அதிராம்பட்டினம், ஏப்.11
தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில், எஸ்.எஸ் பழனி மாணிக்கம், தமாகா சார்பில் என்.ஆர் நடராஜன், அமமுக சார்பில் பொ.முருகேசன் ஆகியோர் மோதுகின்றனர்.
இந்நிலையில், தஞ்சை தொகுதிக்கு உட்பட்ட மதுக்கூர், பட்டுக்கோட்டை ஒன்றியப் பகுதி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கும் பணிகளில் திமுக வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கம் இன்று வியாழக்கிழமை ஈடுபட்டார். அப்போது, தொகுதி மக்களுக்கு வேட்பாளர் அளிக்கும் வாக்குறுதிகள் என்ன?, திருவாரூர் ~ பட்டுக்கோட்டை வழித்தடத்தில் ரயில் சேவை தொடக்கம் எப்போது?, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி நீர்நிலை ஆதாரங்களை அதிகரிக்கும் நடவடிக்கைகள் என்ன?, அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் முன்பதிவுக் கூடம் அமைப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கம் அளித்த பதில் (இணைப்பில் வீடியோ)
அப்போது, திமுக பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஏனாதி. பாலசுப்பிரமணியம், கா. அண்ணாதுரை, அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் பெருந்தலைவர் எஸ்.எச் அஸ்லம் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில், எஸ்.எஸ் பழனி மாணிக்கம், தமாகா சார்பில் என்.ஆர் நடராஜன், அமமுக சார்பில் பொ.முருகேசன் ஆகியோர் மோதுகின்றனர்.
இந்நிலையில், தஞ்சை தொகுதிக்கு உட்பட்ட மதுக்கூர், பட்டுக்கோட்டை ஒன்றியப் பகுதி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கும் பணிகளில் திமுக வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கம் இன்று வியாழக்கிழமை ஈடுபட்டார். அப்போது, தொகுதி மக்களுக்கு வேட்பாளர் அளிக்கும் வாக்குறுதிகள் என்ன?, திருவாரூர் ~ பட்டுக்கோட்டை வழித்தடத்தில் ரயில் சேவை தொடக்கம் எப்போது?, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி நீர்நிலை ஆதாரங்களை அதிகரிக்கும் நடவடிக்கைகள் என்ன?, அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் முன்பதிவுக் கூடம் அமைப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கம் அளித்த பதில் (இணைப்பில் வீடியோ)
அப்போது, திமுக பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஏனாதி. பாலசுப்பிரமணியம், கா. அண்ணாதுரை, அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் பெருந்தலைவர் எஸ்.எச் அஸ்லம் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.