.

Pages

Wednesday, December 9, 2020

தேர்தலில் வாக்குச்சீட்டு முறை கோரி அதிராம்பட்டினத்தில் பிரச்சாரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.09
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் மின்னணு வாக்கு இயந்திர எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிராம்பட்டினத்தில் ஜமாத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக நல அமைப்பு நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வர்த்தகர்கள், தன்னார்வலர்கள் உளிட்டோரை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், அதிரை ஏ.ஜெ ஜியாவுதீன் தலைமையில், எதிர்வரும் 11-12-2020 அன்று மாலை அதிராம்பட்டினத்தில் நடைபெற இருக்கும் பேரணி மற்றும் கோரிக்கை முழக்க நிகழ்வுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இதில், சாந்தா சாகுல் ஹமீது, கிஜார் முகமது, அகமது அனஸ், காமில் உள்ளிட்ட மின்னணு வாக்கு இயந்திர எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.