.

Pages

Saturday, December 5, 2020

பட்டுக்கோட்டை வட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து ஆட்சியர் ஆய்வு (படங்கள்)


அதிரை நியூஸ்: டிச.05பட்டுக்கோட்டை வட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் (04.12.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பட்டுக்கோட்டை வட்டம், கரம்பயத்தில் மழை நீர் சூழ்ந்த பயிர்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தேங்கியிருந்த மழைநீர் வடிகால் மூலம் வெளியேற்றப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார். பின்னர், பட்டுக்கோட்டை வட்டம், கார்காவயலில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் அருகிலுள்ள சாலையில் தேங்கியிருந்த மழைநீர் வெளியேற்றப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார். 

அதன் பின்னர், ஆண்டிகாடு குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் வெளியேற்றப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார். தொடர்ந்து, கொள்ளுக்காடு பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் அங்கு அளிக்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

இவ்வாய்வுகளின் போது பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜஸ்டின், கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.