.

Pages

Monday, December 28, 2020

பட்டுக்கோட்டை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு!


அதிரை நியூஸ், டிச.28

தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் (27.12.2020) நேரில் பார்வையிட்டு முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு சட்டமன்ற தொகுதிகளுக்கும், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிகளுக்கும், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் வாக்கு எண்ணப்படும் அறை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகு, வாக்குப்பதிவு அலகுää விவிபேட் அலகு ஆகியவை வைக்கப்படும் பாதுகாப்பு அறை, தேர்தல் பார்வையாளரின் அறைää ஊடக அறை, கழிவறை ஆகியவற்றை  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணப்படும் மையங்களில் முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் லண்டனிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 72 பயணிகள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 53 பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3 பயணிகளுக்கு நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட மூன்று நபர்களின் மாதிரிகள் மேல்பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  நோய்த்தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் கண்டறியப்பட்டு, வல்லம் கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்துகொண்டு, தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கைசுத்திகரிப்பான் பயன்படுத்துதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி, கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் விஜயன்,தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன, கும்பகோணம் வட்டாட்சியர் கண்ணன,பட்டுக்கோட்டை வட்டாட்சியர் திருமதி.தரணிகா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.






No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.