மின்னணு வாக்கு இயந்திர எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கோரிக்கை முழக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில், அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஏ.ஜெ ஜியாவுதீன் தலைமை வகித்து, கண்டன உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில், பெண்கள் உள்பட திரளானோர் கலந்துகொண்டு, 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை திரும்பப்பெறு' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகையை கைகளில் ஏந்தியவாறு, தேர்தலில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்ய கோரியும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.