அதிராம்பட்டிணத்தில் முஸ்லிம்களை நரகத்திற்கு அனுப்ப மூன்று விசேஷ இடங்கள் உள்ளன. ஒன்று மேலத்தெருவில் உள்ள தர்ஹா, இரண்டு கடல்கரைத் தெருவில் உள்ள தர்ஹா, மூன்று புது தெருவில் உள்ள தைக்கா என்ற தர்ஹா. காலம் காலமாக நமது முன்னோர்களை வழிகெடுக்க இந்த நாற்றம் எடுத்த தர்ஹாககள் காரணமாக இருந்தன.
அல்லாஹ்வின் அருளால், தமிழகத்தில் ஏற்பட்ட தவ்ஹீத் புரட்சினால், ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த இந்த தர்ஹா வழிபாடு இன்று இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தர்ஹா வழிபாட்டை ஆதரித்து மக்களை வழிகெடுக்கும் குட்டி ஆலிம்சாக்கள் இன்று வழிகேடராக அதிரையில் உள்ள 95 சதிவீத மக்களால் பார்க்கப்படுகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
தமிழகத்தில் இருக்கும் தர்ஹாக்களில் பலவற்றில் அடக்கம் செய்யப்பட்டுள்ளாதாக சொல்லப்படும் மகான்கள் (என்று சொல்லப்படுபவர்கள், யார் மகான் என்பது அல்லாஹ்விற்கு மட்டும் தான் தெரியும்) உண்மையில் அங்கு வரவுமில்லை அங்கே அடக்கம் செய்யப்படவுமில்லை என்று பல காலமாக தவ்ஹீத் ஜமாஅத் சொல்லி வருகிறது.
பல இடங்களில் கழுதை, குரங்குளை அடக்கம் செய்து வைத்து தான் மகான் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். இதை உண்மைப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் அதிராம்பட்டிணத்தில் நடந்துள்ளது.
அதிரை கடற்கரை தெரு தர்ஹாவிற்கு வரும் பெண்கள் தங்கி, சமைத்து சாப்பிடும் ஒரு இடம் உள்ளது. கடந்த வாரம் புதிதாக ஒரு கப்ர் திடீர் பிள்ளையார் போல திடீர் கப்ர் உருவாக்கியுள்ளார்கள்.
அட மடையர்களே, எவனும் சாகவில்லை, யாருக்குடா இந்த கப்ர் என்று கேட்டால், அவ்லியா பக்தர்கள் சொல்லும் கதை அவர்களின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. புதிகாக முளைத்துள்ள கப்ரில் இருப்பவர் ஒரு பெண் அவ்லியாவாம். யாருடா இது என்று கேட்டால், கடல்கரைத் தெருவில் உள்ள ஹாஜா ஒலி அப்பாவின் மருமகளாம்.
மக்கத்து காஃபிர்கள் கூட அடக்கம் பண்ண ஒரு மைய்யத் இல்லாமல் ஒரு அடக்கஸ்தலம் உருவாக்க வில்லை. இன்று ஒரு மைய்யத் கூட இல்லாமல் திடீர் கட்டடம் உருவாக்கி அதை ஜொகரா அம்மாள் பீவி கப்ர் என்று சொல்கிறார்கள்
அடக்கம் செய்யாமலே கப்ர் கட்டும் இவர்களின் உண்மை முகம் இப்போது வெளிப்பட்டுள்ளது. பாக்தாதில் பிறந்த அப்துல் காதர் ஜெய்லானி என்பவருக்கு இந்தியாவின் பல இடங்களில் கப்ர் உள்ளது. இந்த அப்துல் காதர் ஜெய்லானி அவர்கள் இந்தியாவிற்கு வந்தார் என்பதற்கே ஆதாரம் இல்லை. ஆனால், பல இடத்தில் செத்து அடக்கம் செய்ததாக கப்ர் வணங்கி மதத்தினர் மக்களை ஏமாற்றுகிறார்கள். அந்த வகையில் நம்ம ஊரில் உள்ள கப்ர் வணங்கிகளும் தங்களின் உண்மை முகத்தை காட்டியுள்ளனர்.
இந்த கப்ர் சிந்தனை திடீர் என்று எப்படி வந்தது என்று அதன் நிர்வாகிகளை கேட்டதற்கு அவர்கள் சொன்ன கதை என்ன தெரியுமா?
இவர்களுடைய கனவில் போய் அந்த அம்மா சொன்னிச்சாம் விலை வாசி எல்லாம் நன்றாக ஏறி கொண்டு இருக்கிறதே இந்த காலத்தில் 2 உண்டியல் எப்படி பத்தும் ? ஆக நான் வெயிலிலும் மழையிலும் கிடப்பது உங்களுக்கு தெரிய வில்லையா ?எனக்கு ஒரு உண்டியல் வைத்தால் நல்லா கல்லா கட்டலாமே என்ற அறிவு கூட உங்களுக்கு இல்லையா என்று கேட்டுச்சாம்.
உடனே இவர்கள் அதிரடியாக கட்டடம் கட்டி அதற்கு ஜொகரா அம்மாள் பீவி கப்ர் என்று பெயரும் வைத்து விட்டார்கள்
கனவில் வந்து சொன்னார் என்றால் யாரும் ஆதாரம் கேட்க முடியாது அல்லவா? அதற்கு தான் கனவு என்ற ஆயுதம்.
தரிசாக கிடந்த இடம், பிணமே இல்லாமல் கப்ர் ஆகும் போது,கபுர் எப்படி தர்காவாகின்றது என்பது நமக்கு விளங்காதா ?
இஸ்லாத்தில் தர்கா வழிபாடே கூடாது என்று இருக்க உண்டியல் வைத்து வயிற்று பிழைப்பு பிழைக்க நினைக்கும் நிர்வாகிகள் மரத்தடியில் உண்டியல் வைத்தால் கல்லா கட்ட முடியாது என்பதை விளங்கி செங்கல் செலவில் உண்டியல் வைத்து ஒரு கனவு என்று கதை சொன்னால் போதும் .தர்கா உருவாகிவிடும் .
அதன்பின் மண் செங்கல் ஆகும் செங்கல் கட்டடம் ஆகும் கட்டடம் கப்ர் ஆகும் கப்ர் தர்காவாகும் .பத்தி வரும் சாம்பிராணி வரும் பூஜை பண்ண சாமியார் வருவார் அவரை உள்ளே வைத்து கதவை மூடி கொல்லவும் முடியும்
அவ்லியா வச்ச ஆப்புக்கு பரிசு புதிய கப்ர்:
சமீபத்தில் இதே தர்ஹாவில் அவ்லியாவின் சேவகர் ஒருவரை பலி வாங்கினார் ஹாஜா ஒலி அப்பா அவ்லியா. அதற்கு பரிசாக தான் ஒரு புதிய கப்ரை கட்டியுள்ளனர் அதிரை கப்ர் வணங்கிகள்.
அனைவராலும் எதிர்க்கப்படும் கப்ர் வணக்கம்:
ஒரு காலத்தில் அல்லாஹ்விடம் மட்டும் கேளுங்கள் என்றால் அடித்து துவைத்து விடுவார்கள். ஆனால், இன்று கப்ர் வணக்கத்தை நமதூரில் உள்ள மக்களில் 95 சதவீத்தினர் எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
ஒரு நாள்:
இன்ஷா அல்லாஹ், இந்த கப்ர் வணக்கம் ஒரு நாள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
புது கப்ருக்கு எதிர்ப்பு, பழைய கப்ருக்கு ஆதரவு (?):
புதிதாக முளைத்துள்ள இந்த கப்ருக்கு நமது ஊரில் உள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு காட்டியுள்ளார்கள். பாராட்ட வேண்டிய விஷயம். ஆனால், ஏற்கனவே, ஒரு சில பள்ளிவாசல் வளாகத்திலேயே கப்ர் உள்ளது. இதை இவர்கள் எதிர்ப்பதாக தெரியவில்லை. அது மட்டுமல்லாமல், அந்த பள்ளிகளிலேயே இவர்கள், ஷிர்க் வைக்கும் இமாமை பின்பற்றி தொழுது வருகிறார்கள். இது இரட்டை முகமான செயல் என்பதில் சந்தேகம் இல்லை. இவற்றையும் எதிர்ப்பது உடன், இவர்களை பின்பற்றி தொழுவதையும் தவிர்க்க வேண்டும்.
கப்ர் வணக்கத்தை வளர்க்கும் இரு மதரஸாக்கள்:
கப்ர் வணக்கத்தை எதிர்க்கும் நம்மில் சிலர் ஏதோ ஒரு சிலர் அறியாமல் கப்ர் வணக்கத்தில் ஈடுபடுகிறார்கள் என்று நம்புகிறார்கள். நமது ஊரில் கப்ர் வணக்கத்தை வளர்ப்பதே இரு மதரஸாக்கள் தான். இந்த மதரஸாக்களில் ஓதியவர்கள் தான் தர்ஹாக்களில் பாத்திஹா ஓதி இணைவைப்பு காரியத்தை ஆரம்பித்து வைக்கிறார்கள். சிலர் இவற்றை ஆதரித்து கொண்டு, கப்ர் வணக்கத்தை எதிர்க்கிறார்கள். இந்த மதரஸாக்களை ஒழிக்காத வரை கப்ர் வணக்கம் ஒழியாது.
யார் சொன்னது இந்த மதரஸாக்கள் தான் கப்ர் வணக்கத்தை போதிக்கிறது என்று யாராவது வாதம் செய்வார்களானால், அவர்களுக்கு நாம் விடும் சவால் இது தான். இந்த மதரஸாக்களில் தர்ஹா கட்டுவது, அதில் போய் முட்டுவது, தர்ஹாவில் கச்சேரி வைத்து, அதில் 'கொய்யா காய்க்கு ஆசைப்பட்டு, கொலுந்தநாரை வைச்சு கிட்டேன்' என்று சினிமா பாட்டு பாடி அவ்லியாவை தரிசிப்பது இது எல்லாம் தவறு என்று பகிரங்கமாக அறிவிக்க சொல்லுங்கள் (கியாமத் நாள் வரை இது மட்டும் நடக்காது).
தர்காக்கள் உருவான விதம் அல்லாஹ் நமக்கு விளங்க வைத்த ஏற்பாடு !
வயிற்று பிழைப்புக்காக மார்க்கத்தை விற்கும் சுயநலவாதிகளே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் .
ரசூலுல்லாஹ் அடக்கஸ்தலத்தை தானே வணக்கஸ்தலமாக ஆக்க கூடாது என்று சொன்னார்கள் .நாங்கள் எங்கே அடக்கஸ்தலத்தை வணக்கஸ்தலமாக ஆக்கினோம் வெறும் தரிசு தானே என்று சொல்லி தப்பிக்க முடியாது
நன்றி : http://www.adiraitntj.com/2013/01/blog-post_27.html
சிர்க்கென்ற் தெரிந்திருந்தும்.
ReplyDeleteபுதிய புதிய கபுரை ஏற்ப்படுத்தி இஸ்லாத்திற்கே களங்கம் விளைவிக்கும் இந்த கபுரை வைக்க ஒருபோதும் அனுமதிக்க கூடாது தக்க நடவடிக்கை எடுத்து. ஆரம்பத்திலேயே நீக்கி விடுவது. நல்லது.
வயிற்று பிழைப்புக்காக மார்க்கத்தை விற்கும் சுயநலவாதிகளே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் .
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteமக்கள் எங்கோ போய்க் கொண்டிருக்கின்றனர்.
K.M.A. JAMAL MOHAMED., Consumer & Human Rights.
த.பெ., மர்ஹும். கோ.மு. முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.