முன்விரோதம் காரணமாக கடந்த [ 14-01-2013 ] அன்று இரண்டு தரப்பினருக்கும் இடையே தரகர் தெருவில் மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு கோஷ்டியை சேர்ந்தவர்களுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் மற்றொரு தரப்பை சேர்ந்த வீட்டு மாடியில் போடப்பட்டிருந்த கொட்டகைக்கு தீவைத்தனர்.
இதில் வீடும் சூறையாடப்பட்டன
பட்டுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். தகவலறிந்த ஆர்டிஓ ரஹ்மதுல்லாகான், டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்கள் செங்கமலக்கண்ணன், கணேசமூர்த்தி உள்ளிட்டோர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து அதிரை போலீசார் இரு தரப்பினரின் சார்பாகக் கொடுத்த தனித்தனி புகாரின் பேரில் பெண்கள் உள்பட இரு தரப்பைச் சார்ந்த 82 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
காயமடைந்தவர்கள் தஞ்சை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
///முன்விரோதம் காரணமாக கடந்த [ 14-01-2013 ] அன்று இரண்டு தரப்பினருக்கும் இடையே தரகர் தெருவில் மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு கோஷ்டியை சேர்ந்தவர்களுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.///
ReplyDelete''தி அதிரை நியூஸ்'' என்னும் புதிய தளம் ஆரம்பித்த அன்புச்சகோதரர் சேக்கனா M.நிஜாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...!
இனி நாம் அனைவரும் நமதூரின் சூடான செய்திகளை பாகுபாடு இன்றி பதிவில் பார்த்துக்கொள்ளலாம்.
உங்களின் பொது நலச்சேவை வெற்றிபெற வாழ்த்துக்கள்.
yean pa
ReplyDelete