினார். கேள்வி பதில் அங்கமும் இடம்பெற்றது. சிண்டாவின் தலைமை அதிகாரி திரு பரதன், சிறப்பு விருந்தினாராகக் கலந்துகொண்டார். சங்கத்தின் துணைத்தலைவர் ஜனாப் கலந்தர் மொஹிதீன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கை, சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு நிக்சன் செல்வராஜ் வழிநடத்தினார். சங்கத்தின் செயலாளர் ஜனாப் அப்துல் சுபஹான் நன்றி கூறினார்.

கருத்தரங்கை நடத்திய டாக்டர் ஜனாப் அப்துல் ஷக்கூருக்கு, சிங்கப்பூர் தென்காசி முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் ஜனாப் ஹாஜி முஹம்மது ஜாபர் பொன்னாடைப் போர்த்தி நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.

நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கில், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

செய்தி: முனைவர் முஹிய்யத்தீன் அப்துல் காதர்
தலைவர், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம், சிங்கப்பூர் 

தகவல் : முதுவை ஹிதாயத்

அதிரையில் நாளை மின்தடை !

மின்சாரத் தொடர்பான பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அதிரையில் நாளை [ 30-09-2014 ] செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்சாரவாரிய தகவல் தெரிவிக்கின்றன.

Sunday, September 28, 2014

அதிரை ஹஜ் பயணிகளை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்த உறவினர்கள் !

இஸ்லாமியர்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் மேற்கொள்வார்கள்.

நடப்பாண்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக கடந்த சில வாரங்களாக பல்வேறு கட்டங்களில் குழுவினர்களாக சவூதி அரேபியா நகருக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கின்றனர். இதில் 100 க்கும் மேற்பட்ட அதிரையர்கள் இம்முறை புனித பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று இரவு புனித ஹஜ் பயணத்திற்கு சென்ற அதிரையர்களை அவர்களின் உறவினர்கள் விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று வழியனுப்பி வைத்தனர். அதே போல் ஹஜ் பயணத்திற்கு பிற ஊர்களிலிருந்து வந்த பயனாளிகளையும் அவரவர்களின் உறவினர்கள் வழியனுப்பி வைத்தனர்.





அதிரையில் மஹ்ரீப் பாங்கின் போது திடீர் மழை !

அதிரையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் திடீர் கன மழை பெய்தது. அதனைதொடர்ந்து நேற்று நள்ளிரவிழும் மழை வெளுத்து வாங்கியது.

இந்நிலையில் மூன்றாவது நாளாகிய இன்றும் மழை பெய்து வருகிறது. சரியாக மஹ்ரீப் பாங்கின் போது துவங்கிய மழை தொடர்ந்து லேசாக பெய்து வருகிறது. மேகம் கூட்டங்களாக காணப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வறண்டு காணப்பட்ட அதிரையில் கடந்த மூன்று தினங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



அதிரையில் முரல் மீன் வரத்து அதிகரிப்பு ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். அதே போல் அருகில் உள்ள மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடல் பகுதிகளிலும் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்படும்.

அதிரை சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த இரு நாட்களாக மழை பெய்ததால், ஆழ்கடலில் இருந்த முரல் மீன்கள் கரைக்கு வரத் துவங்கியுள்ளன. மீனவர்களின் வலைகளில் எதிர்பார்த்தபடி அதிகமான மீன்கள் சிக்குகின்றன. பிள்ளை முரல், செல்வ முரல், வாளைய முரல், பாம்பு முரல், கலிங்க முரல், பைத்தங்கா முரல் என பல வகைகள் உண்டு. பார்ப்பதற்கு பாம்பு போன்றும், கடல் குதிரை போன்றும், இளம் பச்சை நிறத்தில் காணப்படும். வித்தியாசமான சுவை கொண்ட இவற்றை கிராம மக்கள் அதிகளவில் விரும்பி உண்பர். அதிரை கடைத்தெரு மீன் மார்க்கெட் பகுதிக்கு விற்பனைக்காக அதிகளவில் முரல் மீன்கள் வந்தது. இவற்றை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கிச்செல்கின்றனர்.




தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் தேர்வு !

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் இன்று கூட்டப்பட்ட எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பபட்டுள்ளார். இதையடுத்து ஆளுநரிடம் கடிதம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கக் கூடும் என தகவல் தெரிவிக்கின்றன.