ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு உரிமை வழங்குவதை கண்டித்து, வேலைநிறுத்தம் நடைபெற்றது. தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்திய மருத்துவர் சங்கத்தின் பட்டுக்கோட்டை கிளைத் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.அன்பரசன் தலைமையில், டாக்டர்கள் அன்பழகன், பாலகிருஷ்ணன், சுப்பிரமணியன், கிளாடிஸ் காமராஜ், மகேஸ்வரி அன்பரசன், ஸ்ரீதர் பாபு, ராஜா ராமலிங்கம் ஆகியோர் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தரை வெள்ளிக்கிழமை அன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அம்மனுவில், "அறிவு சார்ந்த நவீன அறிவியல் மருத்துவத்தை உலகநாடுகள் பிரதானமாக ஏற்றுக்கொண்டு, நடைமுறையில் மிகச்சிறப்பாக மக்களின் சுகாதாரத்தை தொடர்ந்து பேணிக்காத்து வருகின்றனர். அறிவுசார் நவீன அறிவியல் அறுவை சிகிச்சை மருத்துவ படிப்பு மற்றும் பயிற்சி இன்றி (அடிப்படை தகுதியின்றி) மற்ற துறையினரை எடுத்துக்காட்டாக ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பது என்பது, பொது மக்களுக்கு கேடு விளைவிக்கும் செயலாகும் என்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவத் துறையின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்கும் செயலாகும். எனவே மக்கள் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இதனை அரசு அனுமதிக்கக் கூடாது" இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ சங்கத்தின் அறைகூவலை ஏற்று, பட்டுக்கோட்டையில் மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மட்டும் பொதுமக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.