.

Pages

Thursday, April 11, 2019

தேர்தல் விழிப்புணர்வு பேரணி (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி தஞ்சை இரயில் நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை மாற்றுத்திறனாளிகளின் மாபெரும் விழிப்புணர்வு பேரணி இன்று (11.04.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

தஞ்சை இரயில் நிலையத்தில் தேர்தல் தொடர்பான மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ள 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் இருசக்கரவாகனங்களிலும் மற்றும் நடைப்பேரணியாகவும் 100 சதவீதம் ஓட்டு இந்தியர்களின் பெருமை, மாற்றுத்திறனாளியின் வாக்கு முதல் வாக்கு ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியும் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அனைவரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களித்து ஜனநாயக கடமையை செய்திட வேண்டும். இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன் உடனிருந்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.