![]() |
ஏ.எல் மெட்ரிக். பள்ளி |
அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சிஎம்பி லேன் ஏஎல் மெட்ரிக். பள்ளி வளாகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
கிராஅத்தை அடுத்து, தலைமை ஆசிரியை பஷீரா ஆண்டறிக்கை வாசித்தார். இந்நிகழ்வில், 11 ஆலிமாக்கள், 22 இல்லத்தரசியர் பட்டம் பெற்றனர்.
சிறப்பு அழைப்பாளராக காமிலா (A-Z) முஹைதீன் கலந்துகொண்டு, இறைவனையும் இறைத்தூதரையும் இறைமார்க்கத்தையும் தெரிந்துகொள்வதற்கு மார்க்க அறிவு என்பது எவ்வளவு கட்டாயமானது எனும் கருவில் உள்ளத்தில் உறைப்பது போன்ற சிறப்பான உரையொன்றை நிகழ்த்தினார்.
பட்டம் பெற்ற மணவியர், அகீதா எனும் கொள்கை விளக்கம் பற்றியும் புகழ்பெற்ற இமாம்களைப் பெற்ற அன்னையரின் தியாக வாழ்க்கை குறித்தும் ஈமான் எனும் இறைநம்பிக்கை, அறிவுக்கு ஒத்துவரவேண்டும் என்று நிபந்தனை வைப்பது மிகவும் ஆபத்தானது என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
இறுதியாக, ஸவ்தா அஹ்மது ஹாஜா, தற்கால இளம் பெண்கள் பலரின் வாழ்க்கை சீரழிந்து போவதற்கு, மார்க்கக் கல்வி இல்லாமையே காரணம் எனும் கருத்தோடு, அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி, மாணவிகளை எவ்வாறெல்லாம் செம்மைப்படுத்துகிறது என்று விளக்கமாக நிறைவுரையாற்றினார். துஆவோடும் மன நிறைவோடும் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.
செய்தி வெளியீடு: அதிரை தாருத் தவ்ஹீத்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.