பட்டுக்கோட்டை, ஏப்.29
காரைக்குடி - பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையே இரயில் சேவையை உடனடியாக துவங்க வேண்டும் - பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கம் கோரிக்கை.
பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் கூட்டம், பட்டுக்கோட்டை நிலா ஸ்கூலில் 27.04.2019 சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்க தலைவர் என். ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.லட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தார். பொருளாளர் பி. சுந்தரராஜூலு வரவேற்றார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
பாராளுமன்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இப்பகுதி இரயில் சம்பந்தமான கோரிக்கைகளை வைக்க முடிவு செய்யப்பட்டது.
காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, இரயில்வே பாதுகாப்பு ஆணையாளரின் சோதனை ஓட்ட ஆய்வுகள் முடிவடைந்தும், இத்தடத்தில் இரயில் சேவை தொடங்கப்படவில்லை. எனவே இத்தடத்தில் சென்னைக்கு இரவு நேர விரைவு இரயில் சேவையை துவங்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலும், இரவு நேரங்களில் சென்னைக்கு செல்லும் இரயில்களுக்கு இணைப்பு இரயில்களாக பயன்படும் வகையில் பயணிகள் இரயில்களை இயக்க வேண்டும்.
பட்டுக்கோட்டை இரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதியினை ஏற்பாடு செய்து தர வேண்டும்.
அண்ணா நகர் மற்றும் இசபெல் பள்ளிக்கூடத்திற்கு இடையில் இரயில் பாதைக்கு கீழ் உடனடியாக, பள்ளிக்கூடம் துவங்கும் முன், விடுமுறை காலத்தில் தரைப்பாலம் அமைக்க வேண்டும்.
கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து அதிராம்பட்டினம் இரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. இச்சாலையை இரயில் சேவை துவங்குவதற்கு முன் சரி செய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை இரயில்வே நிர்வாகம் நிறைவேற்ற, பட்டுக்கோட்டை பகுதியில் தெருமுனை பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் கலியபெருமாள், சுப்பிரமணி, நஜ்முதீன், இராசேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். முடிவில் செயலாளர் வ. விவேகானந்தம் நன்றி கூறினார்.
காரைக்குடி - பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையே இரயில் சேவையை உடனடியாக துவங்க வேண்டும் - பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கம் கோரிக்கை.
பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் கூட்டம், பட்டுக்கோட்டை நிலா ஸ்கூலில் 27.04.2019 சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்க தலைவர் என். ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.லட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தார். பொருளாளர் பி. சுந்தரராஜூலு வரவேற்றார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
பாராளுமன்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இப்பகுதி இரயில் சம்பந்தமான கோரிக்கைகளை வைக்க முடிவு செய்யப்பட்டது.
காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, இரயில்வே பாதுகாப்பு ஆணையாளரின் சோதனை ஓட்ட ஆய்வுகள் முடிவடைந்தும், இத்தடத்தில் இரயில் சேவை தொடங்கப்படவில்லை. எனவே இத்தடத்தில் சென்னைக்கு இரவு நேர விரைவு இரயில் சேவையை துவங்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலும், இரவு நேரங்களில் சென்னைக்கு செல்லும் இரயில்களுக்கு இணைப்பு இரயில்களாக பயன்படும் வகையில் பயணிகள் இரயில்களை இயக்க வேண்டும்.
பட்டுக்கோட்டை இரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதியினை ஏற்பாடு செய்து தர வேண்டும்.
அண்ணா நகர் மற்றும் இசபெல் பள்ளிக்கூடத்திற்கு இடையில் இரயில் பாதைக்கு கீழ் உடனடியாக, பள்ளிக்கூடம் துவங்கும் முன், விடுமுறை காலத்தில் தரைப்பாலம் அமைக்க வேண்டும்.
கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து அதிராம்பட்டினம் இரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. இச்சாலையை இரயில் சேவை துவங்குவதற்கு முன் சரி செய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை இரயில்வே நிர்வாகம் நிறைவேற்ற, பட்டுக்கோட்டை பகுதியில் தெருமுனை பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் கலியபெருமாள், சுப்பிரமணி, நஜ்முதீன், இராசேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். முடிவில் செயலாளர் வ. விவேகானந்தம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.