தஞ்சாவூர், ஏப்.25
தஞ்சாவூர் மாவட்டம். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் இன்று (25,04,2019) நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது;
இந்தியப் பெருங்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையத்திலிருந்து தகவல் வரப்பெற்றுள்ளது, இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இந்தியப் பெருங்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்புடைய அலுவலர்கள் செய்திட வேண்டும்,
அனைத்து மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அவர்களின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் இயற்கை போpடர் முன்னெச்சாpக்கை தகவல்களை அறிந்துகொள்ள ஏதுவாக TNSMART என்ற செயலியை தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும், மாவட்ட நிலை அலுவலர்கள், இரண்டாம் நிலை மற்றும் கள அலுவலர்கள் அனைவரும் விடுமுறை நாட்களிலும் அவர்களது தலைமையிடத்தில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும், வருவாய் கோட்ட அலுவலர்கள் மற்றும் வட்ட அலுவலகங்களில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி அதில் பணியாளர்களை முழுநேரமும் இருக்குமாறு முறைப்பணியில் பணியாற்ற வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 புதிய பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள். 8 இதர புயல் பாதுகாப்பு மையங்கள் ஆகியவற்றை புயல் நேரத்தில் பொதுமக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், புயல் பாதுகாப்பு மையங்களில் மின் விநியோகம். குடிநீர் விநியோகம் ஆகியவற்றை சீர் செய்து ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக் கட்டடங்களிலும் அவசர காலத்தில் பொதுமக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக அவற்றை சுத்தம் செய்து. குடிநீர் மற்றும் மின்சாரம் தடையில்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், புயலினால் விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்திட ஏதுவாக மரம் அறுக்கும் கருவிகள் மற்றும் JCB இயந்திரங்களை அந்தந்த வட்டங்களில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். புயலினால் சாய்ந்து விழும் மின்கம்பங்களை சீர் செய்யத் தேவையான பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். புயலினால் மின்தடை ஏற்படும்பட்சத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளில் நீர் ஏற்ற ஏதுவாக Power Generator-களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
புயல் எச்சரிக்கை அறிவிக்கப்படும் சமயத்தில் மீனவர்கள் எவரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியிலிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை பேசினார்,
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன். கஜா புயல் மறு சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு கூடுதல் திட்ட இயக்குநர் ராஜகோபால் சுங்காரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் இன்று (25,04,2019) நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது;
இந்தியப் பெருங்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையத்திலிருந்து தகவல் வரப்பெற்றுள்ளது, இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இந்தியப் பெருங்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்புடைய அலுவலர்கள் செய்திட வேண்டும்,
அனைத்து மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அவர்களின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் இயற்கை போpடர் முன்னெச்சாpக்கை தகவல்களை அறிந்துகொள்ள ஏதுவாக TNSMART என்ற செயலியை தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும், மாவட்ட நிலை அலுவலர்கள், இரண்டாம் நிலை மற்றும் கள அலுவலர்கள் அனைவரும் விடுமுறை நாட்களிலும் அவர்களது தலைமையிடத்தில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும், வருவாய் கோட்ட அலுவலர்கள் மற்றும் வட்ட அலுவலகங்களில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி அதில் பணியாளர்களை முழுநேரமும் இருக்குமாறு முறைப்பணியில் பணியாற்ற வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 புதிய பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள். 8 இதர புயல் பாதுகாப்பு மையங்கள் ஆகியவற்றை புயல் நேரத்தில் பொதுமக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், புயல் பாதுகாப்பு மையங்களில் மின் விநியோகம். குடிநீர் விநியோகம் ஆகியவற்றை சீர் செய்து ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக் கட்டடங்களிலும் அவசர காலத்தில் பொதுமக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக அவற்றை சுத்தம் செய்து. குடிநீர் மற்றும் மின்சாரம் தடையில்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், புயலினால் விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்திட ஏதுவாக மரம் அறுக்கும் கருவிகள் மற்றும் JCB இயந்திரங்களை அந்தந்த வட்டங்களில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். புயலினால் சாய்ந்து விழும் மின்கம்பங்களை சீர் செய்யத் தேவையான பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். புயலினால் மின்தடை ஏற்படும்பட்சத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளில் நீர் ஏற்ற ஏதுவாக Power Generator-களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
புயல் எச்சரிக்கை அறிவிக்கப்படும் சமயத்தில் மீனவர்கள் எவரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியிலிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை பேசினார்,
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன். கஜா புயல் மறு சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு கூடுதல் திட்ட இயக்குநர் ராஜகோபால் சுங்காரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.