.

Pages

Thursday, January 24, 2013

அதிரையில் இருதரப்பினரிடையே எற்பட்ட கோஷ்டி மோதல் !


முன்விரோதம் காரணமாக கடந்த [ 14-01-2013 ] அன்று இரண்டு தரப்பினருக்கும் இடையே தரகர் தெருவில் மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு கோஷ்டியை சேர்ந்தவர்களுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் மற்றொரு தரப்பை சேர்ந்த வீட்டு மாடியில் போடப்பட்டிருந்த கொட்டகைக்கு தீவைத்தனர்.
இதில் வீடும் சூறையாடப்பட்டன
பட்டுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். தகவலறிந்த ஆர்டிஓ ரஹ்மதுல்லாகான், டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்கள் செங்கமலக்கண்ணன், கணேசமூர்த்தி உள்ளிட்டோர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து அதிரை போலீசார் இரு தரப்பினரின் சார்பாகக் கொடுத்த தனித்தனி புகாரின் பேரில் பெண்கள் உள்பட இரு தரப்பைச் சார்ந்த 82 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

காயமடைந்தவர்கள் தஞ்சை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

2 comments:

  1. ///முன்விரோதம் காரணமாக கடந்த [ 14-01-2013 ] அன்று இரண்டு தரப்பினருக்கும் இடையே தரகர் தெருவில் மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு கோஷ்டியை சேர்ந்தவர்களுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.///

    ''தி அதிரை நியூஸ்'' என்னும் புதிய தளம் ஆரம்பித்த அன்புச்சகோதரர் சேக்கனா M.நிஜாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

    இனி நாம் அனைவரும் நமதூரின் சூடான செய்திகளை பாகுபாடு இன்றி பதிவில் பார்த்துக்கொள்ளலாம்.

    உங்களின் பொது நலச்சேவை வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.