.

Pages

Monday, January 28, 2013

காதிர் முகைதீன் கல்லூரியில் வேலை வாய்ப்பு சிறப்புப் பயிற்சி !


அதிரை காதிர் முகைதீன் கல்லூரி கணினித்துறையில் 'கிராமப்புறங்களுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு' இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அடையாளம் காணுதல் நிகழ்ச்சி தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் உதவியுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின் நிரல்...

1. காதிர் முகைதீன் கல்லூரி செயலர் ஹாஜி கே.எஸ். சரபுதீன் அவர்கள் தலைமை தாங்கினார்.

2. கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் துவக்கி வைத்து நிகழ்வின் முக்கியத்துவம் மற்றும் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

3. கணினி அறிவியல் பேராசிரியர் ஏ. சேக் அப்துல் காதர் வேலை வாய்ப்பு உலகளாவிய நிலையிலும், நாட்டின் அளவிலும் எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றியும், இளைஞர்கள் எவ்வாறு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் அறிவுறுத்தினார்.

4. முன்னாள் ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் எஸ். பர்கத் நிறைவு விழாப் பேரூரை ஆற்றி, பங்கு பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். 

5. முன்னதாக கணினி துறைத்தலைவர் முனைவர் என்.செயவீரன் வரவேற்புரை வழங்கினார்.

6. கணினித்துறை பேராசிரியர் முனைவர் ஜே. சொக்கலிங்கம் நன்றியுரை கூறினார். 

விழாவில் பல துறைகளைச் சார்ந்த துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள், அலுவலக, ஆய்வகப் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதிகளவில் கிராமங்களைச் சேர்ந்த முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றது குறிப்பிடத்தக்கது.






1 comment:

  1. பயனுள்ள தகவல் பதிந்தமைக்கு நன்றி..!

    புகைப்படங்களும் அருமை.

    மாணவர்களுக்கு பெரிதும் பயன்படக்கூடியது. இப்படி சந்தர்ப்பங்களை பயன் படுத்திக்கொள்ளவும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.