அதிரை நியூஸ்: ஏப்.25
தென் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை எதிர்வரும் ஏப். 27, 28 தேதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயலாக) உருவாகி தமிழக கடற்கரையை நோக்கி நகரும், இந்தப் புயல் தமிழக கடற்கரை வழியாக கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது இதனால் எதிர்வரும் ஏப். 27, 28, 29 ஆகிய நாட்களில் பலத்த மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது தமிழகத்தை கடும் வெயில் வாட்டி வருவதுடன் நீர்நிலைகளும் காய்ந்து வறண்டு போயுள்ளன. கடந்தமுறை கர்நாடக மாநிலம் திறந்துவிட்ட காவிரி நீரும் கடைமடை பகுதிக்குள் நுழையாதவாறு கவனமாக கடலில் கொண்டு சேர்க்கப்பட்ட அவலத்தையும் அறிவோம். எனவே கடைமடை பகுதியினர் காவிரி நீரை எதிர்பார்த்திருப்பது அறிவீனம்.
இந்நிலையில், நம் கையே நமக்கு உதவி என்ற அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் 27, 28, 29 ஆகிய தேதிகளில் பெய்யலாம் என எதிர்பார்க்கப்படும் மழைநீரை பத்திரமாக சேமிப்பது நமது கடமை என உணர்வோம், குளம் குட்டைகளில், நிலத்தடியில் நீரை சேமிப்போம். புனித ரமலான் மாதத்திற்கும், எஞ்சியுள்ள கோடைகாலத்தை சமாளிப்பதற்கு இந்த மழைநீர் மிக மிக அவசியம்.
தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுமுறையில் உள்ளனர், இவர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ள அதிரை முஹல்லா ஜமாத்துகளும் பொதுசேவை அமைப்புக்களும் முன்வர வேண்டும். மழைக்கு முன் நீர்நிலைகளுக்கு மழைநீர் வரும் பாதைகளை கண்டறிந்து செப்பனிட தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டினரும் தாமாக முன்வந்து மழைநீர் சேகரிப்புக்கான கட்டமைப்புக்களை எற்படுத்திட விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்வதுடன் நிழல் தரும், பயன் தரும் மரங்களை வளர்க்கவும் ஆர்வம் ஏற்படுத்த வேண்டும்.
மழைநீரை சேமிப்போம், கோடை வெப்பத்தை சமாளிப்போம், நிலத்தடி நீரை உயர்த்துவோம்.
மரம் வளர்ப்போம் மழைநீரை பெறுவோம்.
கஜா எனும் கோரப்புயலால் பாதிக்கப்பட்ட நாம் முன்னேற்பாடாக தேவையான அவசரகால உபகரணங்களை சேமித்து வைப்பதுடன் இந்த புயலால் மக்களுக்கு எத்தகைய பேரிடர்களும் ஏற்பட்டுவிடக்கூடாது என ஏகன் அல்லாஹ்விடம் தொழுது துஆச் செய்து வருவோமாக.
கோடையில் எப்போதும் மழைகள் பெய்து கொண்டிருக்காது என்பதை அறிந்துள்ள தெரு சங்கங்களும், முஹல்லா ஜமாத்துகளும், இளைஞர்களும், மாணவர்களும் விரைந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய அறிய தருணம் இது என்பதை மறவாதீர்.
குறிப்பு: அதிரையை மையப்படுத்தி பதிவு எழுதப்பட்டிருந்தாலும் அனைத்து ஊர்களுக்குமான பொதுவான பதிவே.
அக்கறையுடன்
அதிரை அமீன்
தென் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை எதிர்வரும் ஏப். 27, 28 தேதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயலாக) உருவாகி தமிழக கடற்கரையை நோக்கி நகரும், இந்தப் புயல் தமிழக கடற்கரை வழியாக கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது இதனால் எதிர்வரும் ஏப். 27, 28, 29 ஆகிய நாட்களில் பலத்த மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது தமிழகத்தை கடும் வெயில் வாட்டி வருவதுடன் நீர்நிலைகளும் காய்ந்து வறண்டு போயுள்ளன. கடந்தமுறை கர்நாடக மாநிலம் திறந்துவிட்ட காவிரி நீரும் கடைமடை பகுதிக்குள் நுழையாதவாறு கவனமாக கடலில் கொண்டு சேர்க்கப்பட்ட அவலத்தையும் அறிவோம். எனவே கடைமடை பகுதியினர் காவிரி நீரை எதிர்பார்த்திருப்பது அறிவீனம்.
இந்நிலையில், நம் கையே நமக்கு உதவி என்ற அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் 27, 28, 29 ஆகிய தேதிகளில் பெய்யலாம் என எதிர்பார்க்கப்படும் மழைநீரை பத்திரமாக சேமிப்பது நமது கடமை என உணர்வோம், குளம் குட்டைகளில், நிலத்தடியில் நீரை சேமிப்போம். புனித ரமலான் மாதத்திற்கும், எஞ்சியுள்ள கோடைகாலத்தை சமாளிப்பதற்கு இந்த மழைநீர் மிக மிக அவசியம்.
தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுமுறையில் உள்ளனர், இவர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ள அதிரை முஹல்லா ஜமாத்துகளும் பொதுசேவை அமைப்புக்களும் முன்வர வேண்டும். மழைக்கு முன் நீர்நிலைகளுக்கு மழைநீர் வரும் பாதைகளை கண்டறிந்து செப்பனிட தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டினரும் தாமாக முன்வந்து மழைநீர் சேகரிப்புக்கான கட்டமைப்புக்களை எற்படுத்திட விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்வதுடன் நிழல் தரும், பயன் தரும் மரங்களை வளர்க்கவும் ஆர்வம் ஏற்படுத்த வேண்டும்.
மழைநீரை சேமிப்போம், கோடை வெப்பத்தை சமாளிப்போம், நிலத்தடி நீரை உயர்த்துவோம்.
மரம் வளர்ப்போம் மழைநீரை பெறுவோம்.
கஜா எனும் கோரப்புயலால் பாதிக்கப்பட்ட நாம் முன்னேற்பாடாக தேவையான அவசரகால உபகரணங்களை சேமித்து வைப்பதுடன் இந்த புயலால் மக்களுக்கு எத்தகைய பேரிடர்களும் ஏற்பட்டுவிடக்கூடாது என ஏகன் அல்லாஹ்விடம் தொழுது துஆச் செய்து வருவோமாக.
கோடையில் எப்போதும் மழைகள் பெய்து கொண்டிருக்காது என்பதை அறிந்துள்ள தெரு சங்கங்களும், முஹல்லா ஜமாத்துகளும், இளைஞர்களும், மாணவர்களும் விரைந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய அறிய தருணம் இது என்பதை மறவாதீர்.
குறிப்பு: அதிரையை மையப்படுத்தி பதிவு எழுதப்பட்டிருந்தாலும் அனைத்து ஊர்களுக்குமான பொதுவான பதிவே.
அக்கறையுடன்
அதிரை அமீன்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.