மல்லிபட்டினம், ஏப்.12
மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன்.
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிபட்டினத்தில் திமுக தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கத்திற்கு ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் முகைதீன் மக்களிடம் வாக்குகள் சேகரித்து பேசியது;
மாநிலங்களின் உரிமைகளை நசுக்குகின்ற கொள்கைகளை பின்பற்றி வரும் நீங்கள் தமிழக மக்களிடம் ஓட்டு போடுங்கள் என வெட்கமில்லாமல் கேட்பது தமிழக மக்களை ஏமாளிகள் என நினைத்துள்ளார். தமிழ் நாட்டு மக்கள் ஒரு போதும் ஏமாறப் போவதில்லை. மத்தியில் நாளை ஆட்சி செய்யப்போகிற ராகுல் காந்தி அளித்திருக்கும் தேர்தல் அறிக்கையில், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் மீனவ சமுதாயத்தில் உருவாகும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மத்தியில் தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என கூறியிருக்கிறார். இதன் மூலம் மீனவ சமுதாயத்தில் நல்ல காலம் பிறக்கும் என்பதில் ஐயமில்லை. ஏழை, எளிய குடும்பங்களுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் வீதம், ஆண்டு ஒன்றுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவோம் என கூறியிருக்கிறார். ஏழ்மையைப் போக்க வேலை வாய்ப்புகளை கொடுத்திருக்க வேண்டும். வருமானத்தை பெருக்குவதற்கு வழிவகை செய்திருக்க வேண்டும். ஆனால், இன்றைய மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை போட்டு, குறைவாக வருவாய் ஈட்டி வந்த விவசாயிகள், சிறு, குறு தொழில் செய்யும் வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி வரியை மாற்றி அமைப்போம் என்று காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். மத்திய மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் சுமார் 4-1/2 கோடி மக்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். சென்னை, திருப்பூர், வேலூர், கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன.
வேலை வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கும் விதத்தில், நாட்டிலே தொழிற்கூடங்களை அதிகளவில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், படித்த இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு இலகுவாக விண்ணப்பித்து உரிமம் பெற முடியும் என்று ராகுல் காந்தி தேர்தல் அறிவிப்பில் கூறியிருக்கிறார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலான ஆட்சியும், 22 தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் ஆட்சி அமையும்' என்றார்.
மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன்.
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிபட்டினத்தில் திமுக தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கத்திற்கு ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் முகைதீன் மக்களிடம் வாக்குகள் சேகரித்து பேசியது;
மாநிலங்களின் உரிமைகளை நசுக்குகின்ற கொள்கைகளை பின்பற்றி வரும் நீங்கள் தமிழக மக்களிடம் ஓட்டு போடுங்கள் என வெட்கமில்லாமல் கேட்பது தமிழக மக்களை ஏமாளிகள் என நினைத்துள்ளார். தமிழ் நாட்டு மக்கள் ஒரு போதும் ஏமாறப் போவதில்லை. மத்தியில் நாளை ஆட்சி செய்யப்போகிற ராகுல் காந்தி அளித்திருக்கும் தேர்தல் அறிக்கையில், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் மீனவ சமுதாயத்தில் உருவாகும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மத்தியில் தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என கூறியிருக்கிறார். இதன் மூலம் மீனவ சமுதாயத்தில் நல்ல காலம் பிறக்கும் என்பதில் ஐயமில்லை. ஏழை, எளிய குடும்பங்களுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் வீதம், ஆண்டு ஒன்றுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவோம் என கூறியிருக்கிறார். ஏழ்மையைப் போக்க வேலை வாய்ப்புகளை கொடுத்திருக்க வேண்டும். வருமானத்தை பெருக்குவதற்கு வழிவகை செய்திருக்க வேண்டும். ஆனால், இன்றைய மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை போட்டு, குறைவாக வருவாய் ஈட்டி வந்த விவசாயிகள், சிறு, குறு தொழில் செய்யும் வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி வரியை மாற்றி அமைப்போம் என்று காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். மத்திய மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் சுமார் 4-1/2 கோடி மக்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். சென்னை, திருப்பூர், வேலூர், கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன.
வேலை வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கும் விதத்தில், நாட்டிலே தொழிற்கூடங்களை அதிகளவில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், படித்த இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு இலகுவாக விண்ணப்பித்து உரிமம் பெற முடியும் என்று ராகுல் காந்தி தேர்தல் அறிவிப்பில் கூறியிருக்கிறார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலான ஆட்சியும், 22 தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் ஆட்சி அமையும்' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.