.

Pages

Tuesday, April 30, 2019

அதிராம்பட்டினம் அருகே இறந்த விவசாயி கண்கள் தானம் (படங்கள்)

அதிராம்பட்டினம் ஏப்.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை  மேலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விநாயகத் தேவர் (வயது 88). விவசாயி. இவர் முதுமை காரணமாக இன்று செவ்வாய்கிழமை இயற்கை எய்தினார்.

இந்நிலையில், இவரது மனைவி ராஜட்சுமி, மகன்கள் ஜோதி, ராமலிங்கம், சுப்பிரமணியம், மகள்கள் பாலசுந்தரி, ஞானோதயம், கமலா ஆகியோர் விவசாயி விநாயகத் தேவர் விருப்பப்படி கண்களை தானம் செய்வதற்கு முன்வந்தனர்.

விவசாயி விநாயகத் தேவர் 
இதையடுத்து, அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் வ.விவேகானந்தம் தகவலின் பேரில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமையில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கச் செயலர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல், ஆர். மாரிமுத்து ஆகியோர் விரைந்து சென்று, இறந்த விவசாயி விநாயகத் தேவர் இரண்டு கண்களை தானமாகப் பெற்று கும்பகோணம் அரவிந்த் கண் வங்கிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், கண்களை தானமாக வழங்கிய விவசாயி விநாயகத் தேவர் குடும்பத்தினருக்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் நன்றி கூறினார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.