அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ் ]
இன்று நாம் 64வது குடியரசு தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். அனைவருக்கும் முதலில் இந்திய குடியரசு தின வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன் மனிதர்களுக்கு இரண்டு வகையாக அறிவைக் கொடுத்திருக்கின்றான்.
1. கல்வியறிவு
ஒரு மனிதனுக்கு தான் கற்ற கல்வியின் அடிப்படையில் அவனுக்கு கிடைப்பது கல்வியறிவு. ஒரு மனிதன் வைத்துள்ள இறை நம்பிக்கையால் உருவாக்கும் அறிவு ஆன்மிக அறிவு. இறைவன் யூனுஸ் நபி [ஸல்லா ] அவர்களிடம் நீங்களும் உங்கள் கூட்டத்தாரும் இந்த ஊரை விட்டுச் செல்ல வேண்டாம் என்று கட்டளையிடுகின்றான். யூனுஸ் நபி [ஸல்லா ] அவர்கள் தன் கூட்டத்தாருடன் ஒரு கப்பலில் ஊரை விட்டுச் செல்லும் பொது, கப்பல் கவிழக் கூடிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது கடலில் குதித்த யூனுஸ் நபி [ஸல்லா ] அவர்களை ஒரு பெரிய மீன் ஒன்று முழுங்கி விடுகிறது. மீனுடைய வயிற்றிலிருந்து நாற்பது நாட்கள் இறைவனிடத்தில் துஆச் செய்கிறார்கள். நாற்பது நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்த பூமிக்கு உயிருடன் வெளிவருகின்றார்கள். ஒருவன் தான் கற்ற கல்வியைக் கோடனு மீனுடைய வயிற்றில் ஒரு மனிதன் உயிர் வாழ முடியுமா என்று சிந்தித்துப் பார்த்தால், அவன் கற்ற கல்வி அவனுக்கு முடியாது என்று தான் பதில் சொல்லும். ஆனால் இறைவன் வழங்கிய அற்புத சக்தியைக் கொண்டு யூனுஸ் நபி [ஸல்லா ] அவர்கள் மீனுடைய வயிற்றில் உயிருடன் இருந்தார்கள் என்ற எண்ணம் இறை நம்பிக்கையை கொண்டவர்களுக்கு ' முடியம்" என்ற பதிலை ஆன்மிக அறிவு தரும். இந்நிகழ்விலிருந்து ஒரு மனிதனுக்கு கல்வியறிவும், ஆன்மிக அறிவும் சேர்ந்திருந்தால், அந்த மனிதன் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்படுகின்றது. எனவே ஒவ்வொரு மனிதனின் ஆன்மிக அறிவும், கல்வியறிவும் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெற்றால், நம் நாடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்நாளில் இவ்வுலகில் பிறந்து அனைத்து மக்களின் வாழ்வில் வசந்தம் பெறவும், நம் நாடு வளர்ச்சியடைந்த நாடுகளில் முதலிடத்தைப் பெறவும் நாம் பிரார்த்திப்போமாக.
வஸ்ஸலாம்
வாழ்த்துகள்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி்.
ReplyDeleteநல்ல தகவல்கள், பாராட்டப்படவேண்டியது.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.