.

Pages

Thursday, January 31, 2013

[ 2 ] டீக்கடை சந்திப்பு ! தொடர்கிறது...

அஸ்ஸலாமு அலைக்கும் சாதிக் நல்லா இருக்கீங்களா...?

வ அலைக்கும் சலாம் சலீம் நீங்க எப்புடி இருக்கீங்க. பட்டுக்கோட்டக்கி வேலக்கி போனதுலேர்ந்து ஆளையே பார்க்க முடியலே. நம்மளையும் கொஞ்சம் பார்த்துக்குங்க.

ஆமா நம்மொ பட்டுக்கோட்டைல வேல பாக்குரதாலே வாரத்துக்கு ஒரு நாளக்கி தான் லீவுல வருவேன். வந்தாக்கா எதாச்சும் இங்கே வேல வந்துடும் வேற எதுவும் தப்பாநேனச்சிக்கிடாதிங்க.இப்பொதான் அசர் தொழுதுட்டு வர்றேன்.அப்புடியே டீ சாப்பிட்டுட்டு மொவன கூட்டிகிட்டு பட்டுக்கோட்ட வரைக்கும் போகணும்ன்டு நெனச்சிக்கிட்டு இறிக்கிறேன் அப்புடியே ஊட்டுக்காரவங்களும் கொஞ்சம் சாமானுவொ வாங்கிட்டு வரச்சொன்னாங்க. சாதிக்.

எதுக்கு சலீம் பட்டுக்கோட்டக்கி இந்த நேரத்துலே. போறீங்க பஸ்ல கூட்டமாவுல இறிக்கிம் அதுவும் மொவன வேற கூட்டிக்கிட்டு போறீங்க. அப்புடி என்னா வேலையா போறீங்க..?

பஸ்சுல யாரு போறது பைக்குள தான் போகணும் சாதிக்.  எம்மொவனுக்கு பல்லு வலிக்கிதுண்டு அழுவுறான். அதான் பட்டுக்கோட்டக்கி போய் பல்ல புடுங்கி உட்டுடலாமுண்டு கூட்டிக்கிட்டு போறேன். அப்பறம் ஊட்டுக்காரவோ வாங்கி கேட்ட சாமானுவஎல்லாம் இன்னக்கே வாங்கி கொடுத்தாத்தான். நாளக்கி வேல இருக்குது. .

ஏம்ப்ப சலீம் பக்கத்துலே பல்லு டாக்டர வச்சிக்கிட்டு  இவ்வளவு செரமப்பட்டு கிட்டு போவனுமா...? நம்மளுவொல நம்பித்தானே இங்க பல்லு ஆஸ்பத்திரி வச்சி இருக்காங்க பேபி நகைகடக்கி பக்கத்துலேயே இருக்கு. அதுக்கு நம்ம தானே ஆதரவு கொடுக்கணும்.

ஆமா சாதிக் நீங்க சொல்றதும் சரிதான் சரி நல்ல டாக்டரா..? நல்லா பாக்குறாங்களாமா..? புதுசா கேள்வி பட்ரேனே...??அதான் யோசனையா இருக்கு...

என்னா இப்புடிகேட்டுபுட்டிங்க சலீம். நல்ல டாக்டரு நல்ல கவனிச்சி பொறுமையா பாக்குறாரு. நான்கூட ஒரு பல்லு புடிங்கி இருக்கேன். புடுங்குன வலியே தெரியல.அப்போதான் நான் நெனச்சேன் நாம இனிமே பல்லு வலிண்டா கவலைபட வேண்டிய தேவை இல்லே. பக்கத்துலேயே நல்ல டாக்டரா வந்துட்டாருண்டு சந்தோசப்பட்டேன்.நம்ம ஆளுங்களுக்கு வெளியூருக்கு போய் அங்க உள்ள டாக்டர்ட்ட காச அள்ளிக்கொடுத்துபுட்டு வந்தாதான் சீக்கு நல்லா போவாட்டியும் நல்லா போன மாதிரி தெரியும். இந்த மனச முதல்லெ மாத்தணும்.

சரி ஆத்திரப்படாதீங்க சாதிக் சும்மா தெரிஞ்சிக்கலாம்ண்டு தான் கேட்டேன். அப்புடீண்டா ஆறுமணிக்கித்தானே கெரண்டு வரும் கெரண்டு வந்த ஒடனே தான் போவனும்.நம்ம வேலை எல்லாத்தையும் சகுனம் பாக்குற மாதிரி கெரண்ட இருக்குதாண்டு பாத்துதான் போகவேண்டிய சூழ்நிலையா இருக்குது.

கெரண்டு தொல்ல தானே பெருன்தொல்லயா இருக்கு. சலீம் ஒரு நாளக்கி பத்துவாட்டி போவுது. கெரண்ட நம்பி ஒரு வேலையும் செய்ய முடியல. இன்னம் இந்தகெரண்ட சரி பண்ண மாட்டேன்குறாங்க. கூப்பன்ல இந்த எலவச சாமானே கொடுக்குறதெ நிறுத்திட்டு கெரண்ட ஒழுங்கா கொடுத்துட்டா ஆளுங்கச்சிக்கி நல்ல பேருதானே.உங்கள்ற யோசனை என்னா...?

மக்களுவொலுக்கு அதா தெரியிது சாதிக். அரசாங்கம் நூறு ரூபாயையும் அரிசியையும் வெல்லத்தையும் கொடுத்தாத்தான் எல்லாத்தையும் மறந்துடுரான்களே.! இந்த இலவசத்த வச்சித்தானே அரசியலு நடந்துகிட்டு இருக்கு.

அப்புடி சொல்லாதீங்க சலீம் நீங்க பல வகையிலே சம்பாரிச்சி வச்சி இருக்கிறீங்க. அதுனால உங்களுக்கு ஒன்னும் பிரச்சன இல்லே ஏழை எளியதுவோ என்னா பண்ணும்..? அவங்களுக்கும் இப்படி அரசாங்கம் ஏதாவது கொடுத்தாதானே காவயிராவது நெறையும். அதெ நம்ம கொற சொல்லகூடாது.

அதுவும் சரிதான் நா ஆத்துரத்துலே அப்புடி சொன்னேன். அப்பறம் சாதிக் கூப்பன்ல இந்த வருஷம் பொருளுவொ வாங்க உள் தாள்ண்டு ஒன்னு வச்சி சீல் அடிச்சி கொடுக்குராங்களே உங்க வூட்டுல வாங்கிட்டாங்களா..? எங்க வூட்டுல வாங்கிட்டதா எங்க வூட்டுக்காரவோ சொன்னாங்க.

எங்க வூட்டுளையும் எம்மொவன் போய் வாங்கி கொடுத்துட்டான்டு எங்கூட்டு காரவொளும் சொன்னாங்க சலீம். அந்த உள் தாள் பேப்பர கிளிச்சிப்புடாமே வர்ற வருஷம் வரைக்கும் பத்தரமா வச்சிக்கிடுங்க இல்லாட்டி ரேசன்ல சாமான் வாங்க முடியாது. அதோட பேருவொ வுடு பட்டு போயிருந்தாலும் இல்லாட்டி வூட்டு விலாசம் மாத்துறதா இருந்தாலும் பாரம் ஒன்னு கொடுக்குறாங்க. அத பூர்த்தி செஞ்சி இந்த பிப்ரவரி மாசம் கடைசிக்குள்ள கொடுத்துடுங்க. என்னா நா சொல்றது காதுல வுளுவுதா சொல்றத கேக்காம மூஞ்சிய தீக்கி வச்சிக்கிட்டு ஏன் நிக்கிறீங்க என்னாச்சிப்பா..?

அதே ஏன் கேக்குறீங்க சாதிக் போன வாட்டி அப்புடித்தான் அவங்க கொடுத்த பாரத்துல கரக்டா பேர எழுதி கொடுத்தும் தப்பு தப்பா பதிஞ்சி வந்துச்சி இன்னமும் கடைசி எழுத்து தப்பாத்தான் இருக்கு. ஓட்டு ஐ.டி ளையும் அப்புடித்தான் நாம ஒன்னு எழுதிக்கொடுத்தா அவங்க ஒன்னு எழுதிடறாங்க. வேல பாக்குற ஆபிசர் கொஞ்சம் கவனித்து பொருப்போட சரிபாத்து கொடுத்துட்டா நமக்கும் டென்சன் இல்லாம போய்டும் அவங்களுக்கும் ரெண்டு வேல இருக்காது. எல்லாம் நம்ம கொடுக்குற வரிப்பணம் தானே சாதிக்கு...!

சலீம் நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரியான செய்திதான். அதெல்லாம் ஆரம்பத்துலேதான் அப்புடியாப்பட்ட தப்பு நடந்திச்சி இப்போ எல்லாத்துலயும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரக்கூடாதுண்டு சரியா பாத்து பதியிறாங்க. அதுக்கு காரணம் இருக்கு ஆதார் அட்டைண்டு புதுசா ஒன்னு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்து பதிஞ்சிட்டு போனாங்கள்ள அது வந்துட்டா அதுல எல்லாமே சரியாய் இருக்கனும்ண்டு இப்பொ கவனமா செய்றாங்க இனிமே நீங்க கவலைப்பட வேண்டிய தேவை இல்லெ. நீங்க போய் இப்பவே பாரத்தெ எழுதி கொடுத்துடுங்க..கொஞ்சம் வெள்ளனமேயே போங்க இல்லாட்டி கூட்டமா இரிக்கிம்

சரி சாதிக் நாளக்கி அந்தவேலைய முதல்ல போய் பாத்துட்றேன். இந்த ஆதார் அட்டெண்டு என்னனமோ சொன்னியே அது பதியிரத்துக்கு ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி மக்கள் தொகெ கணக்கு எடுக்க வரும்போது சிலிப்பு ஒன்னு கொடுத்தாங்கலாமுல அத காட்டுனாத்தானே பதிய முடியுமாம்,எங்க தெருவு சானாவயலுக்கெல்லாம் அப்புடி ஒன்னும் கொடுக்கலையே..? அப்போ நாங்க எப்போ பதியிறது...? அதப்பத்தி செய்தி கேள்விப்பட்டா கேட்டு வைங்க

இப்போவே சொல்லிடறேன் சலீம் எனக்கு தெரியும் கேள்வி பட்டேன். அது விடுபட்டு போனவங்களுக்கு பதிய இன்னும் ரெண்டு,மூணு மாசத்துலே மறுபடியும் வருவாங்களாம், அப்போ மறக்காம பதிஞ்சிடுங்க

சரி சாதிக் அதான் ஆறு மணி ஆவப்போவுதுல கெரண்டும் வர்ற நேரமாச்சி இங்கேயே மகரிபு தொழுதுட்டு எம்மொவன கூட்டிக்கிட்டு பல்லு புடுங்க நம்ம ஊரு டாக்டர்டையே போறேன்.

இன்ஷா அல்லாஹ் அப்புறமா பாக்கலாம்...

அதிரை மெய்சா

மரண அறிவிப்பு [ நடுத்தெரு ]

நடுத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் இப்ராஹீம் அவர்களின் மனைவியும், அப்துல் ஹாதி, சரபுதீன், அதிரை சித்தீக் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிதா அம்மாள் அவர்கள் இன்று [ 31-01-2013 ] காலை 7 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.

[ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ]

அன்னாரின் ஜனாஸா இன்று அஸ்ருக்குபின் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்ய முடிவு செய்யப்படும்.

பிரபல எழுத்தாளரும், பத்திரிக்கைத் துறை நிபுனருமாகிய அதிரை சித்திக் அவர்களின் தாயார் ஆவார்கள்.

Wednesday, January 30, 2013

அதிரை கீழத்தெரு மஹல்லா அமீரக நிர்வாகிகளி​ன் நன்றி அறிவிப்பு !!!

உலகக்கல்வியை சிறப்பாக கற்கும் நமது சிறுவர், சிறுமிகள் மார்க்க கல்வியை அவர்களுக்கு பயிற்றுவிப்பது என்பது அவசியமானதொன்றாகிறது. இதைக்கருத்தில் கொண்டு அதிரை கீழத்தெரு மஹல்லா அமீரகத் தலைவர் அப்துல் ஜலீல் மற்றும் அதன் நிர்வாகிகளின் சீரிய முயற்சியின் கீழ் கீழத்தெரு மஹல்லாக்கு உட்பட்ட நான்கு இடங்களில் சிறார்களுக்கான குரான் ஓதும் பயிற்சிகளை மேற்கொள்வது என்ற முடிவையடுத்து, இதன் முதல் முயற்சியாக கீழத்தெரு மஹல்லா அமீரகத் தலைவர் அப்துல் ஜலீல் அவர்களின் வீட்டில் முதல் பயிற்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஆரம்பம் செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சகோ. சுலைமான் [ கோக்கையா ] அவர்கள் இல்லத்திலும் சிறார்களுக்கான குரான் ஓதும் பயிற்சி நடந்து வருகின்றது.

என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நமதூரைச்சார்ந்த அனைத்து சிறுவர் சிறுமிகளும் இவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மார்க்க அடிப்படைக் கல்வியை கற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்பதைக் கூறிக்கொண்டு, இதற்காக ஒத்துழைப்பு வழங்கி நிதி உதவிசெய்த கீழத்தெரு மஹல்லாவாசிகள் அனைவருக்கும் கீழத்தெரு மஹல்லா அமீரக நிர்வாகிகளின் சார்பாக மீண்டும் நன்றிகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
அதிரை கீழத்தெரு மஹல்லா - அமீரகம்

Tuesday, January 29, 2013

அதிரையில் வர்த்தக மற்றும் கலாச்சார பொருட்காட்சி !

வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் சார்பாக அதிரையில் நடைபெற இருக்கின்ற பொருட்காட்சிக்கு காதிர் முகைதீன் கல்வி நிறுவனம் சார்பாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதிரையில் வரலாற்றில் முதன் முறையாக அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய மக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக பயன்பாடுகளை மையமாக வைத்து வருகின்ற கல்வி ஆண்டு விடுமுறை தினத்தில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த மாபெரும் பொருட்காட்சி மூலம் நமதூர் மக்களிடையே புரிந்துணர்வும், பெண்களுக்கு பாதுகாப்பானதாகவும், வர்த்தக மேம்பாடு பெறுவதாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
pic credit : face book of adirai festival

அதிரையில் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி அறிவிப்பு !


அதிரையில் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி அறிவிப்பு !


அதிரையில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் !

வருகின்ற 31.01.2013 அன்று மாலை 6.45 மணியளவில் அதிரை SDPI கட்சி சார்பில் ஷஹீத் பழனிபாபா நினைவு அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் தக்வா பள்ளி அருகில் ஷஹீத் பழனிபாபா அரங்கில் நடைப்பெற உள்ளது.



நன்றி : http://www.adiraithunder.blogspot.in/2013/01/blog-post_28.html

TNTJ ஜித்தா மண்டலத்தின் மக்கா பயணம் !

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் சார்பாக அழைத்துச் செல்லும்  மக்கா பயணம் !

அதிரையில் மீலாது விழா அறிவிப்பு !

அதிரையில் மீலாது விழா அறிவிப்பு !

Monday, January 28, 2013

காதிர் முகைதீன் கல்லூரியில் வேலை வாய்ப்பு சிறப்புப் பயிற்சி !


அதிரை காதிர் முகைதீன் கல்லூரி கணினித்துறையில் 'கிராமப்புறங்களுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு' இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அடையாளம் காணுதல் நிகழ்ச்சி தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் உதவியுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின் நிரல்...

1. காதிர் முகைதீன் கல்லூரி செயலர் ஹாஜி கே.எஸ். சரபுதீன் அவர்கள் தலைமை தாங்கினார்.

2. கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் துவக்கி வைத்து நிகழ்வின் முக்கியத்துவம் மற்றும் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

3. கணினி அறிவியல் பேராசிரியர் ஏ. சேக் அப்துல் காதர் வேலை வாய்ப்பு உலகளாவிய நிலையிலும், நாட்டின் அளவிலும் எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றியும், இளைஞர்கள் எவ்வாறு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் அறிவுறுத்தினார்.

4. முன்னாள் ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் எஸ். பர்கத் நிறைவு விழாப் பேரூரை ஆற்றி, பங்கு பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். 

5. முன்னதாக கணினி துறைத்தலைவர் முனைவர் என்.செயவீரன் வரவேற்புரை வழங்கினார்.

6. கணினித்துறை பேராசிரியர் முனைவர் ஜே. சொக்கலிங்கம் நன்றியுரை கூறினார். 

விழாவில் பல துறைகளைச் சார்ந்த துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள், அலுவலக, ஆய்வகப் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதிகளவில் கிராமங்களைச் சேர்ந்த முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றது குறிப்பிடத்தக்கது.






மரண அறிவிப்பு [ தரகர் தெரு ] !

தரகர் தெருவைச் சார்ந்த மர்ஹூம் முஹைதீன் பிச்சை அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது மொய்தீன் அவர்களின் மனைவியும், அப்துல் கரீம், முஹம்மது அலி, சரபுதீன் ஆகியோரின் மாமியாருமாகிய நூர்ஜஹான் அவர்கள் இன்று காலை 11 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.

[ இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி...]

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணியளவில் தரகர் தெரு முஹைதீன் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

[ 1 ] டீக்கடை சந்திப்பு...

அஸ்ஸலாமு அலைக்கும் சலீம்

வ அலைக்கும் சலாம் சாதிக்
என்னாப்பா சாதிக் நல்லா இருக்கிறியா..? இப்போ எங்க இருக்கே. கொஞ்ச நாளா ஆளையே காணோம். சவுதியிலேந்து வந்ததுக்கு பொறவு ஆளயே பாக்கமுடியலே..?

ஆமா சலீம் நல்லா இருக்கிறியா..? ஒன்னே நானு பாத்து ரொம்ப நாளாச்சில .
நா சவூதிய முடிச்சிட்டு வந்ததுமே நம்ம வேல பாத்தா பட்டுக்கோட்டை பழைய கடையிலேயே வேலக்கி சேந்துட்டே.

ஏன் அதுக்குலேயும் அப்புடிஎன்ன அவசரம் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து கிட்டு போனா என்ன. வந்து கொஞ்ச நாள்ளே ஏம்ப்பா  ஊரவுட்டு ஓடிப்போயிட்டியே சாதிக் ?

சலீமு வெலவாசி எல்லாந்தா நம்ம ஊர்ல தலகீழா இருக்குதப்பா... மீனு மார்கட்டு பக்க போவவே பயமா இருக்கு.மீனு யான வெல குதுர வெல இலப்பா சொல்றாங்க இதுக்கு சவூதி தேவல அங்கே ஒரு மனவு காள மீனு 40, 50,ரியாலுதான் விக்கிது.ஒரு மனுவுன்டா 4 கிலோ நம்மூரு காசுக்கு 800 ரூவா வரும். ஆனா நம்ம ஊருல 1 கிலோ கூட இல்லாத மீன 300, 400 னுன்டுல சொல்றாங்க. எதயு நம்மலப்போல நடுத்தர வாதி காசுகொடுத்து வாங்க முடியல. 1000 நோட்டு எல்லாம் அந்த காலத்துல 10 ரூபா நோட்டுக்கு உள்ள மதிப்பு  போல போய்டிச்சி. என்னா பன்றதுண்டு ஒன்னும் புரியல.

என்னா செய்றதுண்டு எனக்கும் ஒன்னும் புரியல சாதிக். .எல்லாம் வெளிநாட்டுலேந்து வர்றவங்க மார்கட்டெ கெடுத்து புட்டாங்க. கொடுவா மீனு திண்டு ரொம்ப நாலச்சிண்டு சொல்லிக்கிட்டு சொல்லுற வெலய 1000, 2000 ன்டு கொடுத்துட்டு வாங்கிட்டு போறாங்க. இப்புடி செஞ்சா நாம எப்புடி வாங்கி திங்க முடியும். சரி அத அப்பறமா பேசிக்கிடலாம் ஒன்கிட்ட ஒன்னு சொல்லலாம்ண்டு நெனச்சேன்.மொவளுக்கு வூடு  கட்டி கொடுக்கணும். அதான் மனக்கட்டு ஒன்னு நம்ம தெரு பக்கம் வருதாண்டு பாத்துக்கிட்டு இருக்கேன். ஒன்னும் அமைய மாட்டேங்குது. அப்புடியே வந்தாலும் 15லட்சம் 20 லட்சம் வருமுண்டு சொல்றாங்க. கேட்டா தலைய சுத்துது. எப்புடி நெலம் வாங்கி எப்புடி வூடு  கட்டி கொடுக்குரதுண்டு தெரியல..? எங்கயாச்சும் கொரச்ச வேலையில யாரும் மனக்கட்டு போட்டு வித்தா சொல்றியா..?

ஆமாம்ப்பா சலீம் எல்லா நம்ம ஆளுவ செஞ்ச வேல இது.. புரோக்கரு மாறுவோட ஐடியா அமரிக்கா ஆஸ்திரேலியா லண்டன் துபாயிண்டு எல்லாரும் நல்லா சம்பாரிக்கிராங்கண்டு ரேட்ட எல்லா ஏத்தி உட்டு வச்சிட்டாங்க. இதுனால ஏழ நடுத்தர வாசி நம்மலபோல ஆளுவோ ஒன்னும் வாங்க முடியல.வருங்காலத்துல எல்லாம் கொமருவோ எப்புடி கர சேரப்போவுதுண்டு தெரியல. சரி அப்புடி நல்ல மனையா வந்தா சொல்றேன். நானும் எப்பவாச்சும் ஏதாவது வந்தாக்கா வாங்கிப்போட்டு வித்துகிடுரதுதான். இல்லாட்டி உள்ளூர்ல இருந்து கிட்டு எப்புடி காலத்த தள்ள முடியும்..?  

அப்போ ஓம்பாடு பரவாஇல்லே. எப்புடியோ நியாயமா ஹலாலா சம்பாரிச்சா சரி.அப்பறம் எல்லாம் மாப்புளக்கி வூடு கொடுக்குற பலக்கத்த இன்னம் வச்சிரிக்கிறது நாலாதான் சாதிக் மனக்கட்டு ரேட்டு ஏறிப்போச்சி. வரதட்சன வாங்க மாட்டோம்ண்டு சொல்லி கல்யாணத்த பண்ணி புட்டு அது என்னா வூடு மட்டும் கேட்கிறாங்க..? இத எந்த கணக்குல சேக்குறது, ஒண்ணுமே புரிய மாட்டேன்குதப்பா ! வயலுவோல எல்லா அழிச்சிட்டு மனக்கட்டு போட்டு வித்துட்டாங்க. இனி நம்ம ஊரு பக்கம் வெல்லாமெண்டா என்னாண்டு நம்ம பேரப்புள்ளயளுவோ கேக்க போரானுவோ. 

அப்பறம் சாதிக்  கமலஹாசனப்பத்தி விசுவரூபமுண்டு ஒரு படக்கதயெ பத்தி செய்தி கேள்விப்பட்டியா..?

அதான் உலக நாயகன்டு பேர வச்சிக்கிட்டு உலக முசுலிமயே உசுப்பெ ஏத்தி விசுவரூபமுண்டு படத்த எடுத்து முசுலீம் மக்களுவொல்ட்ட பேர கெடுத்து கிட்டாரே சலீம்.

சாதிக் நா சின்னப்புள்ளயைலேந்து கமல் படமுண்டா கடைக்கி போவாமே லீவபோட்டுட்டு போய் பாப்பேன்ப்பா..சின்னப்புள்ளைலே கமலு போட்டாவே கண்ணாடி பீரோவுல ஒட்டி வச்சதுக்கு எங்க வாப்பாட்டே நா அடி வாங்கி இருக்கேன் தெரியுமா..? அப்போவே என் வாப்பா சொல்லுவாரு சினிமா நடிகன்ற போட்டோவ ஏண்டா ஊட்டுக்குள்ள ஒட்டி வக்கிறே தருத்திரியம்டாண்டு சொல்லுவாரு நா கேக்க மாட்டேன். இப்போதான் அதெல்லாம் ஞாபகத்துக்கு வருது.

சலீம் நானும் அப்புடித்தாம்ப்பா கமலு படமுண்டா எனக்கு உசுரு ரெண்டம்பில்ல பட்டுகோட்டக்கி சைக்கிள்ள நானும் ரெஜாக்கும் டபுள்ஸ் போட்டுக்கிட்டு போய் பாப்போம். அப்போவெல்லாம் அவரு படத்துலே முஸ்லீமெ பத்தி தப்பா ஒன்னும் சொல்லல. நல்லா தானே நடிச்சிக்கிட்டு இருந்தாரு. இவ்வளவு வருசமா அரசியலுக்கு கூட வர ஆசைப்படாம அவரு நடிப்ப மட்டும் நடிச்சிக்கிட்டு இருந்தாரு திடீர்ண்டு ஏன் யார்ர தூண்டு கோல்லெ எடுத்தார்ன்டு தெரியல. இப்புடி நம்மலுவொல தீவிரவாதியா படம் எடுத்தாரே இதுல ஏதோ உள்நோக்கம் இருக்குற மாதிரி தெரியுது

சாதிக் அப்போ கமழு படத்தெ இனிமே நம்ம ஆளுவோ யாரும் பாக்க மாட்டாங்கன்டு சொல்லு..

சலீம் நம்மாளுவொலுக்கு ஒன்னும் கேரண்டியா சொல்ல முடியாது. யாரு எப்புடி போனாத்தான் என்னன்டு நெனச்சி சமுதாய சிந்தனையில்லாம ரொம்ப பேரு இருக்கிறாங்க. இனிமேயாச்சும் புரிஞ்சிக்கிடுவாங்கண்டு நெனக்கிறேன்.   

சாதிக் என்ன செய்றது. எது எப்புடியோ இந்த நாடு சுதந்திரம் அடைய நம்ம ஆளுவோலும் ரொம்ப பாடுபட்டு இருக்காங்க.ஆனா நம்ம எல்லார்ர பேரையும் மறச்சது மட்டுமல்லாமே இப்போ ஒவ்வொரு ஆளும் தீவிரவாதிண்டு சொல்ல கெலம்பிட்டானுங்க இப்புடி சொல்லி அவன்னவன் சுயநலத்துக்காக எல்லார்ட்டயும் ஒத்துமையா இருக்கிற நம்பல பிரிச்சி லாபம் அடைய பார்க்குரானுவோ. நம்மலுவோல எல்லாரும் தீவிரவாதியா நெனக்க வக்கிரானுவோ வெவரம் தெரிஞ்ச மக்களுக்கு இது தெரியாமலையா இருக்கும்.

சலீம் நா ஒன்னோட பேசிக்கிட்டே மறந்துட்டேன்ப்பா நம்ம கொல்லைலே ஆறுமுகமும் மணி அண்ணனும் வேல செஞ்சிகிட்டு இருக்காங்க. நா போய் வடையும் டீயும் வாங்கி கொடுத்துட்டு வந்துடுறேன்.

சரி சாதிக் அப்புறமா பாக்கலாம். அந்த மனக்கட்டு செய்தியே மறந்துடாதே.

தொடரும்...
அதிரை மெய்சா

Sunday, January 27, 2013

கீழத்தெரு மஹல்லா நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவருடன் சந்திப்பு !

அதிரை பேருந்து நிலையத்திலிருந்து பழைய போஸ்ட்ஆபிஸ் ரோடு, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை வரை உள்ள சாலையை புதுபித்தல் தொடர்பாக நமதூர் கீழத்தெரு மஹல்லா நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஆகியோரை நேரடியாகச் சந்தித்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்கக் கேட்டுகொண்டனர்.

அதிரையில் திடீர் கப்ரூ !


அதிராம்பட்டிணத்தில் முஸ்லிம்களை நரகத்திற்கு அனுப்ப மூன்று விசேஷ இடங்கள்  உள்ளன. ஒன்று மேலத்தெருவில் உள்ள தர்ஹா, இரண்டு கடல்கரைத் தெருவில் உள்ள தர்ஹா, மூன்று புது தெருவில் உள்ள தைக்கா என்ற தர்ஹா. காலம் காலமாக நமது முன்னோர்களை வழிகெடுக்க இந்த நாற்றம் எடுத்த தர்ஹாககள் காரணமாக இருந்தன.

அல்லாஹ்வின் அருளால், தமிழகத்தில் ஏற்பட்ட தவ்ஹீத் புரட்சினால், ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த இந்த தர்ஹா வழிபாடு இன்று இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தர்ஹா வழிபாட்டை ஆதரித்து மக்களை வழிகெடுக்கும் குட்டி ஆலிம்சாக்கள் இன்று வழிகேடராக அதிரையில் உள்ள 95 சதிவீத மக்களால் பார்க்கப்படுகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தமிழகத்தில் இருக்கும் தர்ஹாக்களில் பலவற்றில் அடக்கம் செய்யப்பட்டுள்ளாதாக சொல்லப்படும் மகான்கள் (என்று சொல்லப்படுபவர்கள், யார் மகான் என்பது அல்லாஹ்விற்கு மட்டும் தான் தெரியும்) உண்மையில் அங்கு வரவுமில்லை அங்கே அடக்கம் செய்யப்படவுமில்லை என்று பல காலமாக தவ்ஹீத் ஜமாஅத் சொல்லி வருகிறது.

பல இடங்களில் கழுதை, குரங்குளை அடக்கம் செய்து வைத்து தான் மகான் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். இதை உண்மைப்படுத்தும்  விதமாக ஒரு சம்பவம் அதிராம்பட்டிணத்தில் நடந்துள்ளது.

அதிரை கடற்கரை தெரு தர்ஹாவிற்கு வரும் பெண்கள் தங்கி, சமைத்து சாப்பிடும் ஒரு இடம் உள்ளது. கடந்த வாரம் புதிதாக ஒரு கப்ர் திடீர் பிள்ளையார் போல திடீர் கப்ர் உருவாக்கியுள்ளார்கள்.

அட மடையர்களே, எவனும் சாகவில்லை, யாருக்குடா இந்த கப்ர் என்று கேட்டால், அவ்லியா பக்தர்கள் சொல்லும் கதை அவர்களின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. புதிகாக முளைத்துள்ள கப்ரில் இருப்பவர் ஒரு பெண் அவ்லியாவாம். யாருடா இது என்று கேட்டால், கடல்கரைத் தெருவில் உள்ள ஹாஜா ஒலி அப்பாவின் மருமகளாம்.

மக்கத்து காஃபிர்கள்  கூட அடக்கம் பண்ண ஒரு மைய்யத் இல்லாமல் ஒரு அடக்கஸ்தலம் உருவாக்க வில்லை. இன்று ஒரு மைய்யத் கூட இல்லாமல் திடீர் கட்டடம் உருவாக்கி அதை ஜொகரா அம்மாள் பீவி கப்ர் என்று சொல்கிறார்கள்

அடக்கம் செய்யாமலே கப்ர் கட்டும் இவர்களின் உண்மை முகம் இப்போது வெளிப்பட்டுள்ளது. பாக்தாதில் பிறந்த அப்துல் காதர் ஜெய்லானி என்பவருக்கு இந்தியாவின் பல இடங்களில் கப்ர் உள்ளது. இந்த அப்துல் காதர் ஜெய்லானி அவர்கள் இந்தியாவிற்கு வந்தார் என்பதற்கே ஆதாரம் இல்லை. ஆனால், பல இடத்தில் செத்து அடக்கம் செய்ததாக கப்ர் வணங்கி மதத்தினர் மக்களை ஏமாற்றுகிறார்கள். அந்த வகையில் நம்ம ஊரில் உள்ள கப்ர் வணங்கிகளும் தங்களின் உண்மை முகத்தை காட்டியுள்ளனர்.

இந்த கப்ர் சிந்தனை திடீர் என்று எப்படி வந்தது என்று அதன் நிர்வாகிகளை கேட்டதற்கு அவர்கள் சொன்ன கதை என்ன தெரியுமா?
இவர்களுடைய கனவில் போய் அந்த அம்மா சொன்னிச்சாம் விலை வாசி எல்லாம் நன்றாக ஏறி கொண்டு இருக்கிறதே இந்த காலத்தில் 2 உண்டியல் எப்படி பத்தும் ? ஆக நான் வெயிலிலும் மழையிலும் கிடப்பது உங்களுக்கு தெரிய வில்லையா ?எனக்கு ஒரு உண்டியல் வைத்தால் நல்லா கல்லா கட்டலாமே என்ற அறிவு கூட உங்களுக்கு இல்லையா என்று கேட்டுச்சாம்.
 உடனே இவர்கள் அதிரடியாக கட்டடம் கட்டி அதற்கு  ஜொகரா அம்மாள் பீவி கப்ர் என்று பெயரும் வைத்து விட்டார்கள்

கனவில் வந்து சொன்னார் என்றால் யாரும் ஆதாரம் கேட்க முடியாது அல்லவா? அதற்கு தான் கனவு என்ற ஆயுதம்.

தரிசாக கிடந்த இடம், பிணமே இல்லாமல் கப்ர் ஆகும் போது,கபுர் எப்படி தர்காவாகின்றது என்பது நமக்கு விளங்காதா ?

இஸ்லாத்தில் தர்கா வழிபாடே கூடாது என்று இருக்க உண்டியல் வைத்து வயிற்று பிழைப்பு பிழைக்க நினைக்கும் நிர்வாகிகள் மரத்தடியில் உண்டியல் வைத்தால் கல்லா கட்ட முடியாது என்பதை விளங்கி செங்கல் செலவில் உண்டியல் வைத்து ஒரு கனவு என்று கதை சொன்னால் போதும் .தர்கா உருவாகிவிடும் .

அதன்பின் மண் செங்கல் ஆகும் செங்கல் கட்டடம் ஆகும் கட்டடம் கப்ர் ஆகும் கப்ர் தர்காவாகும் .பத்தி வரும் சாம்பிராணி வரும் பூஜை பண்ண சாமியார் வருவார் அவரை உள்ளே வைத்து கதவை மூடி கொல்லவும் முடியும்

அவ்லியா வச்ச ஆப்புக்கு பரிசு புதிய கப்ர்:

சமீபத்தில் இதே தர்ஹாவில் அவ்லியாவின் சேவகர் ஒருவரை பலி வாங்கினார் ஹாஜா ஒலி அப்பா அவ்லியா. அதற்கு பரிசாக தான் ஒரு புதிய கப்ரை கட்டியுள்ளனர் அதிரை கப்ர் வணங்கிகள்.

அனைவராலும் எதிர்க்கப்படும் கப்ர் வணக்கம்:

ஒரு காலத்தில் அல்லாஹ்விடம் மட்டும் கேளுங்கள் என்றால் அடித்து துவைத்து விடுவார்கள். ஆனால், இன்று கப்ர் வணக்கத்தை நமதூரில் உள்ள மக்களில் 95 சதவீத்தினர் எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

ஒரு நாள்:

இன்ஷா அல்லாஹ், இந்த கப்ர் வணக்கம் ஒரு நாள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

புது கப்ருக்கு எதிர்ப்பு, பழைய கப்ருக்கு ஆதரவு (?):

புதிதாக முளைத்துள்ள இந்த கப்ருக்கு  நமது ஊரில் உள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு காட்டியுள்ளார்கள். பாராட்ட வேண்டிய விஷயம். ஆனால், ஏற்கனவே, ஒரு சில பள்ளிவாசல் வளாகத்திலேயே கப்ர் உள்ளது. இதை இவர்கள் எதிர்ப்பதாக தெரியவில்லை. அது மட்டுமல்லாமல், அந்த பள்ளிகளிலேயே இவர்கள், ஷிர்க் வைக்கும் இமாமை பின்பற்றி தொழுது வருகிறார்கள். இது இரட்டை முகமான செயல் என்பதில் சந்தேகம் இல்லை. இவற்றையும் எதிர்ப்பது உடன், இவர்களை பின்பற்றி தொழுவதையும் தவிர்க்க வேண்டும்.

கப்ர் வணக்கத்தை வளர்க்கும் இரு மதரஸாக்கள்:

கப்ர் வணக்கத்தை எதிர்க்கும் நம்மில் சிலர் ஏதோ ஒரு சிலர் அறியாமல் கப்ர் வணக்கத்தில் ஈடுபடுகிறார்கள் என்று நம்புகிறார்கள். நமது ஊரில் கப்ர் வணக்கத்தை வளர்ப்பதே இரு மதரஸாக்கள் தான். இந்த மதரஸாக்களில் ஓதியவர்கள் தான் தர்ஹாக்களில் பாத்திஹா ஓதி இணைவைப்பு காரியத்தை ஆரம்பித்து வைக்கிறார்கள். சிலர் இவற்றை ஆதரித்து கொண்டு, கப்ர் வணக்கத்தை எதிர்க்கிறார்கள். இந்த மதரஸாக்களை ஒழிக்காத வரை கப்ர் வணக்கம் ஒழியாது.

யார் சொன்னது இந்த மதரஸாக்கள் தான் கப்ர் வணக்கத்தை போதிக்கிறது என்று யாராவது வாதம் செய்வார்களானால், அவர்களுக்கு நாம் விடும் சவால் இது தான். இந்த மதரஸாக்களில் தர்ஹா கட்டுவது, அதில் போய் முட்டுவது, தர்ஹாவில் கச்சேரி வைத்து, அதில் 'கொய்யா காய்க்கு ஆசைப்பட்டு, கொலுந்தநாரை வைச்சு கிட்டேன்' என்று சினிமா பாட்டு பாடி அவ்லியாவை தரிசிப்பது இது எல்லாம் தவறு என்று பகிரங்கமாக அறிவிக்க சொல்லுங்கள் (கியாமத் நாள் வரை இது மட்டும் நடக்காது).

தர்காக்கள் உருவான விதம் அல்லாஹ் நமக்கு விளங்க வைத்த ஏற்பாடு !

வயிற்று பிழைப்புக்காக மார்க்கத்தை விற்கும் சுயநலவாதிகளே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் .

ரசூலுல்லாஹ் அடக்கஸ்தலத்தை தானே வணக்கஸ்தலமாக ஆக்க கூடாது என்று சொன்னார்கள் .நாங்கள் எங்கே அடக்கஸ்தலத்தை வணக்கஸ்தலமாக ஆக்கினோம் வெறும் தரிசு தானே என்று சொல்லி தப்பிக்க முடியாது

நன்றி : http://www.adiraitntj.com/2013/01/blog-post_27.html

அதிரை வெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளியில் குடியரசு தின விழா !

இந்திய குடியரசு பெற்று 63 ஆண்டுகள் கழிந்து 64 வது ஆண்டை நோக்கிச் செல்லும் இந்த தினத்தில் இன்று காலை அதிரை கீழத்தெருவில் அமைந்துள்ள வெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளியில் குடியரசு தின கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.

பள்ளியின் தாலாளர் ஹாஜி ஜனாப் M.M.S. தாஜுதீன் அவர்கள் கொடியேற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நன்றி : அஜ்மல்கான் 
[ Adirai Sports Club ]

Saturday, January 26, 2013

காதீர் முகைதீன் கல்லூரியில் குடியரசு தின விழா !

இந்திய குடியரசு பெற்று 63 ஆண்டுகள் கழிந்து 64 வது ஆண்டை நோக்கிச் செல்லும் இந்த தினத்தில் இன்று காலை அதிரை காதீர் முகைதீன் கல்லூரியில் குடியரசு தின கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.
 விழாவின் துளிகள்...

கல்லூரியின் தாலாளர் ஹாஜி ஜனாப் K.S. சரஃபுதீன் அவர்கள் கொடியேற்றி வைத்தார்.

கல்லூரியின் முதல்வர் ஹாஜி ஜனாப் A. ஜலால் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

 நாட்டு நல சேவைகளில் ஈடுபட்டு சாதனைகள் பல புரிந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

34 ஆண்டுகள் ஆசிரியப்பணியை செம்மையாக மேற்கொண்ட பேராசிரியர் ஜனாப் சீனி கமால் அவர்கள் குடியரசு தின உரையை சிறப்பாக நிகழ்த்தினார்.

கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் ஜனாப் உதுமான் கனி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆட்சிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர், கல்லூரி முதல்வர் துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

காதீர் முகைதீன் கல்லூரி முதல்வரின் குடியரசு தின வாழ்த்துச்செய்தி !

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ் ]

இன்று நாம் 64வது குடியரசு தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.  அனைவருக்கும் முதலில் இந்திய குடியரசு தின வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இறைவன் மனிதர்களுக்கு இரண்டு வகையாக அறிவைக் கொடுத்திருக்கின்றான்.

1. கல்வியறிவு
2. ஆன்மிக அறிவு

ஒரு மனிதனுக்கு தான் கற்ற கல்வியின் அடிப்படையில் அவனுக்கு கிடைப்பது கல்வியறிவு. ஒரு மனிதன் வைத்துள்ள இறை நம்பிக்கையால் உருவாக்கும் அறிவு ஆன்மிக அறிவு. இறைவன் யூனுஸ் நபி [ஸல்லா ] அவர்களிடம் நீங்களும் உங்கள் கூட்டத்தாரும் இந்த ஊரை விட்டுச் செல்ல வேண்டாம் என்று கட்டளையிடுகின்றான். யூனுஸ் நபி [ஸல்லா ] அவர்கள் தன் கூட்டத்தாருடன் ஒரு கப்பலில் ஊரை விட்டுச் செல்லும் பொது, கப்பல் கவிழக் கூடிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது கடலில் குதித்த யூனுஸ் நபி [ஸல்லா ] அவர்களை ஒரு பெரிய மீன்  ஒன்று முழுங்கி விடுகிறது. மீனுடைய வயிற்றிலிருந்து நாற்பது நாட்கள் இறைவனிடத்தில் துஆச் செய்கிறார்கள். நாற்பது நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்த பூமிக்கு உயிருடன் வெளிவருகின்றார்கள். ஒருவன் தான் கற்ற கல்வியைக் கோடனு மீனுடைய வயிற்றில் ஒரு மனிதன் உயிர் வாழ முடியுமா என்று சிந்தித்துப் பார்த்தால், அவன் கற்ற கல்வி அவனுக்கு முடியாது என்று தான் பதில் சொல்லும். ஆனால் இறைவன் வழங்கிய அற்புத சக்தியைக் கொண்டு யூனுஸ் நபி [ஸல்லா ] அவர்கள் மீனுடைய வயிற்றில் உயிருடன் இருந்தார்கள் என்ற எண்ணம் இறை நம்பிக்கையை கொண்டவர்களுக்கு ' முடியம்" என்ற பதிலை ஆன்மிக அறிவு தரும். இந்நிகழ்விலிருந்து ஒரு மனிதனுக்கு கல்வியறிவும், ஆன்மிக அறிவும் சேர்ந்திருந்தால், அந்த மனிதன் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்படுகின்றது. எனவே ஒவ்வொரு மனிதனின் ஆன்மிக அறிவும், கல்வியறிவும் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெற்றால், நம் நாடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்நாளில் இவ்வுலகில் பிறந்து அனைத்து மக்களின் வாழ்வில் வசந்தம் பெறவும், நம் நாடு வளர்ச்சியடைந்த நாடுகளில் முதலிடத்தைப் பெறவும் நாம் பிரார்த்திப்போமாக.

வஸ்ஸலாம்
டாக்டர் A. ஜலால்
முதல்வர் – காதீர் முகைதீன் கல்லூரி

காதீர் முகைதீன் கல்லூரித் தாளலரின் குடியரசு தின வாழ்த்துச்செய்தி !

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ் ]

இன்று நாம் 64வது குடியரசு தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இறைவனின் நல்லருளால் காதிர் முகைதீன் நிறுவனங்களின் செயலராக பொறுப்பேற்றுள்ளேன். இந்நாளில் நம் நிறுவனங்கள் அனைத்தும் உயர்ந்த கட்டிடங்களாலும், நல்ல ஒழுக்கத்தாலும், அறிவு எண்ணத்தின் அடிப்படையில் எங்கள் எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் செயல்பட்டு வருகின்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எண்ணங்களின் அடிப்படையில் நம் நாடு 2020க்குள் வளர்ச்சியடைந்த நாடுகளில் முதல் இடத்தைப்பெறும் என்று சொல்லியுள்ளார். இந்த எண்ணங்களும் கனவுகளும் நிறைவேறும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. தலைசிறந்த நாடுகளில் நம் நாடு முதன்மையிடத்தைப் பெற வேண்டுமானால் ஒவ்வொரு கிராமங்களிலும் மாணவர்களின் கல்வித்தரம் உயர வேண்டும். கல்வி நிறுவனங்களின் தரம் உயர வேண்டும். ஏழை எளிய மாணவர்கள் எல்லோருக்கும் உயர்கல்வியை பெற எல்லா முயற்சிகளும் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலுள்ள எல்லா மாணவர்களுக்கும் உயர்கல்வி எளிதாக கிடைத்து விட்டால் நம் நாடு, வளர்ச்சியடைந்த நாடுகளில் முதன்மை இடத்தை பெறும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

"காலத்தின் மீது சக்தியாக, நிச்சயமாக, மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு நல் அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து மேலும் பொறுமையைக் கண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ, அவர்களைத் தவிர" என்று திருக்குர்ஆனில் இறைவன் காலத்தின் மீது சதியமிட்டும் சொல்லியிருக்கிறான்.

இந்த அத்தியாத்தை திறந்து மனதுடன் ஆழ்ந்து சிந்தித்து படித்தவருக்கு அவரது இரு உலக வாழ்வின் வெற்றிக்கு இதுவே போதும் எனவே மனிதனின் ஈடேற்றமும், நஷ்டமும் காலம் தான் என்ற அடிப்படையில் காலத்தின் மீது சத்தியம் செய்துள்ளான்.

ஒரு மனிதனின் நஷ்டத்திலிருந்து ஈடேற்றம் பெற நான்கு வழிகள் உள்ளன.

1. இறை நம்பிக்கை
2. நற்செயல்கள் கடைப்பிடிப்பது
3. ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொள்ளுதல்
4. பொறுமையை கடைபிடிப்பது.

முதல் இரு வழிகள், ஒரு தனி மனிதன் சம்பந்தப்பட்டது. எனவே ஒவ்வொரு தனி மனிதனும் ஈடேற்றம் பெற இறை நம்பிக்கையும் நற்செயல்களும் அவசியம். மற்ற இரண்டு வழிகளிலும், பிற மனிதர்கள் சம்பந்தப்பட்டது. எனவே பிற மனிதர்களும் வாழ்க்கையில் வசந்தம் அடைய சத்தியத்தையும், சத்திய வழியில் நடக்க பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசிக்க வேண்டும்.

இறை நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்து ஈடேற்றத்தை அடைய போகும் ஒவ்வொரு மனிதனும், பிற மனிதனை ஈடேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். எனவே இந்த நான்கு வழிகளையும் பின்பற்றி, இவ்வுலகில் உள்ள அனைத்து மக்களின் வாழ்வில் வசந்தம் பெற இறைவனை பிரார்த்திப்போமாக.

வஸ்ஸலாம்.

ஹாஜி ஜனாப் K.S. சரஃபுதீன்
தாளாளர் - காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்கள்

அதிரை பேரூராட்சியில் இந்திய குடியரசு தின விழா !

இந்திய குடியரசு பெற்று 63 ஆண்டுகள் கழிந்து 64 வது ஆண்டை நோக்கிச் செல்லும் இந்த தினத்தில் இன்று காலை 8 மணியளவில் அதிரை பேரூராட்சியில் குடியரசு தின கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் துளிகள்...

இந்த நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்துடன் முதன் முறையாக கிராத் ஓதியது கலந்துகொண்ட அனைவரையும் கவர்ந்தது.

வரவேற்புரை மற்றும் நன்றியுரை அதிரை பேரூராட்சி தலைவா S.H. அஸ்லம் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
 அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் செயலாளர் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களால் குடியரசு தின உரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர், வார்டு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் அதிரை பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதிரை காவல் நிலையத்தில் இந்திய குடியரசு தின விழா !

இந்திய குடியரசு பெற்று 63 ஆண்டுகள் கழிந்து 64 வது ஆண்டை நோக்கிச் செல்லும் இந்த தினத்தில் இன்று காலை 8 மணியளவில் அதிரை காவல் நிலையத்தில் குடியரசு தின கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.
 அதிரை காவல் துறை ஆய்வாளர் V. செங்கமலக்கண்ணன் அவர்கள் கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அனைத்து காவல்துறை அலுவலர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

காதீர் முகைதீன் கல்லூரியில் யூஜிசி நெட் தேர்வுக்கு இலவச பயிற்சி !

தஞ்சாவூர் மாவட்டம் அதிரை காதீர் முகைதீன் கல்லூரியில் UGC- NET CSIR, SET தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வருகின்ற பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் தொடக்கி நடைபெற உள்ளது. கல்லூரிப் பேராசிரியர் பணியில் சேர தற்போது CSIR- NET அல்லது தமிழக அரசு நடத்தும் SET தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஆகவே இந்த தேர்வுகளில் நிறைய மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் பல்கலைக்கழக மானியக்குழு நிதிவுதவியுடனும் இந்த சிறப்பு வகுப்புகள் காதீர் முகைதீன் கல்லூரியில் நடைபெற உள்ளன. 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளில் பயிலும் எஸ்.ஸி, எஸ்.டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை மாணவ, மாணவிகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். எனவே இச்சசிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவிகள் தங்கள் பெயரினை எங்கள் அலுவலகத்தில் எதிர்வரும் [ 05-02-2013 ] க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள் அன்புடன் தெரிவித்தார்.

அதிரையிலிருந்து சேக்கனா M. நிஜாம்

காதீர் முகைதீன் கல்லூரியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கருத்தரங்கம் !


TNSCST  யுடன் இணைந்து காதீர் முகைதீன் கல்லூரி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் கருத்தரங்கம் வருகின்ற [ 28-01-2013 ] அன்று காலை 10 மணியளவில் கணினிப்பிரிவு ஆய்வரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தகுதியுள்ள மாணவ மாணவிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு பயனடைமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர் காதீர் முகைதீன் கல்வி நிறுவனத்தார்கள்.

இந்தியன் நேஷனல் ஆர்மியில் அதிரையைச் சார்ந்த சகோதரர்கள் !


இந்திய சுதந்திர போராட்டத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு " இந்தியன் நேஷனல் ஆர்மி " ( INA ). 


நமதூரைச் சேர்ந்த சகோதரர்கள் "பெரிய மின்னார்" மர்ஹூம் ஜனாப் மு. முகம்மது ஷரிப் மற்றும் மர்ஹூம் ஜனாப் செய்யது முகம்மது ஆகியோர்கள் இந்த அமைப்பில் பணி புரிந்து நமது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களின் வாழ்வை தியாகம் செய்தவர்கள் ஆவார்கள். மேலும் இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள். ஒருவர் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமை பெற்றவர் மற்றொருவர் மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமதூரைச் சேர்ந்த தியாகிகள் சகோ. மர்ஹூம் S.S. இப்றாஹீம் மற்றும் சகோ. அப்துல் ஹமீத் ஆகியோர்களும் நமது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களின் வாழ்வை தியாகம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் நமதூரைச் சேர்ந்த எண்ணற்ற தியாகிகள் மறைந்து, மறைக்கப்பட்டு உள்ளார்கள். அன்னார்கள் அனைவரும் வரலாற்றில் பதியப்பட வேண்டும்.

இந்தியா குடியரசுப் பெற்று 64 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்த நாளில் நமதூரைச் சேர்ந்த இத்தியாகிகளை நினைவில் கொள்வோம்.

மறைக்கப்படுவது, மறந்துவிடுவது அல்லது மறுக்கப்படுவது வரலாற்றில் தவிர்க்கப்பட வேண்டியவை.

Friday, January 25, 2013

கழிப்பிடத்தில் முளைக்கும் திடீர் கப்ரூ !

கழிப்பிடத்தில் முளைக்கும் திடீர் கப்ரூ !



மரண அறிவிப்பு [ மேலத்தெரு ] !


மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் சேக் அலாலுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் பக்கீர் முஹம்மது அவர்களின் மனைவியும், சேக் ஜலாலுதீன், ஜாகிர் ஹுசைன், முஹம்மது மரைக்கான் ஆகியோரின் தாயாரும், இப்ராஹிம், தாஜுதீன் ஆகியோரின் மாமியாருமாகிய செய்னம்புகனி அவர்கள் இன்று காலை 10 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.

[ இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி...]

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸ்ரு தொழுகைக்குப் பின் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

உள்ளூர் உழைப்பாளிகள் !!!


ஆயுள் முழுவதும் உழைக்கும் உழைப்பாளிக்கு நன்றி செலுத்தும் வகையில் உழைப்பாளிகள் மதிக்கப் பட வேண்டும். அவர்களின் உழைப்பை நாம் பெருமையுடன் நினைவுகூற வேண்டும் !

அதிரை – இவ்வூரில் சிறந்த உழைப்பிற்கு எடுத்துக்காட்டா விளங்கக்கூடியவர்கள் பலர் இருந்தாலும் அவர்களில் நம் நினைவில் என்றென்றும் குடியிருப்பவர், நன்கு அறிமுகமானவர், நல்ல பண்பாளர், கடின உழைப்பாளி போன்றவர்களில் சிலரை எடுத்துக்கொண்டு அவர்களைப்பற்றிய சிறுகுறிப்புடன் தொகுத்து வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

இவர்கள் நமக்கு நமக்கு பின்னால் வரக்கூடிய சந்ததியினருக்கு கடின உழைப்பிற்கும், சிறந்த பண்பிற்கும் நல்லதொரு முன்னுதாரணமாக விளங்குவார்கள் என்ற நம்பிக்கையில்...

“ஆ”ரம்பம் செய்வோம்...
S.M. சுலைமான் :
குலசேகரப்பட்டினத்திலிருந்து சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு நமதூருக்கு வந்து ஓறு சிறிய பெட்டிக்கடை வைத்து அதன் மூலம் எண்ணற்ற நண்பர்களைப் பெற்றவர். இன்னும் அதே பெட்டிக்கடை...! மார்க்க அறிஞராகவும்பேச்சாளராகவும் இருந்துகொண்டு சேவைகள் செய்துவருவது சுலைமாக்கா அவர்களுக்கு கூடுதல் சிறப்பாகும். இவர் மேலத்தெருவில் வசித்து வருகிறார்.
முஹம்மது அப்துல்லா :
நடுத்தெருவைச் சேர்ந்த இவர் எண்ணற்ற நண்பர்களைப் பெற்றுள்ளவர். மிகவும் இனிமையாக பழகக்கூடியவர்...இவரின் பேச்சு நகைச்சுவை உணர்வுடன் காணப்படுவது கூடுதல் சிறப்பாகும்..... நமதூர் கடைத்தெருவில் சிறிய கடையொன்றை வைத்து அதன் மூலம் சிறுதொழிலாக அரிசி வியாபாரத்தை செய்து வருகின்றார்.

M.P. சிக்கந்தர் :
1968 முதல் இன்று வரை நாளிதழ், வாரஇதழ், மாத இதழ் போன்றவற்றை விற்பனை செய்யும் முதல் நபர் என்ற சிறப்பைப் பெறும் இவர் நமதூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். நமதூரில் இவரைத் தெரியாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது இவரது நட்பு வட்டம். ஞாபக சக்தியில் சிறந்தவராக உள்ள இவர் வசிப்பது தரகர் தெருவில்.

P. அப்துல் ரெஜாக் :
“கொடுவா பிஸ்க்” என்றாலே முதலில் நம் நினைவில் வருபவர் இவர்தான். மீனை அழகாக துண்டுகள் இட்டு கூறு கட்டுவது இவரின் தனிச்சிறப்பு. தன் சிறுவயது முதலே “மீன் வியாபாரம்” செய்யும் இவர் கடின உழைப்பாளியும்கூட இன்றும் சுறு சுறுப்பாய் வேலை செய்வது என்பது இவரின் இயல்பு. கடைத்தெருவில் கடை வைத்திருக்கும் இவர் கீழத்தெருவைச் சார்ந்தவர்.

K.S.A. சாகுல் ஹமீத் :
உயரமான மனிதர்... துரு துரு பார்வை....சமூக சேவைகள்....இவரின் கூடுதலான சிறப்புகளாகும். கடற்கரைத்தெருவில் வசிக்கும் இவர் இப்பகுதியின் வார்டு கவுன்சிலராகவும் இருக்கிறார். இவரின் தொழிலாக உணவகம் உள்ளது.

S.M. முஹம்மது பாருக் :
முதியவரான இவர் ஹாஜா நகர் பகுதியைச் சார்ந்தவர். இவரின் தொழில் முடிதிருத்தம் செய்வது. கடற்கரைத்தெருவின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இச்சலூன் கடை மிகவும் எளிமையாகக் காட்சி அளிக்கின்றது. இவருக்கு சிறு தொழில் செய்வதற்கு சமூதாய அமைப்புகள் உதவி செய்ய முன்வர வேண்டும்.

சாகுல் ஹமீத் :
“தட்டு வண்டி” சாகுல் என்றாலே பட்டென்று அனைவரும் அறிவர். இவரின் கடின உழைப்பு, பார்க்கும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். சின்ன தைக்கால் தெருவைச் சார்ந்த இவர் பகுதி நேர தொழிலாக தெருத் தெருவாக “புட்டு” விற்று வருகின்றார்.

S. முஹம்மது ஹசன் :
“பட்டர் பிஸ்கட்” என்றால் முதலில் நினைவில் கொண்டு உச்சரிப்பது இவரின் பெயரைத்தான். நெசவுத்தெருவில் வசிக்கும் இவர் சொந்த தொழிலாக கடைகளுக்கு “பட்டர்” பிஸ்கட் விநியோகம் செய்துகொண்டு இருந்தவர் தற்போது நெருக்கமானவர்களுக்கு தென்னைந் தோப்புகளை பராமரிக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றார்.

M. அயூப்கான் :
பிலால் நகரில் வசிக்கும் இவர் ஏழ்மையான கடின உழைப்பாளி. நீண்ட காலமாக வடை, சம்சா, போண்டா போன்ற பலகாரங்களை தள்ளு வண்டி மூலம் விற்பனை செய்து வருகின்றார். இவற்றின் விலை மற்ற கடைகளைவீட குறைவு என்பது தனிச்சிறப்பு. கடைத்தெரு சந்திப்பு அருகே இவரின் அன்றாட வியாபாரம் செய்யும் இடமாக உள்ளது.
இறைவன் நாடினால் ! 'உள்ளூர் உழைப்பாளிகள்' இன்னும் தொடர்வார்கள்... 

சேக்கனா M. நிஜாம்
நன்றி : சமூக விழிப்புணர்வு பக்கங்கள்